பெங்களூருவில் தெருநாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதித்த 4 வயது சிறுமி உயிரிழப்பு

பெங்​களூரு: பெங்​களூரு​வில் 4 வயது குழந்​தையை தெரு நாய் கடித்​த​தில் ரேபீஸ் நோய் தாக்​கி, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கர்​நாடக மாநிலத்​தில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது.

நிகழாண்​டில் ஜூலை வரை 2.81 லட்​சம் பேர் நாய்க்​கடிக்கு ஆளாகி​யுள்​ளனர். 26 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக புள்ளி விவரம் தெரிவிக்கின்​றது. எனவே தெரு​நாய்​களை கட்​டுப்​படுத்த வேண்​டும் என லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்​.​பாட்​டீல் அண்​மை​யில் உத்தர​விட்​டார்.

இதனிடையே கடந்த ஏப்​ரலில் பெங்​களூரு​வில் உள்ள தாவரகெரேவைச் சேர்ந்த கதிரா பானு (4) என்ற பெண் குழந்தை தனது வீட்டுக்கு வெளியே விளை​யாடிக் கொண்​டிருந்​தது. அப்​போது தெரு​நாய் கடித்​த​தால் அதிர்ச்சி அடைந்த பெற்​றோர் அரு​கிலுள்ள மருத்​து​வ​மனை​யில் குழந்​தையை சிகிச்​சைக்​காக அனு​ம​தித்​தனர்.

ஆனால் அடுத்த ஒரு மாதத்​தில் கதிரா பானுவுக்கு ரேபீஸ் நோய் பாதிப்பு ஏற்​பட்​டது. இதையடுத்து அவர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டு, ரூ.3 லட்​சத்​துக்​கும் அதி​க​மாக பண‌ம் செலவு செய்​யப்​பட்​டது.

ஆனால் உடல்​நிலை​யில் முன்​னேற்​றம் ஏற்​ப​டாத​தால் அந்த குழந்தை பெங்​களூரு ராஜீவ் காந்தி அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கா​திரா பானு நேற்று முன்தினம் இரவு பரி​தாப​மாக உயி​ரிழந்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.