சேலம் மாவட்டத்தில் நில அளவை செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைவாசல் அருகே உள்ள காமக்காப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணையனின் நிலத்தை அளப்பதற்காக காமக்காபாளையம் கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் வேல்முருகன் ஆகியோர் ரூ.10,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்த விவசாயி கண்ணையனிடம் காவல் ஆய்வாளர்கள் முருகன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் […]
