Cuba in severe economic crisis: increased fuel prices by 500 percent | கடும் பொருளாதார நெருக்கடியில் கியூபா: எரிபொருள் விலை 500 சதவீதம் உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஹவானா: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது,

இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் வில 25 பெசோவிலிருந்து 132 பெசோவாக உயர்கிறது. இது இந்திய மதிப்பில் ரூ 456 ஆகும்.

இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விளாடிமிர் ரெகுயிரோ கூறியதாவது, ‛ பெட்ரோல் விலையுடன் டீசல் விலையும் குறிப்பிட்ட அளவு அதிகரித்துள்ளது. மின்சாரக் கட்டணமும் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இயற்கை எரிவாயு கட்டணமும் கனிசமாக உயர்த்தப்பட்டுள்ளது’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இறக்குமதியை மட்டும் பெரும்பாலும் நம்பியுள்ள கியூபா நாட்டில் கடந்த நான்கு வருடங்களாக குறிப்பாக கோவிட் பரவலுக்கு பிறகு உணவு, மருந்து, மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் பணவீக்கம், கடும் விலைவாசி உயர்வு மற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளமின்மை போன்ற பிரச்னைகளை அந்நாடு சந்தித்து வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.