காசாவில் 'உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம்' வேண்டும் – அழைப்பு விடுத்த ஐ.நா உரிமைகள் தலைவர்

ஜெனிவா,

இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 18வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் காசாவில் ‘உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம்’ வேண்டும் என ஐ.நா உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “முதல் படி உடனடி மனிதாபிமான போர் நிறுத்தமாக இருக்க வேண்டும், உடனடி மற்றும் பயனுள்ள மனிதாபிமான உதவிகளை வழங்குவதன் மூலம் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும். உலக தலைவர்கள் ஒன்று சேர்ந்து, அடிப்படை மனித நேயத்திற்குத் தேவையான துணிச்சலான மற்றும் மனிதாபிமானத் தேர்வுகளை எடுக்காத வரை இந்த வன்முறை ஒருபோதும் முடிவடையாது.

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவி தேவைப்பட்ட போதிலும், சர்வதேச சமூகம் சண்டையை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நோக்கி பிளவுபட்டுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, குறைந்தது 1,400 பேர் கொல்லப்பட்டனர், பெரும்பாலும் பொதுமக்கள், மற்றும் 200 க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை பிடித்து வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் தண்ணீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவு விநியோகங்களை நிறுத்தியுள்ளது.

மேலும் காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் குண்டுவீச்சு நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

“இரு தரப்பிலும்.. இந்தப் பகைமைகளின் விளைவாக, பல பொதுமக்கள் உயிர்கள், அவர்களில் குழந்தைகள் என ஏற்கனவே பலர் உயிரிழந்துள்ளனர்” என்று அதில் அவர் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.