புதுச்சேரியில் மார்ச் 30-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: பேரவைத் தலைவர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 2022-23-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை வரும் 30-ம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார் என்று பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பேரவைத் தலைவர் செல்வம் கூறியது: “புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 23-ல் நடந்தது. அக்கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதியாக வரும் 30-ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. அக்கூட்டத்தொடரில் 2022-23-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி … Read more

ஹிஜாப் விவகாரத்தால் புறக்கணித்த முஸ்லிம் மாணவிகளுக்கு மறுதேர்வு கிடையாது: கர்நாடக அரசு திட்டவட்டம்

பெங்களூரு: ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து தேர்வை புறக்கணித்த முஸ்லிம் மாணவிகளுக்கு மறுதேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்படாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் கல்வி நிலை யங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து உடுப்பியில் 6 கல்லூரி மாணவிகள் கடந்த ஜனவரியில் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற பருவத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வையும் புறக்கணித்தனர். மேலும், ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. … Read more

சீனாவில் கரோனா அலை: தொழில் நகரில் திடீர் லாக்டவுன்; முடங்கிய 90 லட்சம் மக்கள்

பெய்ஜிங்: சீனாவில் ஷென்யாங் நகரம் கடும் பாதிப்பை சந்தித்து வருவதால் அங்கு நேற்று திடீரென லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. சுமார் 90 லட்சம் மக்கள் வசிக்கும் தொழில் நகரமான ஷென்யாங் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் தான் கரோனா நோயாளி முதன் முதலில் கண்டறியப்பட்டாலும் அங்கிருந்துதான் உருவானதா என்ற ஆராய்ச்சிகள் இரண்டாண்டுகளுக்கும் மேல் நீண்டு கொண்டிருக்கின்றன. ஆனால் கரோனா இல்லாத தேசம் என்ற இலக்கை முன் வைத்து சீனா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஒரே ஒரு நோயாளி கண்டறியப்பட்டாலும் … Read more

புதுச்சேரியில் மார்ச் 29-ல் வாகனங்கள் ஓடாது: அனைத்து தொழிற்சங்கத்தினர் கூட்டாக அறிவிப்பு

புதுச்சேரி: முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் வரும் 29ம் தேதி அன்று புதுச்சேரியில் வாகனங்கள் ஓடாது என்று அனைத்து தொழிற்சங்கத்தினர் கூட்டாக அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 28, 29ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. புதுவையில் ஐஎன்டியூசி, ஏஐடியூசி, சிஐடியூ, தொமுச, எம்எல்எப், எல்எல்எப், ஏஐசிசிடியூ, ஏஐயூடியூசி, என்டிஎல்எப் ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து 28ம் தேதி வேலைநிறுத்தம், 29ம் தேதி முழு அடைப்பு போராட்டமும் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக … Read more

உ.பி. மதரஸாக்களில் குறைந்துவரும் மாணவர்கள்: 2016-ல் 4 லட்சமாக இருந்தவர்கள் 1.2 லட்சமாகக் குறைந்தனர்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் மதரஸாக் களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. முன்ஷி எனும் எட்டாம் வகுப்பு மற்றும் மவுல்வி எனும் பத்தாம் வகுப்பிற்கான சான்றிதழ்கள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முன்ஷி, மவுல்வி படிப்பு முடித்து சான்றிதழ் பெற்ற வர்களுக்கு, இதர பொதுக் கல்விக் கானப் பள்ளிகளில் உ.பி. அரசின் விதிப்படி, பிளஸ் 2 வகுப்பில் சேர்க்க வேண்டும். ஆனால், இந்த அனுமதியை அரசு பள்ளிகள் மட்டும் அளிக்கின்றனவே தவிர தனியார் பள்ளிகள் அளிப்பதில்லை. … Read more

'ஜெயலலிதா இறப்பதற்குமுன் அவரை நான் நேரில் பார்த்தேன்' – ஓபிஎஸ்

சென்னை: கடந்த 2016 டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன் நான் உட்பட 3 அமைச்சர்கள் அவரை நேரில் பார்த்தோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 22) ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்து வருகிறார். விசாரணையில் அவர், “2016 டிசம்பர் 5-ம் தேதி இறப்பதற்கு முன்பாக ஜெயலலிதாவை நான் … Read more

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. கடந்த 2021 நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பின்னர் முதன்முறையாக பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. 137 நாட்களுக்குப் பின்னர் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உருளை ஒன்று ரூ.50 அதிகரித்துள்ளது. 2021 அக்டோபர் 6 ஆம் தேதிக்குப் பின்னர் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் … Read more

பெட்ரோல் பங்க்-குகளில் மக்கள் போராடுவதைத் தடுக்க ராணுவத்தை நிறுத்திய இலங்கை அரசு

கொழம்பு: இலங்கையில் பெட்ரோல் பங்க்-குகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ராணுவப் படையினரை நிறுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு கிலோ கோழி இறைச்சி … Read more

மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா? – காவல்துறைக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: மாற்றுத்திறனாளிகளை ஏதோ பயங்கரவாதிகளைப் போலக் கருதி காவல்துறை தடுத்து கைது செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவி தொகையினை உயர்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், போராட்டம் காரணமாக மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல ஊர்களில் இருந்து சென்னை … Read more

சாலையோர வியாபாரிகளுக்கு பிணையில்லா வங்கிக் கடன்: தமிழகத்தில் 1,59,065 பேர் பயன்

புதுடெல்லி: பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் தற்சார்பு நிதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1,59,065 பேர் பிணையில்லா கடன் பெற்று பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியதாவது: கோவிட் சமயத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்குவதற்காக, பிணையில்லாத பணி மூலதனக் கடனை எளிதாக்குவதற்காக, கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பிரதமரின் சாலையோர … Read more