வரும் 27ல் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் ஜனவரி 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் திடீரென தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் சூழலில் மீண்டும் புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது … Read more

புற்றுநோய் பாதித்த சங்கீத ஆசிரியை; அறுவை சிகிச்சையின் போது இளையராஜா பாடலை பாடி நெகிழ்ச்சி

கர்நாடக சங்கீத ஆசிரியையான சீதாலட்சுமி, இளையராஜாவின் தீவிர ரசிகை. இவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதால், அவருக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவருடைய உடல்நிலை, மயக்க மருந்தை ஏற்றுக் கொள்ளும் அளவில் இல்லை. அதனால் மருத்துவர்கள் அவருக்கு லோக்கல் அனஸ்தீஸியா எனப்படும் குறிப்பிட்ட இடம் மட்டுமே மரத்துப்போகும்படியான மயக்க மருந்தை கொடுத்தனர். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவர் பதற்ற நிலையில் இருந்ததால் மருத்துவர்கள் அவரை பாடல் பாடி ஆசுவாசப்படுமாறு கூறினர். … Read more

இந்தியாவில் தொடர்ந்து குறையுது தினசரி கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 44,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய நாளை காட்டிலும் 13.4 சதவீதம் குறைவாகும். மொத்த பாதிப்பு 4,26,31,421 ஆனது.அதேபோல், 1,17,591 பேர் குணமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,15,85,711 ஆனது. தற்போது, 5,37,045 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வைரஸ் தொற்று காரணமாக 684 பேர் உயிரிழந்ததால், மொத்த இறப்பு 5,08,665 ஆனது. புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் … Read more

கோலாகலமாக நடைபெற்ற சுஜா வாசன் திருமணம்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் தொடரில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தி நடித்து வந்தார் சுஜா வாசன். இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்த நிலையில் திடீரென சீரியலை விட்டு விலகினார். தற்போது அவருக்கு அமிதாப் வெங்கடேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில், சுஜாவின் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். டிக் டாக் மூலம் பிரபலமான சுஜா வாசன், பொன்னுக்கு தங்க மனசு, வந்தாள் ஸ்ரீ தேவி ஆகிய … Read more

நடிகர் ஆர்யாவின் ‛கேப்டன்' படப்பிடிப்பு நிறைவு

'டெடி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்குநர், தயாரிப்பாளர் சக்தி சவுந்தர் ராஜனும், 'கேப்டன்' என்னும் அதிரடி சயின்ஸ்பிக்சன் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீபிள் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வடஇந்தியாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கிய படக்குழு, அதை தொடர்ந்து குளு மணாலியில் இறுதி கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர். … Read more

இடுக்கி மோப்ப நாய் பிரிவில் பெல்ஜியம் மெலானாய்டு வகை சேர்ப்பு| Dinamalar

மூணாறு: இடுக்கி மாவட்ட போலீஸ் மோப்ப நாய் பிரிவில் பயிற்சி பெற்ற பெல்ஜியம் மெலானாய்டு வகை நாய் சேர்க்கப்பட்டது. மாவட்டத்தில் மோப்ப நாய் பிரிவில் திருட்டு, கொலை குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை எளிதில் கண்டறிய வசதியாக ஏழு மோப்ப நாய்கள் உள்ளன. தற்போது பெல்ஜியம் மெலானாய்டு வகையைச் சேர்ந்த ஏஞ்சல் என பெயரிடப்பட்ட நாய் சேர்க்கப்பட்டதால் மோப்ப நாய்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது.இந்த நாயுடன் 23 நாய்களுக்கு திருச்சூர் போலீஸ் அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒன்பது … Read more

எந்த அரசியலை பேச போகிறது 'பப்ளிக்' திரைப்படம்

கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'பப்ளிக்'. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் கவனத்தை ஈர்த்து வருவதுடன் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முதலாவது ஸ்னீக்பீக்கில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை நையாண்டி தனமாக சொல்லும் காட்சிகளும், 2வது ஸ்னீக்பீக்கில் அரசியல் தலைவர்களின் வேடமிட்டவர்கள், அரசியல் சொல்லி தருவது போலவும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதை தொடந்து தற்போது வெளியாகியுள்ள 3வது ஸ்னீக்பீக்கில் இன்றைய அரசியல் … Read more

சீனாவின் குவாட் எதிர்ப்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் பதிலடி| Dinamalar

மெல்பர்ன்,;”இந்தோ – பசிபிக் கடற் பிராந்தியத்தின் அமைதிக்கு உருவாக்கப்பட்ட, ‘குவாட்’ அமைப்பை சாதாரணமாக கருத வேண்டாம்,” என சீனாவுக்கு நம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதிலடி தந்துள்ளார். இந்தோ – பசிபிக் கடற் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறலை தடுத்து, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்காக குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்புக்கு,துவக்கம் முதல் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கூட்டம் இந்நிலையில், நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவில் … Read more