சிறையில் இருந்தே கோப்புகளில் கையெழுத்திட்ட அவலம்: எதிர்க்கட்சிகள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கிண்டல்

கயா: சிறை​யில் இருந்து கொண்டே கோப்​பு​களில் கையெழுத்​திடப்​படும் சம்​பவங்​களை​யும் நாம் பார்த்​தோம் என எதிர்க்கட்சியினர் குறித்து பிரதமர் மோடி கிண்​டல் செய்​தார். சிறை​யில் 30 நாட்​கள் இருந்​தால் பிரதமர், முதல்​வர்​கள் மற்​றும் அமைச்​சர்​களை பதவி நீக்​கம் செய்​யும் மசோ​தாவை மத்​திய அரசு கொண்டு வந்​தது. இதை எதிர்க்​கட்​சிகள் கடுமை​யாக எதிர்த்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில் பிஹாரில் ரூ.13,000 கோடி மதிப்​பில் பல்​வேறு வளர்ச்சி திட்​டங்​களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து அடிக்​கல் நாட்​டி​னார். இதில் மின்​சா​ரம், சாலைகள், சுகா​தா​ரம், நகர்ப்​புற கட்​டமைப்பு மற்​றும் குடிநீர் விநி​யோக திட்​டங்​கள் அடங்கும்.

கயா மற்​றும் டெல்​லி, வைஷாலி மற்​றும் கோதெர்மா இடையே அம்​ரித் பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயிலை​யும் பிரதமர் மோடி தொடங்கி வைத்​து பேசி​ய​தாவது: ராஷ்ட்​ரிய ஜனதா ஆட்சி காலத்​தில் பிஹார் இருந்த நிலையை மக்​கள் நினைத்து பார்க்க வேண்​டும். ஒட்​டுமொத்த மாநிலத்​தை​யும் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் இருளில் தள்​ளியது. கல்​வி​யும் இல்​லை, வேலை​வாய்ப்​பும் இல்​லை. மக்​கள் வேலை வாய்ப்​புக்​காக இடம் பெயர்ந்து வந்​தனர். மக்​களை ஒட்டு வங்​கி​களாக மட்​டுமே ராஷ்ட்​ரிய ஜனதா தளம் பார்த்​தது.

பிஹார் மக்​களை உள்ளே விட மாட்​டோம் என காங்​கிரஸ் முதல்​வர் ஒரு​வர் கூறி​னார். அவரது மாநிலத்​தில் பிஹார் மக்​கள் நுழைய அவர் அனு​ம​திக்க மாட்​டார். பிஹார் மக்​கள் மீது காங்​கிரஸ் கொண்​டிருந்த வெறுப்பை யாரும் மறக்க முடி​யாது. பிஹார் இளைஞர்​களின் முன்​னேற்​றத்​துக்கு தே.ஜ கூட்​ட​ணி​தான் கடின​மாக உழைக்​கிறது.

அரசு துறை​களில் பணி​யாற்​றும் பியூன், ஓட்​டுநர், எழுத்​தர் போன்ற பணி​யாளர்​கள் 50 மணி நேரம் சிறை​யில் இருந்​தால், அவர் வேலையை இழக்க நேரிடு​கிறது. ஆனால், ஒரு முதல்​வரோ, அமைச்​சரோ, பிரதமரோ சிறை​யில் இருந்​தா​லும் அரசு பணி​யில் தொடர்​கிறார். சிறை​யில் இருந்தே கோப்​பு​கள் கையெழுத்​திட்ட அவலத்தை பார்த்​தோம்.

அரசி​யல் கட்சி தலை​வர்​கள் இது​போன்ற மனநிலை​யில் இருந்​தால், நாம் எப்​படி ஊழலுக்கு எதி​ராக போராட முடி​யும். ஊழலை ஒழிக்க தே.ஜ கூட்​டணி அரசு சட்​டம் கொண்டு வரு​கிறது. இதன் வரம்​புக்​குள் பிரதமரும் வரு​கிறார். ஆனால், காங்​கிரஸ், ராஷ்ட்​ரிய ஜனதா தளம் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இந்த புதிய சட்​டத்தை எதிர்க்​கின்​றன.

சிறை​யில் இருப்​பவர், அரசி​யல் சாசன பதவி​களில் எல்​லாம் தொடர முடி​யும் என ராஜேந்​திர பாபு போன்ற நம் முன்​னோர்​கள் கற்​பனை செய்து கூட பார்த்​திருக்க மாட்​டார்​கள். தவறு செய்​யும் தலை​வர்​கள் அதன் விளைவு​களை நினைத்து பயப்​படு​கின்​றனர்.

ஊடுரு​வல்​காரர்​களுக்கு பாது​காப்பு: நாட்​டுக்​குள் சட்​ட​விரோத​மாக ஊடுரு​விய​வர்​களை​யும், ஓட்டு வங்​கிக்​காக காங்​கிரஸ், ராஷ்ட்​ரிய ஜனதா தளம் போன்ற எதிர்க்​கட்​சிகள் பாது​காக்​கின்​றன. நாட்​டில் உள்ள இளைஞர்​களின் உரிமையை ஊடுரு​வல்​காரர்​கள் பறிக்க நாங்​கள் அனு​ம​திக்க முடி​யாது. அவர்​கள் அடை​யாளம் காணப்​படு​வதை நாங்​கள் உறுதி செய்​வோம். இந்த ஊடுரு​வல்​காரர்​கள் பற்றி பிஹார்​ மக்​கள்​ மிக​வும்​ கவன​முடன்​ இருக்​க வேண்​டும்​. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.