டெல்லியின் துவாரகா பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க கரண் தேவ் என்பவர் ஜூலை 13ம் தேதி அன்று வீட்டில் மின்சாரம் பாய்ந்து மூர்ச்சையானதாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மாதா ரூபராணி மாகோ மருத்துவமனை மருத்துவர்கள் அவர் இறந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து அவரது உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு கரண் தேவ் மனைவி சுஷ்மிதா தேவ் மற்றும் கரண் தேவுக்கு உறவுமுறையில் சகோதரரான ராகுல் தேவ் என்பவரும் மறுப்பு […]
