ரூ.8 கோடி மதிப்புள்ள 10 டன் செம்மரம் பறிமுதல்: டெல்லியில் 2 பேர் கைது

திருப்பதி: திருப்​பதி சேஷாசலம் வனப் பகு​தி​யில் இருந்து செம்​மரங்​களை வெட்டி கடத்​திச் சென்று டெல்​லி​யில் ஒரு குடோனில் பதுக்கி வைத்​திருப்​ப​தாக திருப்​பதி அதிரடிப்​படை எஸ்​.பி. ஸ்ரீநி​வாஸுக்கு ரகசிய தகவல் கிடைத்​து.

இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த ராஜ்கு​மார் என்​பவரை அதிரடிப் படை​யினர் பிடித்து விசா​ரித்​தனர். அவர் கொடுத்த தகவலின்​படி இன்​ஸ்​பெக்​டர் ஷேக் காதர் பாஷா தலை​மை​யில் சிறப்பு அதிரடிப் படை​யினர் டெல்லி சென்​றனர்.

அங்கு உள்ளூர் போலீஸார் உதவி​யுடன் ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.8 கோடி மதிப்​புள்ள 10 டன் செம்​மரங்​களை பறி​முதல் செய்​தனர். மேலும் முகமது இர்​பான், செம்மர கடத்​தல்​காரர் அமித் சம்​பத் பவார் ஆகியோரை திருப்​பதி போலீ​ஸார் கைது செய்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.