மருத்துவமனை இடமாற்றத்துக்கு சீமான் எதிர்ப்பு

சென்னை: நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வெளி​யிட்ட அறிக்​கை: திரு​வேற்​காடு, வீரராகவ புரத்​தில் செயல்​பட்டு வரும் அரசு ஆரம்​பச் சுகா​தார நிலை​யத்​துக்கு ஒவ்​வொரு வாரம் செவ்​வாய்க்​கிழமை​களில் 300-க்​கும் மேற்​பட்ட கர்ப்பிணி பெண்​களும், மற்ற நாட்​களில் 200-க்​கும் மேற்​பட்​டோரும் மருத்​துவ சிகிச்​சைக்​காக வந்து செல்​கின்​றனர்.

இந்த மருத்​து​வ​மனை ஆவடி – பூந்​தமல்லி நெடுஞ்​சாலை​யில் அமைந்​திருப்​ப​தால், திரு​வேற்​காடு நகராட்சி மக்​கள் மட்​டுமின்றி சுற்று​வட்​டாரத்​தில் உள்ள மேல்​பாக்​கம், கண்​ணப்​பாளை​யம் உள்​ளிட்ட பகுதி மக்​களும் எளி​தாக வந்து மருத்​து​வம் பெற வாய்ப்​பாக அமைந்​திருந்​தது.

இந்​நிலையில் கடந்த 2022-ல் ரூ.1.20 கோடி மதிப்​பீட்​டில் வீர​ராகவபுரத் தில் உள்ள நகர்ப்​புற ஆரம்​பச் சுகா​தார நிலை​யம் கட்ட தீர்​மானிக்கப்பட்டது. ஆனால் திடீரென இத்​திட்​டம் வீர​ராகவபுரத்​தில் இருந்து புளி​யம்​பேடு பகு​திக்கு மாற்​றப்​பட்​டு, அங்கு புதிய மருத்​து​வ​மனை கட்​டப்​பட்​டுள்​ளது.

இதனால் வீர​ராகவபுரத்​தில் பல ஆண்​டு​களாக செயல்​பட்டு வந்த மருத்​து​வ​மனை மூடப்​ப​டும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அப்​பகு​தி​யைச் சேர்ந்த பொது​மக்​களிடையே அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. எனவே தமிழக அரசு வீர​ராகவபுரத்​தில் செயல்​பட்டு வரும் ஆரம்​பச் சுகா​தார நிலை​யத்தை இடம் மாற்​றாமல் மக்​கள் பயன்​பெற தொடர்ந்து நடத்த வேண்​டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.