கண்காணிப்பு குழுவிடம் அதிகாரம் | கட்சிகளுடன் பேசி முடிவெடுக்க வேண்டும்: முதல்வருக்கு அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்

சென்னை: முல்லை பெரியாறு விவகாரத்தில் அணை பாதுகாப்பு அமைப்பின் அதிகாரத்தை கண்காணிப்புக் குழுவுக்கு அளிப்பது குறித்து அனைத்து கட்சியினருடன் பேசி முதல்வர் முடிவெடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். முல்லை பெரியாறு அணை தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீது எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘தற்போது கேரள அரசுடன் நட்புடன் உள்ள தமிழக முதல்வர், நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். … Read more

டெல்லியில் ராம நவமி ஊர்வலத்தில் கல்வீசிய நிலையில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பூமழை

புதுடெல்லி: டெல்லியில் ஜஹாங்கிர்புரியில் நடந்த ராம நவமி ஊர்வலத்தில் கற்கள் வீசிக் கலவரமாக மாறிய நிலையில் மங்கோல்புரியில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் முஸ்லிம்கள் பூமழை பொழிந்தது தொடர்பான வீடியோ பதிவுகள் வைரலாகி வருகின்றன. கடந்த 16-ல் ராம நவமி கொண்டாடப்பட்டது. இதையொட்டிடெல்லியின் ஜஹாங்கிர்புரி மசூதியின் அருகே மாலை 6.15 மணிக்குராம நவமி ஊர்வலம் வந்தபோதுமுகம்மது அன்ஸர் (35) என்பவர்தலைமையில் ஒரு கும்பல் மறித்தது. அங்கு இருவருக்கு இடையேநடைபெற்ற வாக்குவாதம் கலவரமாக மாறி, மசூதியின் மீது காவிக்கொடி நாட்ட … Read more

கிழக்கு பகுதி நகரமான கிரெமின்னாவை   ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது – உக்ரைன்

நோவோட்ருஷெஸ்க் (உக்ரைன்): உக்ரைனின் கிழக்கு பகுதி நகரமான கிரெமின்னாவை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், கீவின் ஆயுதப்படைகள் அருகிலுள்ள ரூபிஜ்னே குடியேற்றத்தில் ரஷ்யப்படைகள் மீது தாக்குதல் நடத்தின. கிரெமின்னாவில் ஞாயிறு முதல் திங்கள் வரை இரவில் பெரிய தாக்குதல் நடந்தது என்று லுகான்ஸ்க் பிராந்திய கவர்னர் செர்ஜி கெய்டே ஊடகத்திற்கான அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.அந்த அறிக்கையில், “ரஷ்ய … Read more

நீட் மசோதா விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கையை பொருத்து அனைத்துக்கட்சி கூட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது தொடர்பான ஆளுநரின் நடவடிக்கையை பார்த்துவிட்டு, தேவைப்பட்டால் சட்டப்பேரவை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசியதாவது: “ஏழரை கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ விலக்கு மசோதா, கடந்த 210 நாட்களாக கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் முடங்கிக் கிடக்கிறது. நூற்றாண்டு … Read more

திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 8 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்: 7 நாட்களில் 5.29 லட்சம் பேர் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சாமானிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 8 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 11-ம் தேதி முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச தரிசன டோக்கன் மையங்கள் 12-ம் தேதி திறக்கப்பட்டதால், சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரை டோக்கன் பெற வரிசையில் நுழைந்தனர். இதனால், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்தனர். … Read more

‘ஆம்வே இந்தியா’ நிறுவனத்தின் ரூ.757.77 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை:‘ஆம்வே இந்தியா’ நிறுவனத்தின் ரூ.757 கோடியே 77 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா உட்படபல்வேறு நாடுகளில் ‘ஆம்வே இந்தியா’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ‘மல்டி லெவல் மார்க்கெட்டிங்’:‘மல்டி லெவல் மார்க்கெட்டிங்’ என்ற முறையில், இந்நிறுவனத்தின் பொருட்களை விலை கொடுத்து வாங்கி உறுப்பினராகச் சேரும் நபர், அதன்பிறகு பலரையும் … Read more

டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக 23 பேர் கைது

புதுடெல்லி: டெல்லியில் கடந்த சனிக்கிழமை மத ஊர்வலத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா கூறியுள்ளார். டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்றோர் மீது மற்றொரு தரப்பினர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால்வன்முறை வெடித்தது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸார் உட்பட பலர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தஇடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லிகாவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா நேற்று … Read more

அதிமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் ஏப்.21, 25-ம் தேதிகளுக்கு மாற்றம்

சென்னை: அதிமுகவின் மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 21, 25 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அதிமுக அமைப்புரீதியாகச் செயல்படும் மாவட்டங்களின் ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை,மாநகராட்சி வார்டு நிர்வாகிகளுக்கான தேர்தல் 3 கட்டமாக நடத்தப்பட்டது. இதில் தேர்வான நிர்வாகிகளின் பட்டியலை அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டு வருகிறது. இதற்கிடையே, மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் 19-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், முதல்கட்டத் … Read more

தூய்மை இந்தியா திட்டம் மூலம் நாடு புதிய அத்தியாயங்களை எழுதுகிறது – பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தின்மூலம் நாடு புதிய அத்தியாயங்களை எழுதி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுவது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: மக்கள் ஒத்துழைப்பு: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11.5 கோடி வீடுகள் மற்றும் 58,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 3,300-க்கும் மேற்பட்ட நகரங்களில் … Read more

டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டி: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தங்கப் பதக்கம் வென்று அசத்தல்

கோபன்ஹேகன்: டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 800 மீட்டர் பிரிவில் இந்திய வீரர் வேதாந்த், பந்தய தூரத்தை 8:17.28 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் வெல்லும் 2-வது பதக்கம் இதுவாகும். கடந்த சனிக்கிழமை நடந்த 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வேதாந்த் வெள்ளிப் … Read more