அனைத்து மதங்களையும் நம்​பு​கிறேன், மதிக்கிறேன்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் விளக்கம்

புதுடெல்லி: ​நான் அனைத்து மதங்​களை​யும் நம்​பு​கிறேன். அனைத்து மதங்​களை​யும் மதிக்​கிறேன் என்று உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரி​வித்​துள்​ளார். மத்​திய பிரதேசத்​தின் சத்​தர்​பூர் மாவட்​டத்​தில் கஜு​ராஹோ கோயில்​கள் அமைந்​துள்​ளன.

கடந்த 10, 11-ம் நூற்​றாண்​டில் சந்​தேல மன்​னர்​களால் இந்த கோயில்​கள் கட்​டப்​பட்​டன. கடந்த 12-ம் நூற்​றாண்​டின்​போது சுமார் 20 சதுர கிலோ மீட்​டர் பரப்​பள​வில் 85-க்​கும் மேற்​பட்ட கோயில்​கள் இருந்​த​தாக வரலாற்று பதிவு​கள் குறிப்​பிடு​கின்​றன. முகலாயர் ஆட்​சிக் காலத்​தில் கஹு​ராஹோ கோயில்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன.

இதன்​காரண​மாக தற்​போது 6 சதுர கிலோ மீட்​டர் பரப்​பள​வில் 25 கோயில்​கள் மட்​டுமே எஞ்சி உள்​ளன. இந்த சூழலில் கஜு​ராஹோ கோயில் வளாகத்​தின் ஒரு பகு​தி​யான ஜவாரி கோயி​லில் சேதமடைந்த நிலை​யில் உள்ள 7 அடி உயர விஷ்ணு சிலையை சீரமைக்க கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் ராகேஷ் தலால் என்​பவர் பொதுநல மனு தாக்​கல் செய்​தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், நீதிபதி அகஸ்​டின் ஜார்ஜ் மாசி அமர்வு கடந்த 16-ம் தேதி விசா​ரித்​தது.

அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் சஞ்​சய் எம் நூலி கூறும்​போது, “கஜு​ராஹோ​வின் ஜவாரி கோயி​லில் 7 அடி உயர விஷ்ணு சிலை உடைந்த நிலை​யில் இருக்​கிறது. நாடு சுதந்​திரம் அடைந்த பிறகும் விஷ்ணு சிலையை சீரமைக்க எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. தற்​போது ஜவாரி கோயில் இந்​திய தொல்​லியல் துறை (ஏஎஸ்ஐ) கட்​டுப்​பாட்​டில் உள்​ளது. எனவே விஷ்ணு சிலையை சீரமைக்க ஏஎஸ்​ஐ-க்கு உத்​தர​விட வேண்​டும்” என்று வாதிட்​டார்.

அப்​போது தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் கூறும்​போது, “சுய​விளம்பர நோக்​கத்​தில் வழக்கு தொடரப்​பட்டு இருக்​கிறது. நீங்​கள் (மனு​தா​ரர் ராகேஷ் தலால்) விஷ்ணு​வின் தீவிர பக்​தர் என்று கூறுகிறீர்​கள். நீங்​கள் நேரடி​யாக சென்று விஷ்ணு​விடம் பிரார்த்​தனை செய்​யுங்​கள். அந்த இடம் ஏஎஸ்ஐ கட்​டுப்​பாட்​டில் உள்​ளது.

மனுவை தள்​ளு​படி செய்​கிறோம்” என்று உத்​தர​விட்​டார். தலைமை நீதிபதி கவா​யின் கருத்து தொடர்​பாக சமூக ஊடகங்​களில் கடுமை​யான விமர்​சனங்​கள் பதிவு செய்​யப்​பட்டு வரு​கின்​றன. அவரது கருத்து மத உணர்​வு​களை புண்​படுத்​துகிறது என்று பெரும்​பாலானோர் கருத்து தெரி​வித்து உள்​ளனர்.

விஷ்ணு மற்​றும் சனாதன தர்​மத்​துக்கு எதி​ரான கருத்தை வாபஸ் பெற வேண்​டும் என்று ஏராள​மான வழக்​கறிஞர்​கள் தலைமை நீதிப​திக்கு கடிதம் எழுதி உள்​ளனர். பல்​வேறு மதத் தலை​வர்​களும் கடும் ஆட்​சேபம் தெரி​வித்து வரு​கின்​றனர். இதன்​காரண​மாக கஜு​ராஹோ கோயில் விவ​காரம் சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.

இந்த விவ​காரம் தொடர்​பாக தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் நேற்று ஒரு வழக்கு விசா​ரணை​யின்​போது விளக்​கம் அளித்​தார். அவர் கூறும்​போது, “கடந்த 16-ம் தேதி ஒரு வழக்​கில் உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது. சம்​பந்​தப்​பட்ட கோயில் ஏஎஸ்ஐ கட்​டுப்​பாட்​டில் இருக்​கிறது. இதை முன்​னிறுத்​தியே உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது. இந்த விவ​காரம் தற்​போது சமூக வலை​தளங்​களில் விவாதப் பொருளாகி உள்​ளது. நான் அனைத்து மதங்​களை​யும் நம்​பு​கிறேன். அனைத்து மதங்​களை​யும் மதிக்​கிறேன்” என்று தெரி​வித்​தார்.

அப்​போது மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்​போது, “ஒவ்​வொரு வினைக்​கும் எதிர்​வினை உண்​டு. இது நியூட்​டனின் 3-வது இயக்க விதி ஆகும். இப்​போது ஒவ்​வொரு வினைக்​கும் சமூக வலை​தளத்​தில் எதிர்​மறை​யான வினை கிளம்பி விடு​கிறது. தலைமை நீதிப​தியை எனக்கு 10 ஆண்​டு​களாக தெரி​யும். அவர் அனைத்து வழி​பாட்​டுத் தலங்​களுக்​கும் செல்​வார்​. அனைத்​து மதங்​களை​யும்​ மதிக்​கக்​கூடிய​வர்” என்​று தெரிவித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.