
மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி
நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஏவிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனம் ஓடிடி தளத்திற்காக புதிய படம் ஒன்றை பர்ஸ்ட் காபி அடிப்படையில் தயாரிக்கின்றனர். இந்த படத்தை கோப்ரா பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இது பெண் முதன்மை கதாபாத்திரம் கொண்ட கதை என்பதால் இதில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.