கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவு: வனத்தை ஒட்டிய கிராமங்களில் விழிப்புணர்வு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு காப்புக்காடு பகுதியில் கண்காணிப்புக் கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானதைத் தொடர்ந்து வனத்தை ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச் சரகத்தில் காப்புக் காடு பகுதியில் சில இடங்களில் வனத்துறை மூலம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிப்பது, வனத்துக்கு எதிரான குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்காக வனத்துறையினர் இவ்வாறு கேமராக்களை நிறுவி கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறனர். இந்நிலையில், பாலக்கோடு காப்புக்காட்டில் ஓரிடத்தில் உள்ள … Read more

செல்போன் பயன்படுத்துவதில் இந்தியக் குழந்தைகள் முதலிடம்: மெக்கபே ஆய்வறிக்கை தகவல்

பெங்களூரு: செல்போன் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியக் குழந்தைகள் அதிக முதிர்ச்சி பெற்றவர்களாகத் திகழ்வதாக மெக்கபே நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சிறுவர், சிறுமியரின் விகிதம் 83 சதவீதமாகும். இது சர்வதேச அளவான 76%-ஐ விட அதிகமாகும். இதன் காரணமாக ஆன்லைன் மூலமான நிகழும் பாதிப்புகளுக்கு இலக்காகும் அபாயம் அதிகமாக உள்ளது. சைபர் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர், சிறுமியரின் விகிதம் 22 சதவீதமாக உள்ளது. இது சர்வதேச அளவில் 17 சதவீதமாகும். சர்வதேச … Read more

கரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுகிறது: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: கடந்த 2019-2020 ஆண்டு கரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக காவல்துறையினருக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கரோனா ஊரடங்கு காலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர்கள் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளுள் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று … Read more

நீதிமன்ற உத்தரவின்படி கள ஆய்வு மீண்டும் தொடங்கியது – கியான்வாபி மசூதியில் 30 ஆண்டுக்கு பிறகு 3 அறைகள் திறப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியின் கியான்வாபி மசூதியில் முதல்நாளுக்கு பின் நிறுத்தப்பட்ட களஆய்வு, நேற்று மீண்டும் தொடங்கியது. உ.பி. மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோயிலும், கியான்வாபி மசூதியும் ஒட்டியபடி அருகருகே அமைந்துள்ளன. கோயிலை இடித்து அதன் ஒரு பகுதியில் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப், கியான்வாபியை கட்டியதாகப் புகார் உள்ளது. இதுதொடர்பான வழக்கு வாரணாசியின் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இச்சூழலில் கியான்வாபி வளாகச்சுவரின் வெளிப்பகுதியில் சிங்காரக் கவுரி அம்மன் சிலை அமைந்துள்ளது. கோயிலின் மண்டபத்தில் அமைந்துள்ள … Read more

திருநெல்வேலி தனியார் குவாரியில் பாறைகள் உருண்டு விபத்து: 4 பேரை மீட்கும் பணி தீவிரம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அடைமதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள தனியார் குவாரியில் பாறைகள் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியுள்ள இருவர் காயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் கல்குவாரியில் இன்று அதிகாலை நேரத்தில் பாறைகள் உருண்டு விழுந்து விபத்துள்ளானது. பாறைகள் உருண்டதில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இரண்டு பேர் காயத்துடன் மீட்கப்பட்டு … Read more

பிஎப்ஐ, எஸ்டிபிஐ தீவிரவாத அமைப்புகள்: கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

கொச்சி: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்டிபிஐ) ஆகியவை தீவிரவாத அமைப்புகள்தான். ஆனால் தடை செய்யப்பட்ட அமைப்புகள் அல்ல என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ஆர்எஸ்எஸ் தொண்டர் ஏ.சஞ்சித் (27) கொல்லப்பட்டார். இது தொடர்பாக பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர் உள்ளிட்ட பலரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கோரி, … Read more

திருநெல்வேலி கல்குவாரி விபத்து; ரூ.1 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், பாளையம்கோட்டை வட்டம், தருவை கிராமம், அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் காயமுற்றவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (மே 14) இரவு சுமார் 11.30 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராமம், அடைமிதிப்பான்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட … Read more

திரிபுரா புதிய முதல்வராக மாணிக் சஹா பதவியேற்பு: காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவி அடுத்தடுத்து உச்சம்

அகர்தலா: திரிபுரா பாஜக தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மாணிக் சஹா புதிய முதல்வராக இன்று பதவியேற்றார். காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவி தற்போது அவர் முதல்வர் பதவியிலும் அமர்ந்துள்ளார். வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வராக பிப்லப் குமார் தேவ் பதவி வகித்து வந்தார். அங்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் சர்ச்சைப் பேச்சு, சர்சைக்குரிய முடிவுகள் என பிப்லவ் குமாா் தேவ் மீது பெரிய அளவில் அதிருப்தி ஏற்பட்டது. பாஜக நிர்வாகிகள் சிலர் … Read more

பெயர் மாற்ற தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் அறிவுரை: அமைச்சர் கே.என்.நேரு

திருச்சியில் நேற்று மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருவாரூர் தெற்கு வீதிக்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டினால், திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் இயங்க முடியாத வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு “என்ன செய்வார்கள்?. கை, கால்களைக் கட்டிவிடுவார்களா?. திருவாரூர் நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பெயர் மாற்ற தீர்மானத்தை நிறுத்தி வைக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிவிட்டார். … Read more

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு- காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போதைய திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. இதையொட்டி, இந்த பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் திமுக எம்பிக்களான டிகேஎஸ் இளங்கோவன், … Read more