அனைத்தையும் காலம் தீர்மானிக்கும் காங்., தலைவர் சிவகுமார் அறிவிப்பு| Dinamalar

ராம்நகர்-”சட்டசபை கூட்டத்தில், மாநிலத்தின் சட்டம் — ஒழுங்கு, ஊழல், 40 சதவீதம் கமிஷன், அரசின் தோல்வி குறித்து பேசுவோம்,” என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.ராம்நகர் சென்னப்பட்டணாவில் அவர் நேற்று கூறியதாவது:ராம்நகருக்கு புதிதாக வந்துள்ள எஸ்.பி., யார் என்பதே எனக்கு தெரியவில்லை. அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அவர் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் பணியாற்ற வேண்டாம். சட்டப்படி பணியாற்றினால் போதும்.கர்நாடகாவில் கூட்டணி அரசு வருமென, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா கூறியுள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மை, … Read more

மாதவன் இயக்கி, நடித்துள்ள 'ராக்கெட்ரி' வெளியீடு அறிவிப்பு

தமிழில் ஒரு காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் மாதவன். 'அலைபாயுதே' படத்தில் அறிமுகமான மாதவன் தொடர்ந்து சில வருடங்கள் தமிழில் குறிப்பிடத்தக்க நாயகர்களில் ஒருவராக இருந்தார். அதன்பின் ஹிந்தியில் கவனம் செலுத்தப் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழில் விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த 'விக்ரம் வேதா' படத்தின் மூலம் மீண்டும் பேசப்பட்டார். அதற்குப் பிறகு 'ராக்கெட்ரி' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்கிய நிலையில் அவர் படத்திலிருந்து விலகினார். அதன்பின் மாதவனே படத்தின் இயக்குனர் பொறுப்பையும் … Read more

இம்ரானை விட்டு 3வது மனைவி பிரிவு| Dinamalar

இஸ்லாமாபாத் : பாக்., பிரதமர் இம்ரான் கானை விட்டு அவரின் மூன்றாவது மனைவி, புஷ்ரா மனேகா பிரிந்து தனியே வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான்-டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், ஜெமீமா கோல்டுஸ்மித், ரெஹம் கான் ஆகியோரை மணந்து பிரிந்தவர். கடந்த, 2018ல் புஷ்ரா மனேகா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். புஷ்ராவுக்கு முன்னாள் கணவர் வாயிலாக, ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவர்கள் யாரும் தன் வீட்டிற்கு வரக் கூடாது … Read more

குஷ்பு நடிக்கும் புது சீரியல் மீரா – படப்பிடிப்பு தொடக்கம்

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கலக்கி வந்த நடிகை குஷ்பு, சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். கடைசியாக 'லெஷ்மி ஸ்டோர்ஸ்' தொடரில் நடித்த அவர், அதன்பின் பெரிதாக சின்னத்திரையில் நடிக்கவில்லை. அரசியலில் தீவிரம் காட்டினார். இடையில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். சில சீரியல்களில் கெஸ்ட் ரோல்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில், குஷ்பு நடிக்கும் புதிய சீரியலின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மீரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த தொடரை குஷ்புவே கதை எழுதி உள்ளார். இந்த தொடர் … Read more

உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் குறைப்பு?| Dinamalar

மாஸ்கோ: போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் எல்லையில் இருந்து, சில ரஷ்ய படைகள் முகாமுக்கு கிளம்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. நேடோ அமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் உக்ரைன் எல்லையில் படைகளை குவித்துள்ளது. இதனால், அங்கு போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை குறைக்க ரஷ்யா, உக்ரைனுடன், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், … Read more

கவர்னர் தமிழிசையிடம் மலேஷியா பெண் எம்.எல்.ஏ., புகார்| Dinamalar

புதுச்சேரி: மலேஷிய பெண் எம்.எல்.ஏ.,வின் முகநுால் பக்கத்திற்கு, ஆபாச பதிவு அனுப்பிய புதுச்சேரி நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கவர்னர் தமிழிசையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மலேஷியா நாட்டின் பகாங் மாநிலம், சபாய் சட்டசபை எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் தமிழச்சி காமாட்சி துரைராஜ். மலேசியவாழ் தமிழரான இவருக்கு, ஐந்து நாட்களுக்கு முன், புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிவேல் பிரகாஷ் என்ற பெயரில் ஒருவர் முகநுால் மூலம் அறிமுகமாகி உள்ளார்.அவரது அறிமுகத்தை ஏற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., அவருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். பதிலுக்கு … Read more

'கலாவதி' சாதனையை ஒரே நாளில் காலாவதி ஆக்கிய 'அரபிக்குத்து'

தென்னிந்திய அளவில் புதிய சாதனை என மகேஷ் பாபுவின் 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலின் சாதனையை ஒரு நாள் கூட கொண்டாடவிடவில்லை 'அரபிக்குத்து'. கடந்த சில நாட்களாகவே விஜய் ரசிகர்களுக்கும், மகேஷ்பாபு ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் சண்டை நடந்து வந்தது. விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' பாடலும், மகேஷ்பாபுவின் தெலுங்குப் படமான 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலும் நேற்று பிப்ரவரி 14 அன்று … Read more