ஆஸ்திரேலியா | புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் அந்தோணி அல்பானீஸ்

கான்பெரா: ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese). 59 வயதான அந்தோணி அல்பானீஸ், நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர். 1996 வாக்கில் ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அமைச்சர், அவைத்தலைவர், துணை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கவனித்துள்ளார். இப்போது ஆஸ்திரேலிய நாட்டின் 31-வது பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் தொழில் கட்சியை சார்ந்தவர். 2019 முதல் அவர் அக்கட்சியின் தலைவராக உள்ளார். … Read more

தமிழகம், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 24, 25, 26-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 … Read more

Monkeypox | 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் Monkeypox (குரங்கு காய்ச்சல்) பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தந்து அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 13-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மொத்தம் 92 பேர் இந்த காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. 28 … Read more

ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை: பொதுமக்கள் அதிர்ச்சி

ஈரோடு வஉசி மார்க்கெட்டில தக்காளி ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந் துள்ளனர். ஈரோடு வஉசி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் உள்ளன. சத்தியமங்கலம், தாளவாடி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து நாள்தோறும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. சமீபகாலமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால், பல்வேறு காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து … Read more

மூணாறில் முன்னதாகவே முடிவுக்கு வந்த கோடை சீசன்

மூணாறில் பெய்து வரும் கன மழை மற்றும் வரும் 27-ம் தேதி பருவ மழையும் தொடர உள்ளதால் இந்த ஆண்டுக்கான கோடை சீசன் முன்னதாக முடிவடைந்துள்ளது. குளிர்ந்த காலநிலை, பரவிக் கிடக்கும் பனி ஆகியவற்றால் தென்னகத்து காஷ்மீர் என மூணாறு அழைக்கப்படுகிறது. இந்த பருவநிலைக்காக உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கோடை காலத்தில் அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர். இந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மூணாறுக்கு சுற்றுலாப் பயணிகளின் … Read more

சிறுவர்கள் பைக் ஓட்டினால் ரூ.25,000 அபராதம், வாகனம் பறிமுதல்: மதுரை போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை

சிறுவர், சிறுமிகள் விதியை மீறி பைக் ஓட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மதுரை போக்கு வரத்து போலீஸார் எச்சரித் துள்ளனர். மதுரை நகரில் போக்குவரத்து விதியை மீறல், ஓட்டுநர் உரிமம் இன்றி 18 வயதுக்குட்பட்ட மாண வர்கள், சிறுவர்கள், சிறுமிகள் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது அதிகரித்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இவர்களால் விபத்து நேரிட் டால், பாதிக்கப்பட்டோர் இன் சூரன்ஸ் போன்ற இழப்பீடு பெறுவதிலும் சிக்கல் உள்ளது. இவற்றைத் தடுக்கும் நோக்கில் … Read more

பொள்ளாச்சியில் நூலகம் கட்ட ரூ.6 லட்சம் நிதி வழங்கிய மக்கள்

பொள்ளாச்சி ஜோதி நகரில் புதிய நூலகம் கட்டவேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் பொள்ளாச்சி ஜோதி நகரில் 64 சென்ட் இடத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளை மேற்கொள்ள ஜோதிநகர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், விவேகானந்தர் நற்பணி மன்றம், குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து ரூ. 6 லட்சம் நிதி … Read more

பட்டு நூலின் விலை 35 ஆண்டுகளுக்கு பிறகு கடும் உயர்வு: கைத்தறி நெசவாளர்கள் கவலை

கடந்த 35 ஆண்டுகளுக்கு பிறகு பட்டு நூல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளதாக சிறுமுகை பட்டு நெசவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாட்டில் விவசாயத்துக்கு அடுத்துள்ள மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாக ஜவுளித்துறை உள்ளது. அதிகளவில் வேலை வாய்ப்பை அளித்து வருகிறது இத்துறை. ஜவுளித் துறையில் அதிக மதிப்பு மிக்க மற்றும் லாபம் தரக்கூடிய உற்பத்தியானது, பட்டு நெசவு தான். தமிழகத்தில் பட்டு உற்பத்தியில் காஞ்சிபுரம் முதலிடத்திலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி 2-ம் இடத்திலும், கோவை மாவட்டத்தின் சிறுமுகை 3-ம் … Read more

கூலிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து சிறுவன் காயம்: சீரமைத்து தர பயனாளிகள் கோரிக்கை

கூலிபாளையம் ஆதிதிராவிடர் காலனி|யில் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 4 வயது சிறுவன் காயமடைந்தான். திருப்பூர் மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்டது கூலிபாளையம் ஆதிதிராவிடர் காலனி. இங்கு, 2002- 2003-ம் ஆண்டு இந்திரா குடியிருப்புதிட்டத்தின் கீழ் 16 வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டன. இந்நிலையில்,போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து, குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, தயாநிதி, வெண்ணிலா தம்பதி வசித்து வந்த வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில், மகன் பரசுராமன் (4) காயமடைந்தான். இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு … Read more

காவல் நிலைய மரணங்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் – டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

திருச்சி: தமிழகத்தில் இனி காவல்நிலைய மரணங்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார். மத்திய மண்டல காவல்துறை, ‘வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ்’ சங்கம் ஆகியவை சார்பில் காவல்நிலைய மரணங்களைத் தடுப்பது தொடர்பாக காவல் அதிகாரிகளுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன், மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன், தஞ்சை சரக டிஐஜி கயல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி, … Read more