வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக கேரள அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் கைது

திருவனந்தபுரம்: கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக நேற்று கைது செய்யப்பட்டார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அண்மையில் நடைபெற்ற அனந்தபுரி இந்து மகா சம்மேளன மாநாட்டில் ஜார்ஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் குளிர்பானம், தேநீரில்கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும். இந்துக்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி முஸ்லிம்களின் மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார். … Read more

நியாயவிலைக்கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய கண்காணிப்பு குழு – தமிழக அரசு

சென்னை: நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டம்தோறும் 4 அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன. இங்கு இலவசமாக வழங்கப்படும் அரிசியின் தரம்குறித்து அவ்வப்போது புகார் எழுந்து வந்தது. இதை தவிர்க்க,தரமற்ற அரிசியை கடைகளுக்கு அனுப்பக் கூடாது என்று பொறுப்புஅதிகாரிகளுக்கும், அவ்வாறுவந்தால் அதை மக்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது என்று கடைபணியாளர்களுக்கும் உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சில … Read more

4-வது அலை இன்னும் உருவாகவில்லை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூடுதல் இயக்குநர் தகவல்

புனே: இந்தியாவில் கரோனா 4-வது அலை இன்னும் உருவாகவில்லை என்றும் சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் டெல்லி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் தினசரி கரோனா தொற்று ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயர வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரவாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 82 டிகிரி முதல் 100 டிகிரிஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். … Read more

பாகிஸ்தான், சீன எல்லையில் நிலைமை இயல்பாக உள்ளது: புதிய ராணுவ தலைமை தளபதி தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தான், சீன எல்லை பகுதிகளில் நிலைமை இயல்பாக உள்ளது என புதிய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே கூறியுள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: “பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் நிலைமை இயல்பாக உள்ளது. இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் ஏற்கெனவே உள்ள நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட் டோம் என சீனாவிடம் இந்தியா தெளிவுபட கூறிவிட்டது. அதையும் மீறி எல்லையில் ஏற்கெனவே உள்ள நிலையை மாற்றும் நட வடிக்கையில் … Read more

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102 அதிகரிப்பு: ஓட்டலில் உணவுப் பொருள் விலை மேலும் உயரும் அபாயம்

சென்னை: சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102.50 உயர்ந்து, ரூ.2,508.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலைமேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்குநிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இதில் பெட்ரோல், டீசல்விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு விலைமாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த ஆண்டு … Read more

உ.பி. கோரக்பூர் கோயிலில் தாக்குதல் நடத்தியவருக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் தகவல்

லக்னோ: உத்தரபிரதேசம் கோரக்பூர் கோயிலில் தாக்குதல் நடத்திய அகமது முர்தஜா அப்பாஸி என்பவருக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது என்றும், அவர் மிகப் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தார் எனவும் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கூறியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் கோயிலின் தலைமை பூசாரியாக முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்த கோயிலுக்குள் கடந்த ஏப்ரல் 3ம் தேதி அன்று அகமது முர்தஜா(29) என்பவர் நுழைய முயன்றார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் … Read more

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை அழித்தது ரஷ்யா: ஒடேசா விமான ஓடுபாதையும் தகர்ப்பு

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கியஆயுதங்களை அழித்துவிட்டதாகவும் முக்கிய விமான நிலைய ஓடு பாதையை தகர்த்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 2 மாதங்களைக் கடந்து தொடர்கிறது. ரஷ்யாவின் தாக்கு தலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. மரியுபோல் நகரில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், சோவியத் காலத்து உருக்கு ஆலை பகுதியில் உள்ள தரைகீழ் … Read more

சென்னை – மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி பெயர்: நெடுஞ்சாலைத்துறை பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருச்சி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில்ரூ.2,124 கோடியில் 255 கி.மீ.இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலை, ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை’ என அழைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். தமிழக நெடுஞ்சாலைத்துறையின் 75-வது ஆண்டு பவளவிழா, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பவளவிழா நினைவுத்தூணை திறந்துவைத்து, விழா … Read more

விசாரணையின்போது விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல்

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (22) விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன், மனித உரிமைகள் ஆர்வலர்கள் சுதாராமலிங்கம், பி.எஸ்.அஜிதா, ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளரை கைது செய்ய … Read more