எனது மூன்று கனவுகளை நிறைவேற்றிய கேப்டன் மில்லர்: நிவேதிதா மகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை நிவேதிதா சதீஷ். மகளிர் மட்டும், வணக்கம், சில்லு கருப்பட்டி, இந்த நிலை மாறும், உடன்பிறப்பே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தற்போது 'கேப்டன் மில்லர்' எனும் பெரிய பட்ஜெட் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்திருப்பது குறித்து படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: இது எனக்கு ஒரு கனவு போல தோன்றுகிறது. வளர்ந்து வரும் நடிகையான எனக்கு இது மிகப்பெரிய மேடையாக இருக்கிறது. நான் நடிக்க வந்தபோது எனக்கு மூன்று பெரிய கனவுகள் இருந்தன. அதனை நான் எனது எல்லா நேர்காணல்களிலும் கூறி வந்திருக்கிறேன். முதல் கனவு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க வேண்டும். இரண்டாவது கனவு ஒரு பீரியட் பிலிமில் நடிக்க வேண்டும். மூன்றாவது கனவு தனுஷ் உடன் நடிக்க வேண்டும். எனது இந்த மூன்று கனவுகளையும் கேப்டன் மில்லர் நிறைவேற்றி தந்திருக்கிறார்.

இந்த படத்தில் அனைவருமே மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தோம். தனுஷ் மற்றும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பட்ட கஷ்டங்களை விட நாங்கள் பட்ட கஷ்டம் மிகவும் குறைவானது. எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் மிகப் பிரமாண்டமாக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். மிகப்பெரிய திருப்பம் தரும் படமாக இது அமையும் என்று நம்புகிறேன் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.