சாத்தூர்: சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
சாத்தூர் அருகே உள்ள சின்னகொல்லப்பட்டியில் காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள பயன்பாடு இல்லாத மோட்டார் அறை இன்று அதிகாலை வெடி விபத்தில் இடிந்து விழுந்தது. இது பற்றி தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த அறையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததும், தயரிப்பின் போது ஏற்பட்ட உராய்வில் வெடி விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.