இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த இந்தியா – சீனா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா – சீனா இடையேயான லடாக் எல்லைப் பிரச்சினை தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார். முன்னதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இஸ்லாமாபாத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தார். அங்கு காஷ்மீர் குறித்த சர்ச்சையான கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார். அவரது கருத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. … Read more

சோமாலியாவில் நான்கில் ஒருவர் பட்டினியால் பாதிப்பு: 40 ஆண்டுகளில் இல்லாத கடும் பஞ்சத்தால் மக்கள் அவதி

“என்னிடம் காரோ, கழுதை சவாரிக்கான பணமோ இல்லை. ஆனால், வறட்சியிலிருந்து தப்பித்து 200 கி.மீ. தொலைவில் உள்ள பையோடாவுக்கு செல்ல வேண்டியிருந்தது. எனது குடும்பத்தினருடன் 15 நாட்கள் நடந்தே அங்கு சென்றேன். இந்த பயணத்தில் எனது 3 வயது குழந்தையும், எனது மனைவியும் தாகத்தால் உயிரிழந்தனர்” என்கிறார் 47 வயதான அலி அதான். சோமாலியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக அலி அதானின் கால் நடைகள் எல்லாம் உயிரிழக்க, அலி உட்பட அவரது குடும்பத்தினர் 7 பேர் … Read more

சைவ உணவு நிபந்தனை நீக்கப்பட்டது ஏன்? – அரசு போக்குவரத்துக் கழகம் விளக்கம்

சென்னை: அரசுப் பேருந்துகள் இனி பயண வழியில் உள்ள அரசு லைசன்ஸ் பெற்ற சைவ உணவகங்களில் மட்டுமே நின்று செல்லலாம் என்று போக்குவரத்து கழகம் நிபந்தனை விதித்துள்ளதாக வெளியான தகவல் குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக முதன்மைச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான விளக்கத்தில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் சாலையோர உணவகங்களில் பயணிகள் உணவு அருந்துவதற்கேற்ப பேருந்து நிறுத்துவது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அப்போது ஒப்பந்தப்புள்ளி … Read more

உ.பி. | கைப்பேசியை பறித்த குரங்கை விரட்டிய போலீஸ் படை; 3 கி.மீ. 'தண்ணீர் காட்டிய' பின் தூக்கியெறிந்த சம்பவம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அதிக எண்ணிக்கையில் உள்ள குரங்குகள் பல்வேறு தொல்லைகளை பொதுமக்களுக்கு அளிப்பது வழக்கமாகி விட்டது. தனக்கு கிடைக்காத உணவினால், இவ்வாறு செய்யும் குரங்குகள் தற்போது கைப்பேசிகளை பிடுங்கத் தொடங்கிவிட்டன. பாக்பத் காவல் நிலையத்தில் ஒரு போலீஸிடம் கைப்பேசியை பறித்தது ஒரு குரங்கு. இதை மீட்க போலீஸ் படை, சுமார் மூன்று கி.மீ தூரம் விரட்டிய பின், தூக்கி எறிந்துச் சென்றது குரங்கு. பாக்பத்தின் பினவுலி காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் தேவேந்திர குமார் பின்புறப்பகுதியில் … Read more

சென்னை தொழிலதிபர் கடத்தல் வழக்கு | தலைமறைவான 3 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்க உத்தரவு

சென்னை: தொழிலதிபரை கடத்தி சொத்துகளை அபகரிக்க உடந்தையாக இருந்த வழக்கில் தலைமறைவாக உள்ள காவல்துறை உதவி ஆணையர், ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க எழும்பூர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை சிறை பிடித்து சித்ரவதை செய்ததோடு, அவரின் பெயரிலிருந்த சொத்துகளை எழுதி வாங்கியதாக, திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, … Read more

பிஹாரில் விஐபி கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ.க்களும் பாஜக.வில் இணைந்தனர்

பாட்னா: பிஹார் மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியூ) 75 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. முதல்வராக நிதிஷ்குமார் பதவி வகிக்கிறார். 74 இடங்களுடன் பாஜக. இருந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்ற விகாஷீல் இன்சான் கட்சியில் (விஐபி) 3 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். விஐபி கட்சித் தலைவர் முகேஷ் சஹானி மாநில அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில், விஐபி கட்சியின் ராஜு குமார் சிங், … Read more

இனி டாலர் இல்லை, ரூபிள் மட்டுமே! – பொருளாதார தடையை தகர்க்க புதின் புதிய வியூகம்: அதிர்ச்சியில் ஐரோப்பிய நாடுகள்

மாஸ்கோ: ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் தடையை தகர்க்க அந்நாட்டு அதிபர் புதின் புதிய வியூகத்தை வகுத்துள்ளார். நட்பற்ற நாடுகள் கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு வாங்க ரஷ்ய ரூபிள்களில் இனி பணம் செலுத்த வேண்டும் என அவர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக … Read more

‘நான் ஒப்பந்ததாரர் இல்லை’ – மதுரையில் கலைஞர் நூலக ஆய்வுக்கு வந்த அமைச்சர் எ.வ.வேலு கேலி

மதுரை; ‘‘தனிப்பட்ட முறையில் என்னுடைய கல்வி நிறுவனங்களுக்காக 35 ஆண்டு காலமாக சொந்தமாகக் கட்டிடம் கட்டிய அனுபவம் இருக்கிறது. கையை வைத்தே ஒரு கட்டிடத்தின் தரத்தை கண்டுபிடித்துவிடுவேன். இதனால் நான் ஒப்பந்தர் என்று அர்த்தம் இல்லை’’ என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக் கட்டிட வளாகத்தில் ரூ.99 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த நூலகத்தின் கட்டுமானப் பணிகளை இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் … Read more

பிர்பும் படுகொலை; விசாரணை சிபிஐக்கு மாற்றம்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை மத்திய ஏஜென்சியிடம் ஒப்படைக்கக் கூடாது என்ற மம்தா பானர்ஜி அரசின் கோரிக்கையை நிராகரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி இன்று உத்தரவு பிறப்பித்தது. மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதி யில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏற்பட்ட கலவரத்தில் போக்டுய் என்ற கிராமத்தில் வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ … Read more

மாளிகைமேடு அகழாய்வில் 25 செ.மீ. உயர மன் பானை, 30 அடுக்கு செங்கல் சுவர் கண்டுபிடிப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் 25 செமீ உயரம் கொண்ட பழங்கால மண்பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு பகுதியில் தொல்லியல் தளத்தில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியினை கடந்த மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் தற்போது முதல் முறையாக 25 செ.மீ. உயரமும், 12.5 செ.மீ. அகலம் கொண்ட பழங்காலத்து மண்பானை ஒன்றும், மண்ணாலான கெண்டி மூக்கு மற்றும் 30 அடுக்கு கொண்ட செங்கல் … Read more