Modi TN Visit: திறந்துவைத்து, பச்சைக்கொடி அசைத்த பிரதமர் மோடி; பாம்பன் பாலத்தைக் கடந்து சென்ற ரயில்!

இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து இன்று மதியம் 12.40 மணியளவில் ராமேஸ்வரம் வந்தார் பிரதமர் மோடி. தமிழக அரசு சார்பில் மோடியை வரவேற்ற ஆளுநர் ரவி, கம்பராமணம் புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.

சரியாக மதியம் 1 மணியளவில் பச்சைக் கொடி அசைத்து புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்தார். இதையடுத்து சிறப்பு ரயில் ஒன்று புதிய பாலத்தின் மீது ராமேஸ்வரம் நோக்கி சென்றது. இதனை தொடர்ந்து புதிய மற்றும் பழைய தூக்கு பாலங்கள் திறக்கப்பட்டு அதன் வழியாக கடலோரக் காவல்படை கப்பல் இரு பாலங்களையும் கடந்து சென்றது. இதனை பாம்பன் சாலை பாலத்தில் அமைக்கப்பட்ட மேடையின் மீது நின்றபடி பிரதமர் மோடி பார்வையிட்டார். இதன் நினைவாக பாம்பன் பாலத்தின் சிறிய வடிவைப்புப் பெட்டகம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது பிரதமர் மோடிக்கு.

புதியாக திறக்கப்பட்ட பாம்பன் பாலத்தில் சிறப்பு ரயில் ஓட்டம்

இதை முடித்துவிட்டு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகளைச் செய்யவிருக்கிறார். இதையடுத்து சில அரசியல் புள்ளிகள் உடனான சந்திப்பு நடைபெறவிருக்கிறது. மேலும், அடுத்தடுத்து சில திட்டங்களுக்கு அடிகல் நாட்டும் நிகழ்வுகளும், தமிழ்நாடு – ஆந்திரா எல்லையை இணைக்கும் நான்கு வழிச்சாலை திட்டத்தையும் திறந்து வைக்கவிருக்கிறார். இதை முடித்த கையோடு மதுரைக்குச் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.