நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள குறவர் இன சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நரிக்குறவர்களை பழங்குடியினத்தில் சேர்ப்பதன் மூலம் அரசின் நலத்திட்டங்களை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.