பிரிட்டன் ராணிக்கு கொரோனா தொற்று| Dinamalar

லண்டன்-ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத், 95, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோருக்கு இம்மாத துவக்கத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; இருவரும் அரண்மனையிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், ராணிக்கு லேசான அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரைவில் வழக்கமான பணிகளில் அவர் ஈடுபடுவார் என பகிங்ஹாம் அரண்மனை கூறியுள்ளது. … Read more

விமல் – விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விலங்கு' வெப் சீரியஸ் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் சரவணசக்தி இயக்கிவரும் புதிய படத்தில் விமலுடன் விஜய் சேதுபதி இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக வசனம் மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவுபெற்றுள்ளது.

கனடாவில் கல்லுாரிகள் மூடல் இந்திய மாணவர்கள் பாதிப்பு

ஒட்டவா:கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டம் நடப்பதால், கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்திய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வட அமெரிக்க நாடான கனடாவில், கொரோனா பரவலை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில், போராட்டம் நடந்து வருகிறது.கனடாவின் கியுபெக் மாகாணத்தில் உள்ள மூன்று கல்லுாரிகளில், இந்திய மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். பல மாணவர்கள், கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். போராட்டம் காரணமாக, இந்த கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் … Read more

அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ரஜினி?

ரஜினிகாந்தின் 169வது படத்தை நெல்சன் இயக்கப்போவதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மதத்திற்கு பிறகு துவங்க இருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்தின் 170வது படத்தை வலிமை படத்தை தயாரித்த போனிகபூர் மற்றும் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க உள்ளதாகவும் , இப்படத்தை கனா, நெஞ்சுக்கு நீதி படங்களின் இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்கப்போவதாக கூறப்படுகிறது.

டிரம்ப் பேச்சால் பார்லி.,யில் வன்முறை: நீதிமன்றம் கருத்து| Dinamalar

வாஷிங்டன்:’டொனால்டு டிரம்பின் வார்த்தைகள், ‘கேப்பிடோல்’ எனப்படும் பார்லி., கட்டடத்திற்குள் நடந்த வன்முறைகளுக்கு வழிவகுத்திருக்கக்கூடும்’ என, அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.அமெரிக்காவில், 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், போராட்டங்களில் குதித்தனர். புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதற்கு சில தினங்களுக்கு முன், டிரம்ப் ஆதரவாளர்கள், ‘கேப்பிடோல்’ எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்திற்குள் நுழைந்து பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த வன்முறை சம்பவத்திற்கு, டிரம்ப் … Read more

என்னை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இல்லை: கேரள கவர்னர்

திருவனந்தபுரம் : ”அரசாங்கத்தில் உள்ள யாருக்கும், கவர்னரை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது,” என, கேரள மாநில அரசை, கவர்னர் ஆரிப் முகமது கான் மறைமுகமாக எச்சரித்துள்ளார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையில், தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கவர்னர் ஆரிப் முகமது கான், மாநில … Read more

இளையராஜா எழுதிய பாடலை பாடிய யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் இளையராஜாவின் 1,417வது படமாக உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித், ஆர்.வி உதயகுமார், பி.எல.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பள்ளிப் பருவக் காதலை மையக்கருவாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திற்காக இளையராஜா 5 பாடல்களை உருவாக்கியுள்ளார். பழநிபாரதி ஒரு பாடலும், சினேகன் 3 பாடலையும் எழுத, இளையராஜாவும் ஒரு … Read more

பிரிட்டன் அரசிக்கு கோவிட் தொற்று| Dinamalar

லண்டன்: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்திற்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 95 வயதாகும் அரசி இரண்டாம் எலிசபெத்திற்கு கோவிட் உறுதியாகி உள்ளது. லேசான அறிகுறி மட்டுமே தென்படுகிறது. அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது. அனைத்து விதிமுறைகளையும் அரசி பின்பற்றுவார். அதேநேரத்தில் தனது கடைமைகளையும் அவர் பின்பற்றுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அரசியின் மகனான இளவரசர் சார்லஸ் மற்றும் … Read more

பழைய வாகனங்களுக்கு பதில் மின்சார வாகனங்கள்: டில்லி அரசு முடிவு| Dinamalar

புதுடில்லி: கடுமையான காற்று மாசுபாட்டை எதிர்த்து போராடும் வகையில், தலைநகர் டில்லியில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் பழைய வாகனங்களுக்கு பதில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வாங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டில்லி அரசின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பயணம் செய்வதற்காக 12 மின்சார வாகனங்களை மாநில பொதுநிர்வாகத்துறை வாங்கி உள்ளது. இது தொடர்பாக அந்த துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், தங்களது ஆயுட்காலத்தை முடிந்த வாகனங்களை கண்டறிந்து, பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கான … Read more

அமிதாப் உடன் நடிப்பு; கனவுபோல் இருப்பதாக பிரபாஸ் நெகிழ்ச்சி

நடிகர் பிரபாஸ் நடித்திருக்கும் ராதே ஷ்யாம் படம் வரும் மார்ச் 11ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், பாலிவுட்டில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ்-க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். பிரபாஸ் உடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனும் நடிக்க சம்மதித்திருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. இதன் முதல்நாள் படப்பிடிப்பில் அமிதாப் கலந்து கொண்டதை மிகவும் மகிழ்ச்சியோடு … Read more