புதுச்சேரி: சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதுச்சேரி அரசைக் கண்டித்து மார்ச் 8-ல் அதிமுக பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளது. இப்போராட்டம் புதுச்சேரி, காரைக்கால் உட்பட நான்கு பிராந்தியங்களிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். புதுவையில் திறக்கப்பட்டுள்ள ரெஸ்டோ பார்களில் கஞ்சா, ஹெராயின், எல்சிடி மாத்திரை என அனைத்து போதை வஸ்துகளும் தங்குதடையின்றி தாராளமாக கிடைக்கிறது. ரெஸ்டோ பார்களில் விடிய, விடிய இளைஞர்கள் கூட்டம் நடனம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு நடத்துகின்றனர்.போதை கும்பலால்தான் சீரழிவு தொடர்கிறது.