6 பள்ளிக்கல்வி அதிகாரிகள் தேசிய விருதுக்கு தேர்வு

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் 6 பேர் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய கல்வியியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல்நிறுவனம், கல்வி நிர்வாகத்தில் புதுமைகளையும், சிறந்த நடைமுறைகளையும் உருவாக்குவோருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2018-2019-ம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழகத்தில் இருந்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இரா.சுவாமிநாதன், திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் … Read more

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: 58 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்.10 முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், … Read more

நேபாள நாட்டுப் பகுதிகள் ஆக்கிரமிப்பு: சீனா மீது புகார்

காத்மாண்டு: நேபாள நாட்டுப் பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அந்நாடு முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக புகார் தெரிவித்துள்ளது. நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை இமயமலையை ஒட்டி சுமார் 1,400 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைந்துள்ளது. இந்நிலையில், சீனா தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக புகார் கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான எல்லை இருக்கும் நிலையில், சீனாவின் அத்துமீறல் குறித்த நேபாள அரசின் குற்றச்சாட்டு குறித்த அறிக்கை பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் கிடைத்துள்ளது. மேற்கு … Read more

கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சவால்: பேடிஎம் உருவாக்கியுள்ள புதிய ப்ளே ஸ்டோர்

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனமே ப்ளே ஸ்டோர் போன்ற ஒரு தளத்தைத் தொடங்கியுள்ளது. ஆண்ட்ராய்ட் மினி ஆப் ஸ்டோர் என்கிற இந்தத் தளம் இந்தியாவில் செயலிகளை உருவாக்குபவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களது பொருட்களை மக்களிடம் எடுத்துச் செல்ல ஏதுவாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் தங்கள் தளத்தில் சூதாட்ட விதிமுறைகளை மீறியதாகக் கூறி ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலியை கூகுள் நீக்கியது. ஆனால், கூகுளின் ஒருதலைப்பட்சமான விதிமுறைகளுக்குக் கட்டுப்பட நிர்பந்திக்கப்படுவதாகவும், அது சந்தையில் … Read more

தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்குநோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள அரசு கரோனா மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, கட்டமைப்புமற்றும் வசதிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவமனை இயக்குநர் நாராயணசாமி, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆகி யோர் உடன் இருந்தனர். … Read more

உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

புதுடெல்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை யுடன் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை களுக்கு பிப்.10-ம் தேதி (இன்று) முதல் மார்ச் 7-ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் … Read more

இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்யும் நோக்கியா

இந்தியாவில் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் நோக்கியாவின் புதிய மாடல் ஸ்மார்ட் டிவிகள் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. நோக்கியா நிறுவனத்தின் தொலைக்காட்சிப் பெட்டித் தயாரிப்புகள் கடந்த ஆண்டு முதன் முதலாக இந்தியாவில் விற்பனைக்கு வந்தன. 43 மற்றும் 65 இன்ச் மாடல்கள் முதலில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை ஆண்ட்ராய்ட் இடைமுகம் கொண்டவை. தற்போது அறிமுகமாகவுள்ள புதிய தொலைக்காட்சிப் பெட்டிகள் 32 இன்ச் மற்றும் 50 இன்ச் ஆகிய இரு மாடல்களில் … Read more

தமிழகத்தில் இன்று 3,971 பேருக்குக் கரோனா: சென்னையில் 742 பேருக்கு பாதிப்பு; 16,473 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 3,971 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,24,476. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,44,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,09,032. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 80,55,771 பேர் வந்துள்ளனர். சென்னையில் 742 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

சென்னையில் எரிபொருள் பேட்டரி தானியங்கி உற்பத்தி மையம்: நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: சென்னையில் உள்ள ஏஆர்சிஐ மையம் இருபது கிலோ வாட் திறன் கொண்ட எரிபொருள் பேட்டரிகளை தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தானியங்கி உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர் கூறியதாவது: நாட்டில் வாகன எரிபொருளாக ஹைட்ரஜனை பயன்படுத்துவதற்கான அரசாணையை 16 செப்டம்பர் 2016-லேயே மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையின் நான்காவது இணைப்பில் சிஎன்ஜியுடன் 18% … Read more

இந்தியாவில் ட்ரூகாலர் செயலியைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 15 கோடி

ட்ரூகாலர் செயலியை இந்தியாவில் தினமும் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 15 கோடி என்றும், மாதந்தோறும் கிட்டத்தட்ட 18.5 கோடி பேர் பயன்படுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் தலைமை அலுவலகம் கொண்டுள்ள ட்ரூகாலர் நிறுவனம் பெங்களூரு, கூர்கான், மும்பை மற்றும் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி உள்ளிட்ட நகரங்களில் கிளை அலுவலகங்கள் வைத்துள்ளது. மொபைலில் வரும் அழைப்பு யாரிடமிருந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ட்ரூகாலர் செயலி உதவுகிறது. மோசடி செய்திகள், அழைப்புகளைக் கண்டறிய ட்ரூகாலர் துணை … Read more