AI நம் வாழ்வின் துணையாக மாறும்: மார்க் ஜுக்கர்பெர்க்கின் டாப் 5 கணிப்புகள்

5 Predictions Of Mark Zuckerberg: மெட்டா (ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம்) தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவு (AI) பற்றி 5 பெரிய மற்றும் துணிச்சலான கணிப்புகளைச் செய்துள்ளார். சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஒரு தொலைதூர விஷயம் அல்ல என்றும், அது தினசரி வாழ்வில் ஒன்றிணைந்து செயல்படும் சகாப்தத்தை இப்போது நாம் அடைந்துவிட்டோம் என்று அவர் நம்புகிறார்.

1. சூப்பர் இன்டெலிஜென்ஸ் இனி ஒரு கற்பனை அல்ல

மனிதர்களால் உருவாக்கப்பட்ட சூப்பர் இன்டெலிஜென்ஸ் பற்றி இப்போது அனைவருக்கும் தெளிவாகப் புரியத் தொடங்குவதாக ஜுக்கர்பெர்க்கின் கூறுகிறார். இந்த தொழில்நுட்பம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், அதன் திசையும் வேகமும் விரைவில் இந்த தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றும் என்பதைக் குறிக்கிறது.

2. மெட்டாவின் கவனம் தனிப்பட்ட AI மீதுள்ளது

பல தொழில்நுட்ப நிறுவனங்கள் AI ஐப் பயன்படுத்தி அனைத்து வேலைகளையும் ஆடோமெடிக் மோடில் செய்வது பற்றி யோசித்து வருகின்றன. இந்த நிலையில், மெட்டா அனைவருக்கும் தனிப்பட்ட இலக்குகளை அடைய உதவி, அவர்களது வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் ஒரு  தனிப்பட்ட AI ஐ உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது என்று ஜுக்கர்பெர்க் கூறுகிறார். 

3. வேலையில் மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் AI உதவும்

வரவிருக்கும் காலங்களில், AI அலுவலக வேலை அல்லது உற்பத்தித்திறனுடன் மட்டுப்படுத்தப்படாது. மாறாக, அது நமது படைப்பாற்றல், உறவுகள், கற்றல் மற்றும் சுய வளர்ச்சிக்கும் உதவும் என்று ஜுக்கர்பெர்க் நம்புகிறார். இந்த AI நம் வாழ்வின் துணையாக மாறும்.

4. ஸ்மார்ட் கண்ணாடிகள் எதிர்காலத்தின் ஸ்மார்ட்போனாக இருக்கும்

எதிர்காலத்தில், AI ஒவ்வொரு கணமும் உங்களுடன் இருக்கும், நீங்கள் பார்ப்பதையும் கேட்பதையும் புரிந்துகொள்ளும் ஸ்மார்ட் கண்ணாடிகளில் அது இருக்கும். இதன் பொருள் இந்த சாதனங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை விட சூழல்-விழிப்புணர்வுடன் செயல்பட்டு அனைத்து அம்சங்களிலும் உதவியாக இருக்கும்.

5. பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தப்படும்

சூப்பர் இன்டெலிஜென்ஸின் ஆபத்துகளும் இருப்பதாக ஜுக்கர்பெர்க் ஒப்புக்கொண்டார். ஆனால் மெட்டா அதை பொறுப்புடன் உருவாக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். இந்த தொழில்நுட்பம் திறந்த அணுகலாக இருக்க வேண்டும் என்றும், முழு உலகமும் அதன் மூலம் பயனடைய வேண்டும் என்றும் அவர் விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்த தொழில்நுட்பத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை மெட்டா உருவாக்கும் திறன் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.