The central government banned the separatist organization | பிரிவினைவாத அமைப்பை தடை செய்தது மத்திய அரசு

புதுடில்லி பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் தலைமையில், முஸ்லிம் லீக் ஜம்மு – காஷ்மீர் என்ற அமைப்பு இயங்கி வந்தது.

இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, இந்த அமைப்பை, உபா சட்டத்தின் கீழ் தடை செய்து, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, அமித் ஷா வெளியிட்ட அறிக்கையில், ‘முஸ்லிம் லீக் ஜம்மு — காஷ்மீர் அமைப்பு, பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பது மற்றும் ஜம்மு – காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ மக்களை துாண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால் அந்த அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.