‘‘சமத்துவத்தின் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டது – இதுதான் ஆத்ம நிர்பார்’’ – ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: சமத்துவச் சிலை சீனாவில் உருவாக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் ஆத்ம நிர்பார் கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை … Read more

5ஜி உலகில் நுழையும் ஆப்பிள் நிறுவனம்: நான்கு புதிய மாடல்கள் அறிமுகம்

செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள நிகழ்ச்சியில் 5ஜி அம்சம் இருக்கும் நான்கு புதிய ஐஃபோன் 12 வரிசை ஸ்மார்ட்ஃபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. தொலைக்காட்சி, ஸ்மார்ட் ஹோம், விளையாட்டு என மற்ற சந்தைப் பொருட்களையும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்கிறது. இணையம் மூலமாக நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் 5.4 இன்ச் அகல ஐஃபோன் 12 மினி, 6.1 இன்ச் அகல ஐஃபோன் 12 மற்றும் ஐஃபோன் 12 ப்ரோ, 6.7 இன்ச் அகல ஐஃபோன் 12 ப்ரோ மேக்ஸ் … Read more

திமுக ஆட்சியால் வேதனைப்படும் மக்கள், அதிமுகவுக்கு வெற்றியைத் தருவர்: ஓபிஎஸ்

கிருஷ்ணகிரி: “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஒரு மகத்தான, மாபெரும் வெற்றியை பெரும்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பத்தாண்டு காலம் அதிமுக அரசு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அரசு செய்த சாதனைகளை இன்றைக்கு தமிழக மக்கள் எண்ணிப்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். திமுக ஆட்சி வந்ததற்கு பின்னால், அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாத ஒரு சூழல் இருக்கிறது என்பதை மக்கள் வேதனையுடன் எண்ணி பார்த்துக் … Read more

பள்ளி வளாகத்தில் ’ஜெய் ஸ்ரீராம்’, ’அல்லாஹ் அக்பர்’ கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது: கர்நாடக அமைச்சர் காட்டம்

பெங்களூரு: ‘ஜெய் ஸ்ரீராம்‘ என்றோ, ‘அல்லாஹ் அக்பர்‘ என்றோ பள்ளி வளாகத்தில் கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது என்று கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “சட்டம்-ஒழுங்கை யாரும் கையில் எடுத்துவிட முடியாது. எந்தத் தவறான செயலையும் அரசு விட்டுவைக்காது. மாண்டியாவில் அந்த மாணவி வரும்போது எந்த மாணவர்களும் அவரை சுற்றி வளைக்கவில்லை. எந்த மாணவர்களும் அவர் அருகில் செல்லவில்லை. ’ஜெய் ஸ்ரீராம்’ என்றோ, ’அல்லாஹ் அக்பர்’ என்றோ பள்ளி வளாகத்தில் … Read more

ஆண் குழந்தை பிறக்க பாகிஸ்தான் கர்ப்பிணியின் தலையில் ஆணியை அடித்த ஹீலர்

ஆண் குழந்தை பிறக்க பாகிஸ்தான் கர்ப்பிணியின் தலையில் ஆணியை அடித்த ஹீலரை போலீஸார் தேடி வருகின்றனர். பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் வந்தார். அவர் தனது தலையில் இருந்த ஆணியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரினார். அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் தலையில் ஆணி எப்படி வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது அவர், “நான் கர்ப்பமாக இருக்கிறேன். இந்தப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறக்க சடங்குகளைச் செய்யுமாறு … Read more

ஃபேஸ்புக் மெஸஞ்சர் சேவையில் புதிய அம்சங்கள் அறிமுகம்

ஃபேஸ்புக்கின் மெஸஞ்சர் சேவையில் புதிய தோற்றம், உரையாடலுக்கான தனி வண்ணம் உள்ளிட்ட புதிய அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தனது மெஸஞ்சர் சேவையில் அவ்வப்போது புதிய அம்சங்களை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. அப்படி சமீபத்தில் சில வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. “உலகளவில் நூறு கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருக்கும் எங்கள் சேவையின் நோக்கம், ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள பொதுவான ஒரு வழியாக இருக்க வேண்டும் என்பதுதான். தனிப்பட்ட முறையில் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருக்கும் … Read more

கிராம சபை போல ஏரியா சபை, விலையில்லா தரமான குடிநீர்… – மநீம வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குறுதிகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. மநீம வாக்குறுதிகள்: அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர், முறையான மழைநீர் சேகரிப்பு அமைப்பு உறுதி செய்யப்படும். காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்தை பரவலான பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படும். > கிராம சபை போல, … Read more

’10 நாட்களில் விவசாயக் கடன் ரத்து’ – உ.பி.யில் 3-வது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரியங்கா வாக்குறுதி

லக்னோ: உத்தரப் பிரதேசத் தேர்தலையொட்டி காங்கிரஸின் மூன்றாவது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரியங்கா காந்தி, ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 10 நாட்களிலேயே விவசாயக் கடன் ரத்து செய்யப்படும்” என்று வாக்குறுதி அளித்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரியங்கா காந்தி பேசியது: “நாங்கள் இதுவரை மூன்று அறிக்கைகள் வெளியிட்டுள்ளோம். ஒன்று பெண்களுக்கானது, இரண்டாவது இளைஞர்களுக்கானது. இதோ இப்போது மூன்றாவது அறிக்கையை வெளியிட்டுள்ளோம். உத்தரப் பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும்தான் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. மாநிலத்தில் 20 லட்சம் … Read more

லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவேசம்

ஒட்டாவா: கனடாவில் கட்டாய கரோனா தடுப்பூசிக்கு எதிராக லாரி ஒட்டுநர்கள் நடத்தும் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து கனடா நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ருடோ பேசும்போது, ”கரோனா பெருந்தொற்றால் அனைவரும் சோர்வடைந்துள்ளனர். குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள். நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க கடமைப்பட்டுள்ளோம். கரோனா தடுப்பூசிக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நமது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது, கனடா வாழ் மக்களின் அன்றாட வேலையை பாதிக்கிறது, நமது ஜனநாயகத்தை பாதிக்கிறது. … Read more

ஐபோன் 12 வரவால் குறைந்த ஐபோன் 11 விலை: இலவசமாக ஏர்பாட் தர ஆப்பிள் நிறுவனம் முடிவு

ஐபோன் 12 வரிசை மொபைல்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து ஐபோன் 11 வரிசை மொபைல்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது. ஐபோன் 11, 64 ஜிபி அளவுடைய மொபைல் ரூ.54,900, 128 ஜிபி அளவு ரூ.59,900 மற்றும் 256 ஜிபி அளவு ரூ.69,900 ஆகிய விலைகளில் தற்போது கிடைக்கிறது. ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் 64 ஜிபி அளவு ரூ.47,900க்கும், 128 ஜிபி அளவு ரூ.52,900 என்றும் குறைந்துள்ளது. ஐபோன் எஸ்ஈ 2020 64 ஜிபி மாடல் தற்போது ரூ.39,900க்கும், … Read more