கனா சீரியலிலிருந்து வெளியேறிய தர்ஷனா

வெள்ளித்திரையில் வெளியான கனா படத்தின் கதையை மையமாக வைத்து சில மாற்றங்களுடன் கனா என்கிற சின்னத்திரை தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது. மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் தடகள வீராங்கனையாக சாதிக்க துடிக்கும் ஏழை கிராமத்து பெண் அன்பரசியாக தர்ஷனா அசோகன் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக விஷ்ணு உன்னி கிருஷ்ணன் ஹீரோவாக நடித்து வருகிறார். மக்களின் பேராதரவுடன் இந்த தொடர் 450 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், நாயகி தர்ஷனா திடீரென இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த செய்தியானது தர்ஷனாவின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.