Wifi பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை – உங்கள் பேங்க் பேலன்ஸ் காலியாகும்

Central Government Free WiFi Warning : பொது இடங்களில் இலவசமாக கிடைக்கும் வைஃபை சிக்னலை பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளது. இலவச வைஃபை மூலம் இமெயில் பார்ப்பது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியா கணக்குகளில் லாகின் செய்வது எல்லாம் மிகப்பெரிய ஆபத்தை கொண்டு வரும் என எச்சரிக்கை கொடுத்திருக்கும் மத்திய அரசு இதன் மூலம் உங்கள் வங்கி கணக்குகளின் தரவுகள் களவாடப்பட்டு, பேங்க் பேலன்ஸ் கூட உங்களுக்கு தெரியாமலேயே திருடப்பட்டகூடிய வாய்ப்புகளும் இருப்பதாக அறிவுறுத்தியுள்ளது. 

இப்போதெல்லாம் வாடிக்கையாளர்களை கவருவதற்காக விமான நிலையம், கஃபே மற்றும் மால் உள்ளிட்ட பல இடங்களில் இலவச வைஃபை கனெக்ஷன் கொடுக்கப்படுகிறது. இதை ஒரு வரப்பிரசாதமாக நினைத்து பலரும் மகிழ்ச்சியாக அந்த வைஃபை கணெக்ஷனை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் ஆபத்துகள் யாருக்கும் தெரிவதில்லை. இலவச வைஃபையைப் பயன்படுத்தினால், கவனமாக இருங்கள். இலவச பொது Wi-Fi வசதியாகத் தோன்றலாம். ஆனால், பல பொது வைஃபை நெட்வொர்க்குகள் பாதுகாப்பாக இல்லை, இதனால் ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு நீங்கள் எளிதான இலக்காக மாற வாய்ப்புகளுண்டு.

இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு, பொது வைஃபையைப் பயன்படுத்தி வங்கி அல்லது எந்தவொரு நிதி பரிவர்த்தனைகளையும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளது. இது உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கியில் இருக்கும் சேமிப்பு பணம் ஆகிய இரண்டிற்கும் இது பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

பொது வைஃபை ஏன் ஆபத்தானது?

பல பொது வைஃபை நெட்வொர்க்குகள் முற்றிலும் பாதுகாப்பானவை அல்ல என்று மத்திய அரசு கூறியுள்ளது. இத்தகைய நெட்வொர்க்குகள் ஹேக்கர்களுக்கு எளிதான இலக்காகின்றன. சைபர் குற்றவாளிகள் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மொபைல் சாதனத்தை அணுகி உங்கள் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களைத் திருடலாம். இது தரவு திருட்டு மற்றும் நிதி இழப்புக்கு வழிவகுக்கும்.

CERT-In ஆலோசனை

டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்த, இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In) ‘விழிப்புணர்வு தினத்தை’ முன்னிட்டு இந்த விழிப்புணர்வு தகவலை வெளியிட்டுள்ளது. பொது வைஃபை மூலம் வங்கி, ஆன்லைன் ஷாப்பிங் அல்லது எந்தவிதமான முக்கியமான செயல்பாடுகளையும் தவிர்க்க வேண்டும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

பொது வைஃபை மூலம் மின்னஞ்சல்களைச் சரிபார்ப்பது அல்லது சமூக ஊடகக் கணக்குகளில் உள்நுழைவதும் ஆபத்து. இதை கட்டாயம் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் பொது வைஃபை பயன்படுத்தும்போது உங்களின் பாஸ்வேர்டு ஹேக்கர்களால் திருடப்படும். தனிப்பட்ட தகவல்களும் திருடப்படும். 

பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

CERT-In சில எளிதான மற்றும் முக்கியமான பாதுகாப்பு நடைமுறை குறிப்புகளையும் ஆலோசனையில் பகிர்ந்துள்ளது. 

-தெரியாத LINK-களை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.
– அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் வலுவான மற்றும் நீண்ட கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும்.
– அனைத்து முக்கியமான பைல்களையும் தொடர்ந்து காப்புப் பிரதி (Backup) எடுக்கவும்.
-தெரியாத வைஃபை நெட்வொர்க்குடன் இணைத்த பிறகு, வங்கி அல்லது பணம் செலுத்துதல் தொடர்பான எந்த வேலையையும் செய்ய வேண்டாம்.

CERT-In என்பது இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஆகும். நாட்டில் சைபர் தாக்குதல்களைத் தடுப்பதும், டிஜிட்டல் இடத்தைப் பாதுகாப்பானதாக்குவதும் இதன் வேலை. எனவே, இந்த நிறுவனம் கொடுத்திருக்கும் முக்கியமான இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

மேலும் படிக | Unified Digital ID System: புதிய அரசாங்க போர்டல்… Aadhaar, PAN, Voter ID அனைத்தையும் ஒரே இடத்தில் அப்டேட் செய்யலாம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.