இந்தியாவில் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ்: டிசம்பர் 5-6 தேதிகளில் புதிய சலுகை 

டிசம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸை இலவசமாகப் பயன்படுத்தலாம் என அந்தத் தளம் அறிவித்துள்ளது. உலக அளவில் உள்ள முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று நெட்ஃபிளிக்ஸ். பல பிரபலமான திரைப்படங்கள், ஆவணப்படங்கள், நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ் ஆகியவை இந்தத் தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவில் மாதம் ரூ.199 என்று ஆரம்பித்து ரூ.799 வரை 4 வகையான கட்டண அமைப்புகளை நெட்ஃபிளிக்ஸ் நிர்ணயித்துள்ளது. அமேசான் ப்ரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ5 என இந்தியாவில் ஏற்கெனவே ஓடிடி … Read more

தங்களது உரிமைக்காக யார் போராடுகிறார்கள் என்பதை தமிழக மக்கள் அறிவர்: பேரவையில் விசிக எம்எல்ஏ பாலாஜி பேச்சு

சென்னை: “தங்களது உரிமைக்காக யார் போராடுகிறார்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்” என்று சட்டப்பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ பாலாஜி தெரிவித்தார். நீட் விலக்கு மசோதா தொடர்பான சிறப்பு விவாதத்தில் விசிக எம்.எல்.ஏ பாலாஜி பேசும்போது, ”அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், மகளிருக்கு சொத்தில் சம உரிமை ஆகியவற்றை நிறைவேற்றி தந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாரிசுக்கு இல்லாத அக்கறை, தமிழகத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் வந்த சிலருக்கு வருகின்றது. தங்களது … Read more

என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய வாவா சுரேஷ் பேட்டி

கோட்டயம்: கேரளாவின் பிரபலமான பாம்பு மீட்பர் வாவா சுரேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவர், என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன் என்று கூறினார். ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்து வனத்தில் விட்டு பல்லுயிர் சமன்பாட்டைப் பேண உதவிய கேரளாவைச் சேர்ந்த இளைஞர் வாவா சுரேஷை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜ நாகம் தீண்டியது. இதனால் அவர் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவு இழந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை … Read more

இந்தியாவில் பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணமா? -கூகுள் பே விளக்கம்

கூகுள் பே செயலியில் பணப் பரிமாற்றத்துக்கான கட்டணம் என்று அறிவிக்கப்பட்டது அமெரிக்காவில் மட்டுமே என்றும், இந்தியாவில் அப்படி எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. சமீபத்தில் கூகுள் பே இணையதளத்தில், ஜனவரி மாதம் முதல் தளம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணம் விதிக்கப்போவதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் கூகுள் பேவை இனி பயன்படுத்த வேண்டுமா என இந்தியப் பயனர்கள் இடையே கேள்வி எழுந்தது. ஆனால் தற்போது கூகுள் நிறுவனம் … Read more

நீட் விலக்கு மசோதா | ஆளுநர் செய்தது அரசியல் சட்ட அமைப்புக்கே எதிரானது: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்

சென்னை: “தமிழக சட்டப்பேரவை கூடி கொள்கை அடிப்படையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது அடிப்படை அரசியல் சட்ட அமைப்புக்கே எதிரானது“ என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடியுள்ளது. சபாநாயகர் விவாதத்தைத் தொடங்கிவைக்க, நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். … Read more

இந்தியாவின் அன்றாட கரோனா பாதிப்பு 67,597: பாசிடிவிட்டி விகிதிம் 5%; ஓய்கிறதா மூன்றாவது அலை?

இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 67,597 என்றளவில் உள்ளது. அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதமும் 5% என்றளவில் சரிந்தது. இதனால், மூன்றாவது அலை முடிவுக்கு வந்ததா என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்றாளர் கண்டறியப்பட்டார். அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி … Read more

உலகில் அதிக ஸ்பேம் அழைப்புகள்: இந்தியாவுக்கு 9-வது இடம்

ஸ்பேம் என்று சொல்லப்படும் மோசடி தொலைபேசி அழைப்புகள் பெறுவதில் உலக அளவில் இந்தியா 9-வது இடத்தைப் பெற்றுள்ளது. ட்ரூகாலர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னால் இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்தது. தற்போது பிரேசில் முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் பெரும்பான்மையான ஸ்பேம் அழைப்புகள் உள்நாட்டிலிருந்து வருபவையே. ஆனால், கடுமையான ஊரடங்கு விதிமுறைகளால் இப்படியான மோசடி அழைப்புகளைச் செய்பவர்களால் வேலைக்குச் செல்ல முடியவில்லை அல்லது அப்படியான அழைப்புகளைச் செய்யத் … Read more

எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை – விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் … Read more

'அப்பட்டமான பொய்': பிரதமர் உரைக்கு அரவிந்த் கேஜ்ரிவால் கண்டனம்; ட்விட்டரில் வசைபாடும் எதிர்க்கட்சிகள்

புதுடெல்லி: கரோனா முதல் அலையின் போது டெல்லி அரசாங்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நகரத்தை விட்டு வெளியேறச் சொன்னது. இதன் விளைவாக, பஞ்சாப், உ.பி மற்றும் உத்தராகண்டில் கோவிட் வேகமாக பரவியது என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியிருப்பது அப்பட்டமான பொய் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். முன்னதாக நேற்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “கோவிட்-19 முதல் அலையின்போது காங்கிரஸ் பொறுப்பற்ற … Read more

யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுள் சேவைகள் முடங்கின; உலகளாவிய அளவில் பாதிப்பு

யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுள் சேவைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. இதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. பிரபல வீடியோ தளமான யூடியூப், மின்னஞ்சல் சேவையான ஜிமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் மீட், கூகுள் க்ளாஸ்ரூம் உள்ளிட்ட கூகுள் நிறுவனத்தின் சேவைகள் முடங்கியுள்ளன. சர்வதேச அளவில் பல பயனர்கள் இந்தப் பிரச்சினையைச் சந்தித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) மதியத்தில் இருந்து கூகுளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மாலையில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயனர்கள், தங்களால் மின்னஞ்சலை … Read more