படப்பிடிப்பு தளத்தில் நாற்காலி சண்டை : நடிகை சசிலயா மீது தாக்குதல்

டிக்-டாக் பிரபலமான சசிலயா தற்போது சின்னத்திரை, சினிமா என நடித்து வருகிறார். அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் நடித்து கொண்டிருந்த போது ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்தே சசிலயா தாக்கப்பட்டது போல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் ஷூட்டிங்கில் சசிலயா நடந்து கொண்டிருந்த போது, சசிலயா தனது சக நடிகைகளுடன் ஒரு சோபாவில் அமர்ந்திருக்கிறார். அப்போது சீரியல் நடிகை ஆர்த்தி ராம் இருக்க இடம் கேட்டபோது சண்டை எழுந்துள்ளது. அப்போது ஆர்த்தி ராம் சீனியர் நிற்க ஜூனியர் இடம் தராமல் உட்காரலாமா? என்று கூறி சசிலயாவை தாக்க பாய்ந்துள்ளார். இதனையடுத்து சக கலைஞர்களும் இயக்குநரும் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்த வீடியோவானது தற்போது வைரலாக பலரும் சசிலயாவுக்கு ஆதரவாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.