பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: ​பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் உள்ள ஒரு கிராமத்​தின் மீது அந்​நாட்டு விமானப் படை நடத்​திய தாக்​குதலில் அப்​பாவி மக்​கள் 30 பேர் உயி​ரிழந்​தனர். பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் தீவிர​வாத எதிர்ப்பு நடவடிக்​கை​யின் பெயரில் அந்​நாட்டு ராணுவம் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதில் அப்​பாவி மக்​கள் பலர் கொல்​லப்​படு​வ​தாக தொடர்ந்து புகார் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் இந்த மாகாணத்​தின் திரா பள்​ளத்​தாக்​கில் உள்ள மாட்ரே தாரா கிராமத்​தில் நேற்று அதி​காலை​யில் பாகிஸ்​தான் போர் விமானங்​கள் 8 குண்​டு​களை வீசி தாக்​குதல் நடத்​தின. இதில் பெண்​கள், குழந்​தைகள் உட்பட அப்​பாவி மக்​கள் 30 பேர் உயி​ரிழந்​தனர். தாக்​குதலில் பலர் காயம் அடைந்​தனர். அங்கு கட்​டிட இடி​பாடு​களை அகற்​றும் பணி தொடர்​கிறது. இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கலாம் என அஞ்​சப்​படு​கிறது.

இந்த தாக்​குதலுக்கு அந்​தப் பிராந்​தி​யம் முழு​வதும் கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது. சொந்த மக்​கள் மீதே பாகிஸ்​தான் ஆயுதங்​களை பிரயோகிப்​பது குறித்து சமூகத் தலை​வர்​கள் கேள்வி எழுப்​பி​யுள்​ளனர். கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் மேற்​கொள்​ளப்​படும் இந்த தாக்​குதல்​களில் பொது​மக்​களின் உயிர் மற்​றும் உடைமை​கள் குறித்து ராணுவம் அலட்​சி​யம் செய்​வ​தாக ஆம்​னெஸ்டி இன்​டெர்​நேஷனல் அமைப்பு குற்​றம் சாட்​டி​யுள்​ளது.

கைபர் பக்​துன்​கவா போலீ​ஸார் கூறுகை​யில், “இந்த மாகாணத்​தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 605 தீவிர​வாத சம்​பவங்​கள் நடந்​துள்​ளன. இதில் பொது​மக்​கள் 138 பேரும் 79 போலீ​ஸாரும் உயி​ரிழந்​துள்​ளனர். ஆகஸ்ட் மாதத்​தில் மட்​டும் 129 சம்​பவங்​களில் பாது​காப்பு படை​யினர் உள்​ளிட்ட பலர் இறந்​துள்​ளனர்’’ என்று தெரி​வித்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.