6 பள்ளிக்கல்வி அதிகாரிகள் தேசிய விருதுக்கு தேர்வு
சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் 6 பேர் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய கல்வியியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல்நிறுவனம், கல்வி நிர்வாகத்தில் புதுமைகளையும், சிறந்த நடைமுறைகளையும் உருவாக்குவோருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2018-2019-ம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழகத்தில் இருந்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இரா.சுவாமிநாதன், திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் … Read more