பேருந்து நடத்துநர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் – தீர்வுக்கான திட்டம் என்ன?

சென்னை: முதன்முதலாக பேருந்து இயக்கப்பட்ட காலம் முதல் நடத்துநர் – பயணிகள் இடையேயான மோதல்போக்கு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. அண்மையில் பயணி ஒருவர் தாக்கியதில் நடத்துநர் உயிரிழந்த சம்பவம், இந்த மோதலைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான அவசியத்தை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட தகவலின்படி, தமிழகத்தில் 10,417 வரையறுக்கப்பட்ட வழித்தடங்களில் 20,304 அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நாள் ஒன்றுக்குசுமார் 1.55 கோடி பேர் பயணிக்கின்றனர். நடத்துநர் … Read more

உளவு பார்த்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய பெகாசஸ் ஆய்வுக் குழுவுக்கு அவகாசம்

புதுடெல்லி: பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து ஆய்வு செய்யும் தொழில்நுட்ப குழு, அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 4 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட 50,000 பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக கடந்த ஆண்டு ஜூலையில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவில் 40 செய்தியாளர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட 30 பேரின் ஸ்மார்ட்போன் தகவல்கள் திருடப்பட்டதாக … Read more

உலகிலேயே விலை உயர்ந்த கார்: ரூ. 1,100 கோடிக்கு ஏலம் போன மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர்

நியூயார்க்: உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த காராக மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் மாடல் கருதப்படுகிறது. 1955-ம் ஆண்டில் வெளிவந்த இந்த ஸ்போர்ட்ஸ் கார் சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் 14.30 கோடி டாலருக்கு (ரூ. 1,100 கோடி) ஏலம் போனது. பழைய கார்களில் மிக அதிக விலைக்கு ஏலம் கேட்கப்பட்ட காராக இது கருதப்படுகிறது. 1955-ம் ஆண்டில் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் ரேசிங் பிரிவு உருவாக்கிய இரண்டு கார்களில் இது ஒன்றாகும். தலைமைப் பொறியாளர் ருடோல்ப் உஹ்லென்ஹாட் … Read more

4 ஆயிரம் மையங்களில் இன்று குரூப் 2 தேர்வு – 11.78 லட்சம் பட்டதாரிகள் எழுதுகின்றனர்

சென்னை / சிவகங்கை: அரசுத் துறைகளில் உள்ள 5,529 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை 11.78 லட்சம் பட்டதாரிகள் எழுதுகின்றனர். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட பல்வேறு பதவிகளில் உள்ள 5,529 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் 4,012 தேர்வு மையங்களில் இன்று நடக்கிறது. 4.96 லட்சம் ஆண்கள், 6.82 லட்சம் பெண்கள், … Read more

ஏழுமலையானை தரிசிக்க இன்று ஆன்லைன் டிக்கெட் வெளியீடு

திருப்பதி: ஏழுமலையானை வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரூ. 300 சிறப்பு தரிசனம் மூலம் தரிசிக்க ஆன்லைன் டிக்கெட்டுகளை இன்று தேவஸ்தானம் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ரூ. 300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு மார்ச் மாத இறுதியிலேயே ரூ. 300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஆதலால், ஜூன் மாதம் 30ம் தேதி … Read more

சமையல் எரிவாயு சிலிண்டர், எரிபொருள் விலை கடும் உயர்வு – இலங்கையில் உணவு தட்டுப்பாடு அபாயம்

கொழும்பு: இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கிடையே சமையல் எரிவாயு சிலிண்டர், எரிபொருள் ஆகியவை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், உணவுப் பொருட்கள் விலை உயர்வு, வருமான இழப்பு, எரிபொருள் பற்றாக்குறை, மக்கள் போராட்டம், ஆட்சி மாற்றம் என பல்வேறு பிரச்சினைகளில் இலங்கை தவித்து வருகிறது. இப்பிரச்சினைகள் பூதாகரமானதை தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த … Read more

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை தொடர வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: முதியோருக்கு வழங்கப்படும் ரயில் பயண கட்டணத்தில் 50 சதவீத சலுகை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கட்டணச் சலுகையால் அவர்கள் பெரும்பயனடைந்தார்கள். ஆனால், கரோனா காலத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட அசாதாரண சூழல், பொருளாதார பாதிப்பு ஆகியவற்றால் ரயில்களின் எண்ணிக்கை, பயணிகளின் எண்ணிக்கை, இருக்கைகள், கட்டணம் ஆகியவற்றில் மாற்றங்கள் … Read more

ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்றது தொடர்பாக லாலு பிரசாத் மீது வழக்கு பதிவு: 16 இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை வழங்க நிலத்தை லஞ்சமாக பெற்றது தொடர்பாக அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக … Read more

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்கள் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெப்பச் சலனம் காரணமாக 21-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், 22, 23-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 24-ம் தேதி உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது … Read more

ஆஸம் கான் ஜாமீனில் விடுவிப்பு

லக்னோ: உ..பி.யில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கான் (73). கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு ராம்பூர் தொகுதியில் வெற்றிபெற்றார். நில அபகரிப்பு உட்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக 2020 பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட ஆஸம் கான், 27 மாதங்களாக சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனிடையே, உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் … Read more