கடற்படை அணிவகுப்பை பார்வையிட்டார் ஜனாதிபதி| Dinamalar

விசாகப்பட்டினம் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், விசாகப்பட்டினம் அருகே வங்காள விரிகுடாவில் நடந்த கடற்படை அணிவகுப்பை பார்வையிட்டார். நாட்டின், 75வது சுதந்திர தின ஆண்டு விழாவை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கடற்படையின் 75 ஆண்டு சேவையை குறிக்கும் வகையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே வங்காள விரிகுடா கடற்பகுதியில், கடற்படை அணிவகுப்பு நடந்தது.இதை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘ஐ.என்.எஸ்., சுமித்ரா’ போர் கப்பலில் சென்று பார்வையிட்டார். 50 போர் விமானங்கள்நான்கு வரிசைகளில் வந்த, 44 போர் கப்பல்களின் … Read more

அனுராக் காஷ்யப்பை சந்தித்த சசிகுமார்

தமிழ் சினிமாவில் 2008ல் வெளிவந்த 'சுப்பிரமணியபுரம்' படம் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் இயக்குனரும், நடிகருமான சசிகுமார். அப்படத்தைப் பார்த்து பல மொழி சினிமா பிரபலங்களும் பாராட்டினார்கள். பாலிவுட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் 'சுப்பிரமணியபுரம்' படத்தின் மிகப் பெரும் ரசிகரும் கூட. அப்படம் பற்றி பல சந்தர்ப்பங்களில் பெருமையாகப் பேசியுள்ளார். படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த போது, கடந்த 2018ம் வருடம் அவர் போட்ட பதிவு ஒன்றில் “கடந்த தசாப்தத்தின் எனது அபிமானத் … Read more

ஸ்டாலினுக்கு இலங்கை தமிழர் கட்சிகள் கடிதம்| Dinamalar

கொழும்பு : ‘இலங்கையில், தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் வழங்கும், 13வது திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் தலையிட வேண்டும்’ என, அண்டை நாடான இலங்கையை சேர்ந்த தமிழர் கட்சிகள், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளன. இலங்கை – இந்தியா இடையே, 1987ல் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில், அப்போது பிரதமராக இருந்த ராஜிவ், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே கையெழுத்திட்டனர்.இதன்படி, ‘இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் வழங்கப்படும்; மாகாண கவுன்சில் தேர்தல் நடத்துவது உள்ளிட்டவற்றை உறுதி … Read more

152 லஞ்ச அதிகாரிகளுக்கு ஒடிசாவில் கட்டாய ஓய்வு| Dinamalar

புவனேஸ்வர் : ஒடிசாவில் ஊழல் செய்த 152 அரசு அதிகாரி களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இங்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்தவர் திரிநாத் மிஸ்ரா.வருமானத்திற்கு அதிகமாக 9 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்டாக் குர்தா ஜாஜ்பூர் நபரங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திரிநாத் மிஸ்ராவுக்கு சொந்தமான சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத் துறை அடையாளம் கண்டுள்ளது.இதையடுத்து திரிநாத் மிஸ்ராவுக்கு கட்டாய ஓய்வு அளித்து ஒடிசா அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதே போல … Read more

எங்கள் குடும்பத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள்: மோகன்பாபு மகன் புகார்

நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்பாபு ஹீரோவாக நடித்த சன் ஆப் இந்தியா படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து ஏராளமான மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கிறது. அதோடு மோகன்பாபுவின் குடும்பத்தையும் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு எதிராக மீம்ஸ் போடுகிறவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், ஒவ்வொருவரிடமும் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கப்படும் என்று மோகன்பாபு குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து மோகன்பாபு மகனும், தெலுங்கு நடிகர் … Read more

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் | Dinamalar

புதுச்சேரி : ஆரோவில் சர்வதேச நகரில், அன்னை பிறந்த நாளில் துக்கத்தை வெளிப்படுத்துவதாக, ஆரோவில் குடியிருப்பாளர்களில் ஒரு பிரிவினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் ஆரோவில் சர்வதேச நகர் அமைந்துள்ளது. இந்நகரை அமைத்த அன்னை, பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 1878 பிப்., 21ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் மிர்ரா அன்போன்ஸா.அன்னையின் பிறந்த நாளையொட்டி, ஆரோவில் சர்வதேச நகர் முழுதும் நேற்று வண்ண விளக்குகளால் விழாக்கோலம் பூண்டது. பல்வேறு … Read more

என்.டி.பாலகிருஷ்ணா- ஸ்ருதிஹாசன் புதிய படம் தொடங்கியது

தெலுங்கின் முன்னணி நடிகரான பாலய்யா என்று அழைக்கப்படும் என்.டி.பாலகிருஷ்ணா நடித்த அகண்டா படம் கடந்து ஆண்டு வெளிவந்தது. இதனை போயபதி ஸ்ரீனு இயக்கி இருந்தார். படம் பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது. இதன்பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க போகிறார் என்று எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் வேறு புதிய படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். தெலுங்கானா மாநிலம் சிர்சில்லா நகரில் இந்த படத்திற்கான பூஜை நடந்தது. என்பிகே 107 என்று இப்போதைக்கு படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. … Read more

உக்ரைன் கிழக்கு மாகாணங்களை சுதந்திர நாடாக அங்கீகரித்தார் புடின்| Dinamalar

மாஸ்கோ: உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுக்கும் நோக்கத்துடன், அதன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை, ரஷ்யா நிறுத்தி உள்ளது. இதற்கு, அமெரிக்காவும், இதர ஐரோப்பிய நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு சொந்தமான டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய கிழக்கு மாகாணங்களில் ரஷ்ய ஆதரவு தலைவர்கள் தங்கள் மாகாணங்களை சுதந்திர நாடுகளாக … Read more

சமந்தாவின் 'சாகுந்தலம்' பர்ஸ்ட் லுக் வெளியீடு

காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'சாகுந்தலம்'. இப்படத்தை குணசேகரன் இயக்கியுள்ளார். சமந்தா இந்த படத்தில் சகுந்தலையாக நடித்துள்ளார். கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ்மோகன் நடித்துள்ளார்.இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்து வருகிறார். படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சமந்த வெள்ளை நிற உடையில் அடர்ந்த மரங்களுக்கு நடுவே அமர்ந்திருக்க, அவரை சுற்றி மான்கள், மயில்கள் கூட்டமாக இருப்பது போன்று … Read more