மாவட்ட கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்: பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல் 

சென்னை: அ​தி​முக பூத் கிளை அமைக்​கும் பணி நிறைவடைந்த நிலை​யில், அதற்​கென நியமிக்​கப்​பட்ட மாவட்ட பொறுப்​பாளர்​கள், அப்​பொறுப்​பு​களில் இருந்து விடுவிக்​கப்​படு​கின்​றனர். அவர்​கள் கட்​சிப் பணி​களில் ஈடு​படு​மாறு பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்குஉட்​பட்ட ஒன்​றிய, நகர, பேரூ​ராட்சி மற்​றும் மாநக​ராட்​சிப்பகு​தி​களில் பூத் கிளை அமைப்புகளை ஏற்படுத்துவ​தற்காக,மாவட்​டம்​வாரி​யாக பொறுப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்டு அப்​பணி​கள் முழு​மையடைந்​துள்​ளன. இந்​நிலை​யில், மாவட்​டப்பொறுப்​பாளர்​கள் அனை​வரும் அப்​பணி​யில் இருந்து விடுவிக்​கப்​படு​கிறார்​கள். இவர்​கள் தங்​கள் மாவட்டத்​துக்கு உட்​பட்ட, தாங்​கள் சார்ந்த சட்​டப்​பேரவை தொகு​திகளில்கட்​சிப் பணி​கள், தேர்​தல்பணி​களில் ஈடுபட வேண்​டும்.

சென்னை புறநகர், சேலம் மாநகர், கன்​னி​யாகுமரி மேற்கு ஆகிய மாவட்​டங்​களில் பூத் கிளை அமைக்​கும் பணி​கள் இன்​னும் நிறைவு​பெறாத​தால், அம்​மாவட்​டங்​களுக்கு நியமிக்​கப்​பட்​டுள்ள மாவட்​டப் பொறுப்​பாளர்​கள் தொடர்ந்து அப்​பணி​களை மேற்​கொள்​வார்​கள். பூத் கிளை நிர்​வாகி​கள் அனை​வரை​யும் ஆன்​லைனில் ஒருங்​கிணைத்​து, தேர்​தல் பணி​களை விரை​வாக மேற்​கொள்ள பயிற்சி அளிக்க தகவல் தொழில்​நுட்​பப் பிரிவைச் சேர்ந்த பொறுப்​பாளர்​களுக்​குத் தேவை​யான ஏற்​பாடு​களை​யும் செய்து கொடுத்​து, அவர்​களுக்கு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.