இந்தாண்டின் முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ| Dinamalar

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, ‘இஸ்ரோ’வின் சார்பில் இந்தாண்டின் முதல் செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இஸ்ரோ சார்பில், இ.ஒ.எஸ்., ௦4 எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் மற்றும் இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் நேற்று செலுத்தப்பட்டன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., – சி 52 ராக்கெட் வாயிலாக இவை அனுப்பப்பட்டன. ‘கவுன்ட் டவுன்’ முடிந்து, நேற்று காலை 5:59 மணிக்கு ராக்கெட் … Read more

முதல் காதலை சொல்லும் நினைவெல்லாம் நீயடா

சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்கும் படம் நினைவெல்லாம் நீயடா. இதில் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக, வழக்கு எண் 18 /9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை படங்களில் நடித்த மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். இளம் வயது நாயகன் நாயகியாக மாஸ், மாஸ்டர் பட புகழ் ரோகித்தும், அப்பா, அம்மா கணக்கு, ஆருத்ரா, வினோதய … Read more

ஏர் இந்தியா சி.இ.ஓ.,வாக இல்கர் அய்சியை நியமித்தது டாடா நிறுவனம்| Dinamalar

புதுடில்லி: துருக்கி ஏர்லைன்ஸ் தலைவராக பணியாற்றிய இல்கர் அய்சி, ஏர் இந்தியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகவும் (சி.இ.ஓ), நிர்வாக இயக்குநராகவும் (எம்.டி) நியமிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு அக்டோபரில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை சமாளிக்கும் வகையில் தனியாருக்கு மத்திய அரசு ஏலம் விடப்பட்டது. இதில் 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. இதில் ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும், எஞ்சிய ரூ.15,300 கோடிக்கு ஏா் இந்தியாவின் கடனை ஏற்கவும் டாடா … Read more

இளம் நடிகைகளுக்கு 'டப்' கொடுக்கும் மீரா ஜாஸ்மின்

'ரன், சண்டக்கோழி' படங்கள் மூலம் '2 கே' ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். துறுதுறு, பரபரவென இருக்கும் அவரது நடிப்பும், பேச்சும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த ஒன்று. அவரது இடத்தை இதுவரையிலும் வேறு எந்த நடிகையாலும் நிரப்ப முடியவில்லை என்பது உண்மை. தன்னுடைய இடம் மீண்டும் தனக்குத்தான் என்று சொல்லுமளவிற்கு சமூகவலைதளத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்களைப் பார்க்கும் போது தோன்றுகிறது. 20 பிளஸ் நடிகைகள் வெளியிடும் கிளாமரான புகைப்படங்களுக்கு 'டப்' கொடுக்கும் விதத்தில் … Read more

கோவா, உத்தரகாண்ட், உ.பி(2வது கட்டம்) ஓட்டுப்பதிவு நிறைவு| Dinamalar

உத்தரகாண்ட், கோவா, உத்தரபிரதேசம் (2ஆம் கட்டம்) மாநிலங்களின் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல், 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 55 தொகுதிகளில் மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி கோவா: 75.29 %உத்தரகாண்ட்: 59.37 %உத்தர பிரதேசம் (2வது கட்டம்) 60.44% ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் கமிஷன் … Read more

தமிழக முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் என். இராமசாமியும் மற்ற நிர்வாகிகளும் இணைந்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் திரைத்துறை சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகள் தமிழக முதல்வரிடம் வைத்தோம். அவற்றை பரிசீலித்த முதல்வர் அவர்கள் திரையரங்குகளில் 50 சதவிகித மக்களை படம் பார்க்க அனுமதித்த முதல்வர் இன்று நூறு சதவிகிதம் திரையரங்குகளில் மக்கள் படம் பார்க்க அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார். தொழில்துறை சிறந்து … Read more

கனடா – அமெரிக்கா நாடுகளை இணைக்கும் பாலம் மீண்டும் திறப்பு

விண்ட்சர் : போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.வட அமெரிக்க நாடான கனடாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து நாடு முழுதும் பல இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கனடா நாட்டின் விண்ட்சர் நகரையும், அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரையும் இணைக்கும் பாலத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஏராளமானோர் திரண்டனர். இதைஅடுத்து, அந்த மேம்பாலம் மூடப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக … Read more

புல்வாமா தாக்குதல் நினைவு நாள் : உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி| Dinamalar

புதுடில்லி : 2019 பிப்., 14ல், ஜம்மு – காஷ்மீரின் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு, துணை ராணுவப் படையான சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காரை மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 40 வீரர்கள் உயிரிழந்தனர்.அண்டை நாடான பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, நம் ராணுவம், ‘சர்ஜிகல்’ ஸ்டிரைக்’ எனப்படும் துல்லிய தாக்குதலை நடத்தி, பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இந்நிலையில், புல்வாமா தாக்குதலின், மூன்றாம் … Read more

'கலாவதி' சாதனையே ஒரே நாளில் முறியடிக்குமா 'அரபிக்குத்து'

யு டியுப், மற்றும் சமூக வலைத்தளங்களில் தெலுங்கு சினிமாவுக்கும், தமிழ் சினிமாவுக்கும் இடையே தான் அதிகமான போட்டி நிலவி வருகிறது. இன்று காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளும், தெலுங்கில் மகேஷ் பாபு நடித்துள்ள 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 'கலாவதி' பாடலை ஒரு நாள் முன்னதாக நேற்றே வெளியிட்டுவிட்டார்கள். நேற்று மாலை வெளியான இப்பாடல் அதற்குள் ஒரு புதிய … Read more

தயாரிப்பாளரான இயக்குனர் விஜய் சந்தர் – படப்பிடிப்பு ஆரம்பம்

வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர், தற்போது ஹன்சிகாவை வைத்து தனது முதல் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை கூகுள் குட்டப்பன் பட இயக்குனர்கள் சபரி கிரீசன் மற்றும் சரவணன் இணைந்து இயக்குகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(பிப்., 14) பூஜையுடன் துவங்கியது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் எஸ்.தாணு, நடிகர் விஜய்சேதுபதி ஆகியோர் பட பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.