ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் … விபத்துகள் குறைந்து உயிரிழப்பும் கணிசமாக வீழ்ச்சி| Dinamalar

பெங்களூரு : அனுபவமிக்க ஓட்டுனர்களை நியமித்தது, எச்சரிக்கையாக பஸ் ஓட்டுவது குறித்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது போன்ற பல நடவடிக்கைகளால், பி.எம்.டி.சி., பஸ்களால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை, படிப்படியாக குறைந்து வருகிறது.தொடர்ந்து இந்த பணிகளை மேற்கொள்ள அரசு பஸ் நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.பெங்களூரில் வாகனங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரிக்கிறது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான பி.எம்.டி.சி., பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஓட்டுனர்களின் அலட்சியம், அதிவேக பயணம் போன்ற பல காரணங்களால் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பும் அதிகரித்தது. இதன் காரணமாகவே, பி.எம்.டி.சி., … Read more

அகிலன் படத்தில் போலீசாக நடிக்கும் சிராக் ஜானி

ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ‛அகிலன்' எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர். துறைமுகத்தை மையமாக கொண்ட கதைக்களம் என்பதால் தூத்துக்குடியிலும், சென்னை காசிமேட்டிலும் படமாக்கி வந்தனர். இந்த படத்தில் போலீசாக சிராக் ஜானி நடிக்கிறார். இவர் ஏற்கனவே சூர்யா நடிப்பில் காப்பான் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‛தமிழில் நான் … Read more

புனித நுாலை இழிவுபடுத்தியதாக ஒருவர் கொலை| Dinamalar

இஸ்லாமாபாத்-இஸ்லாம் மதத்தின் புனித நுாலை இழிவுபடுத்தியதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஜங்கிள் தேரா என்ற கிராமத்தில் நேற்று முன் தினம் ஒருவர், இஸ்லாம் மதத்தின் புனித நுாலின் சில பக்கங்களை கிழித்து தீ வைத்து எரித்ததாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கிருந்த சிலர் அந்த நபரை தாக்கினர். மேலும் பலருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்தனர். எந்த புத்தகத்தையும் கிழிக்கவில்லை என … Read more

சாமுண்டேஸ்வரி தொகுதியில் போட்டியில்லை?| Dinamalar

மைசூரு, : ”சாமுண்டேஸ்வரி தொகுதியில், முன்னாள் முதல்வர் குமாரசாமி வேட்பாளராக மாட்டார். அவர் ராம்நகரை விட்டு வர மாட்டார்,” என மைசூரின் கே.ஆர்., நகர் ம.ஜ.த., – எம்.எல்.ஏ., சா.ரா.மகேஷ் தெரிவித்தார்.மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:குமாரசாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னரே, நான் இதை கூறுகிறேன். சாமுண்டேஸ்வரி தொகுதியில் போட்டியிடும்படி, தலைவர்கள், தொண்டர்கள் நெருக்கடி கொடுப்பது உண்மை தான். ஆனால் இத்தொகுதியில், குமாரசாமி வேட்பாளராக மாட்டார் என்பதும், அதே அளவு உண்மை. சாமுண்டேஸ்வரி தொகுதியில், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,வே … Read more

சிபிராஜ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் வித்யாசகரின் மகன்

நடிகர் சிபிராஜ் தற்போது மாயோன், ரேன்ஞ்சர் படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக பாண்டியன் ஆதிமூலம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் சிபிராஜின் 20வது படமாக உருவாகிறது. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் சிபிராஜ் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரி அர்ஜூனன் நடிக்கும் ‛டி.என்-43'

நெடுஞ்சாலை படத்தின் மூலம் பிரபலமான ஆரி அர்ஜூனன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராகவும் வெற்றி பெற்றார். நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‛டி.என் -43' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எஸ்.ஏ.எஸ் புரோடெக்ஷன் தயாரிக்க, மணிவர்மன் இயக்குகிறார். அஞ்சுகுரியன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பை நேற்று அறிவித்துள்ளனர்.

ரஷ்ய அதிபரை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த ஜோ பைடன்| Dinamalar

வாஷிங்டன் : “உக்ரைன் மீது போர் தொடுத்தால், அதற்கு உரிய விலை கொடுக்க நேரிடும்,” என, ரஷ்ய அதிபரை தொலைபேசியில் அழைத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய உக்ரைன் விரும்புகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ … Read more