‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்​தில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ள 10 ஆயிரம் முகாம்​களை​யும் பொது​மக்​கள் பயன்படுத்திக் கொள்ள வேண்​டும் என முதல்​வர் மு.க. ஸ்​டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். தமிழகத்​தில் உள்ள கடைக்​கோடி மக்​களுக்​கும், அவர்​கள் அன்​றாடம் அணுகும் அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை அவர்​கள் வசிக்​கும் பகு​திக்கே சென்று வழங்​கும் வகை​யில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ என்ற திட்​டம் தொடங்​கப்​பட​வுள்​ளது. இத்​திட்​டத்​தின் கீழ் நகர்​புறப் பகுதிகளில் 3,768, ஊரகப் பகு​தி​களில் 6,232 என 10 ஆயிரம் முகாம்​கள் நடை​பெற உள்​ளன.

அத்​துடன் முகாம்​களுக்கு வரு​கை​தரும் பொது​மக்​களின் உடல்​நலனைப் பேணும் வகை​யில், மருத்​துவ சேவை​களை வழங்க, மருத்​துவ முகாம்​களும் நடத்​தப்​படும். முகாம்​களில் பெறப்​படும் விண்​ணப்​பங்​கள் மீது 45 நாட்​களில் உரிய நடவடிக்கை மேற்​கொள்ள அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​தில் விடு​பட்​ட​வர்​களுக்​கு, ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​களில் மட்​டுமே விண்​ணப்​பங்​கள் வழங்​கப்​படும் எனவும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அந்த வகை​யில் கடந்த 7-ம் தேதி முதல் ஒவ்​வொரு வீட்​டுக்​கும் தன்​னார்​வலர்​கள் நேரடி​யாகச் சென்​று, முகாம் நடை​பெறும் நாள், இடம் குறித்த விவரங்​கள், அங்கு வழங்​கப்​பட​வுள்ள பல்​வேறு அரசு துறை​களின் திட்​டங்​கள், சேவை​களை விவரித்​து, அவற்​றில் பயனடைவதற்​கான தகு​தி​கள், தேவைப்​படும் ஆவணங்​கள் குறித்து தெரி​விப்​ப​தோடு தகவல் கையேட்​டை​யும், விண்​ணப்​பத்​தை​யும் வழங்கி வரு​கின்​றனர்.

இத்​தகைய முக்​கிய சேவை​கள் வழங்​கும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்​தை, வரும் 15-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சிதம்​பரத்​தில் தொடங்கி வைக்​க​வுள்​ளார். இதற்​காக சென்​னை​யில் இருந்து 14-ம் தேதி மாலை ராமேசுவரம் விரைவு ரயில் மூல​மாக முதல்​வர் சிதம்​பரம் செல்​கிறார்.

மறு​நாள் 15-ம் தேதி முகாமை சிதம்​பரம் நகராட்​சி​யில் தொடங்கி வைப்​ப​தோடு, 15 மற்​றும் 16-ம் தேதி​களில் மயி​லாடு​துறை மாவட்​டத்​தில் கள ஆய்வு நிகழ்ச்​சி​யில் கலந்​து​ கொண்டு பொது​மக்​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்கி முடிவுற்ற பணி​களை முதல்​வர் திறந்து வைக்​கிறார். அத்​துடன் புதிய திட்ட பணி​களுக்​கும் அவர் அடிக்​கல் நாட்​டு​கிறார்.

அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தல்: இதற்​கிடையே, முதற்​கட்​ட​மாக ஜூலை 15 முதல் ஆக.15-ம் தேதி வரை நடை​பெறவுள்ள 3,570 முகாம்​களுக்​கான பணி​களின் முன்​னேற்​றம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் காணொலி காட்சி மூலம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார், அரசின் திட்​டங்​கள் மற்​றும் சேவை​களை, பொது​மக்​களின் இருப்​பிடத்​துக்கு அருகிலேயே பெற்​றுக்​கொள்ள வசதி​யான அரசின் மிக முக்​கிய​மான முன்​னெடுப்பு இத்​திட்​டம். எனவே, இந்த முகாம்​களில் பெறப்​படும் மனுக்​கள் மீது சரி​யான தீர்வை வழங்​கும் வகை​யில் அர்ப்​பணிப்பு உணர்​வுடன் அனை​வரும் பணி​யாற்ற வேண்​டும். இவ்​வாறு அறி​வுறுத்​தி​னார்.

கூட்​டத்​தில், துணை முதல்​வர் உதயநி​தி, தலை​மைச் செய​லா​ளர் நா. முரு​கானந்​தம், முதல்​வரின் முகவரித் துறை செயலர் பெ.அ​மு​தா, நிதித் துறைச் செய​லா​ளர் த.உதயச்​சந்​திரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். முகாம்​கள் குறித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், தனது சமூக வலைதள பக்​கத்​தில், “பொது​மக்​கள் குறை​களைத் தீர்க்க அரசு அலு​வலர்​கள் வீடு​களுக்கே வந்து மனுக்​களைப் பெறு​வ​தோடு, நடை​பெறவுள்ள 10,000 ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​கள் மூலம் ஊரகப் பகு​தி​களில் 46 சேவை​களும், நகர்ப்​புறப் பகுதிகளில் 43 சேவை​களும் வழங்​கப்பட உள்​ளன. பொது​மக்​கள் அனை​வரும் இந்​தத் திட்​டத்​தைப் பயன்​படுத்​திக் கொள்ள வேண்டும்” என கேட்​டுக் கொண்​டுள்​ளார். இந்த மு​காம்​கள்​ நவம்​பர்​ மாதம்​ வரை நடை​பெற உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.