கோவை  மாவட்ட ஊர்க்காவல் படையில் 3 திருநங்கைகள் பணி நியமனம்: பொதுமக்கள், பல்வேறு தரப்பினர் வரவேற்பு

கோவை: கோவை மாவட்ட ஊர்்க்காவல் படையில் 3 திருநங்கைகள் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில், மாவட்ட ஊர்க்காவல் படையினர் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் 380-க்கும் மேற்பட்டோர் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தைச் சேர்்ந்த திருநங்கைகளான சிறுமுகையைச் சேர்ந்த வருணாஸ்ரீ(21), தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த மஞ்சு(29), … Read more

லஞ்சம் பெற்று பயனர்களின் தகவல் வெளியீடு: 20 இபிஎப்ஓ பணியாளர்கள் மீது வழக்கு – சிபிஐ அதிரடி

லஞ்சம் பெற்று பிஎப் பயனாளர்கள் பற்றிய தகவலைத் வெளியிட்ட 20 இபிஎப்ஓ நிறுவன பணியாளர்கள் மீது மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்கு பதிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் பேடிஎம், போன்பே, கூகுள் பே போன்ற தனியார் நிறுவனங்களுக்கு இவர்கள் பயனர்கள் பற்றிய விவரங்களைத் தந்துள்ளது தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு பயனர்கள் பற்றிய தகவல்களை இபிஎப்ஓ அலுவலக பணியாளர்களே அளிப்பது தொடர்பாக வெளியான புகாரின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தியது. குண்டூரில் உள்ள … Read more

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் தொல்லியல் துறை கட்டுமானம் மேற்கொள்ள தடை

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம்ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுனெஸ்கோவால் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில்கட்டுமானங்கள் மேற்கொள்ள தடைவிதிக்கக் கோரி, கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘‘தொல்லியல் துறை சார்பில் … Read more

முகக் கவசத்தில் இருந்து விலக்கு: மகாராஷ்டிர அரசு பரிசீலனை

மும்பை: கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் முகக் கவசம் அணிவதில் இருந்து மக்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மகாராஷ்டிர அரசு பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவிய போது முதல் மாநிலமாக மகாராஷ்டிராதான் அதிகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோபே நேற்று மும்பையில் கூறியதாவது: நாடு முழுவதும் கரோனா தொற்று குறைந்து வருகிறது. மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தினசரி கரோனா பாதிப்பு 1 சதவீதமாக குறைந்துவிட்டது. … Read more

செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள்

சென்னை: பொதுமக்கள் அவசரத் தேவைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ குறிப்பிட்ட செயலிகளின் மூலம் கடன் வாங்க வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சலோன் ஆஃப் செயலிகள் மூலம்மக்களுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, பின்னர் தொந்தரவு செய்த மோசடிக் கும்பலை சென்னை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், கடன் செயலிகளைக் கண்டறிந்து, … Read more

சமாஜ்வாதி பிரமுகர் ஆசிரம வளாகத்தில் காணாமல் போன பெண் உடல் கண்டெடுப்பு

உன்னாவ்: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரது தாய் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்எல்ஏ பகதூர் சிங்கின் மகன் ரஜோல் சிங் தனது மகளை கடத்தியதாக பெண்ணின் தாயார் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், பகதூர் சிங்குக்கு சொந்தமான ஆசிரம வளாகத்தில் இருந்து காணாமல் போன பெண்ணின் சடலம் … Read more

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடக்கும் விதம்: சரத்குமார் கடும் அதிருப்தி

சென்னை: ’முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று துவங்கியிருக்கும் நிலையில், தேர்வர்களுக்கு தொலைதூரங்களில் தேர்வு மையம் ஒதுக்கியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது’ என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக அறிவிக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று துவங்கியிருக்கும் நிலையில், தேர்வர்களுக்கு தொலைதூரங்களில் தேர்வுமையம் ஒதுக்கியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தேர்வர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொள்ளாமல், தென்காசி மாவட்ட தேர்வர்களுக்கு … Read more

உ.பி.யில் 30 வழக்குகளுடன் குற்றப் பின்னணி கொண்ட எம்எல்ஏ அன்சாரி சமாஜ்வாதி கூட்டணியில் போட்டி: 1996 முதல் பல கட்சி தாவி வெற்றி பெற்றவர்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் குற்றப் பின்னணி கொண்ட எம்எல்ஏ முக்தார் அன்சாரி மீண்டும் மாவ் தொகுதியில் போட்டியிடுகிறார். உ.பி,யின் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதியாக இருப்பவர் முக்தார் அன்சாரி. இவர் மீது ஆள் கடத்தல், பாஜக எம்எல்ஏ கொலை உள்ளிட்ட சுமார் 30 வழக்குகள் உ.பி. மற்றும் பஞ்சாபில் நடைபெற்று வருகின்றன. கடந்த 2019-ல் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு பஞ்சாப் ரூப்நாகர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின், உ.பி.யில் பதிவான வழக்குகளில் அவரிடம் விசாரணை நடத்த … Read more

திமுகவின் அங்கமாக செயல்படுகிறது மாநிலத் தேர்தல் ஆணையம்: ஆளுநரை அதிமுக நிர்வாகிகள் சந்தித்த பின் சி.வி.சண்முகம் பேட்டி

சென்னை: ’திமுகவின் மாநிலத் தேர்தல் பிரிவு செயலாளர் போல் மாநில தேர்தல் ஆணையர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தங்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் பேசியது: “தேர்தல் ஆணையம் என்பது, அனைவருக்கும் பொதுவான, தன்னிச்சையான, சுதந்திரமாக செயல்படக்கூடிய அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு. … Read more

சென்னை – பெங்களூரு உள்ளிட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடம் குறித்து ஆய்வு: ரயில்வே அமைச்சர் தகவல்

புதுடெல்லி: சென்னை – பெங்களூரு புதிய புல்லட் ரயில் வழித்தடம் குறித்து ஆய்வு நடப்பதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார். எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை-பெங்களூரு- மைசூரு, டெல்லி-வாரணாசி, மும்பை – நாக்பூர், மும்பை – ஐதராபாத் உள்பட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள ரயில்வே தீர்மானித்துள்ளது. டெல்லி-வாரணாசி, மும்பை-நாக்பூர், தில்லி-அகமதாபாத், மும்பை- ஐதராபாத், சென்னை-பெங்களூரு- மைசூரு, … Read more