நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்: திருச்சியில் 2 வாரம் தங்கியிருக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் கைதானமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நிலத்தில் உள்ள மீன் வலை தொழிற்சாலை நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. 2016-ம் ஆண்டில் நிலம் அபகரிப்பு இந்நிலையில், ஜெயக்குமார் கடந்த 2016-ம் ஆண்டு அமைச்சராக பதவி வகித்தபோது தனது அரசியல் செல்வாக்கை … Read more

இந்தியாவில் உருவாக்கப்பட்ட விமானிகள் பயிற்சி விமானம்: ஹன்சா-என்.ஜி.யின் கடல் மட்ட சோதனை வெற்றி

விமானிகள் பயிற்சி பெறுவதற்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஹன்சா-என்.ஜி நவீன பயிற்சி விமானத்தின் கடல் மட்ட சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) ஆய்வுக்கூடங்களில் ஒன்று பெங்களூருவிலுள்ள தேசிய விமானவியல் ஆய்வகம் (என்ஏஎல்). இந்த ஆய்வகம், விமானி பயிற்சிக்காக ஹன்சா என்ற இரு நபர் விமானத்தை 1993-ல் உருவாக்கியது. மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டபுதிய தலைமுறை ஹன்சா – என்.ஜி (New Generation) என்ற அடையாளத்தோடு செப்.2021-ல் முதன்முதலாக பறக்க விடப்பட்டது. … Read more

உக்ரைனில் 16-வது நாளாக நீடிக்கும் ராணுவ தாக்குதல்; அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: விளாடிமிர் புதின் புதிய தகவல்

மாஸ்கோ: ரஷ்யா, உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளிடையே நேற்று 16-வது நாளாக போர் நீடித்தது. இதனிடையே இருதரப்பும் பெலாரஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவும், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமைத்ரோ குலேபாவும் நேற்று முன்தினம் துருக்கி நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் … Read more

திருப்பத்தூர்: எருது விடும் விழாவில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, எருது விடும் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 27- ம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் எருதுவிடும் விழா மறு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் எருது விடும் விழா வீராங்குப்பம் கிராமத்தில் … Read more

பெண் ஊழியர்களுக்கான இடமாற்றக் கொள்கையை கருணை அடிப்படையில் உருவாக்கவேண்டும்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

புதுடெல்லி: பெண் ஊழியர்களுக்கான இடமாற்றக் கொள்கைகளை கருணை அடிப்படையில் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் சார்பில் பிறப்பிக்கப்பட்ட ஆணையங்களுக்கு இடையேயான இடமாற்றங்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்தது.இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்புவிசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில்தலையிட … Read more

உக்ரைன் போரில் உயிர் பிழைத்தது அதிசயம்: இந்தியா திரும்பிய மாணவர்கள் தகவல்

புதுடெல்லி: உக்ரைனின் சுமி நகரில் செயல்படும் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஏராளமான இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த நகரம் மீது ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன்காரணமாக அங்கு கல்வி பயின்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ரஷ்ய ராணுவம் கடந்த 8-ம் தேதி போர் நிறுத்தத்தை அமல் செய்தது. இதை பயன்படுத்தி அன்றைய தினம், சுமி நகரில் சிக்கித் தவித்த 674 இந்திய … Read more

எனது முடிவுகளில் குடும்பத் தலையீடு இருக்காது – தாம்பரம் மேயர் க.வசந்தகுமாரி சிறப்புப் பேட்டி

”எங்கள் வார்ட்டில் அடிக்கடி கட்சிக் கூட்டங்கள் நடக்கும். அதனை நான் சிறுவயதிலிருந்தே கவனித்து வந்திருக்கிறேன். அவ்வாறுதான் எனக்கு அரசியல் ஆர்வம் வந்தது” என்கிறார் தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்றுள்ள க.வசந்தகுமாரி. கல் உடைக்கும் தொழிலாளியின் மகள் வசந்த குமாரி. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையடுத்து தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயர், தமிழகத்தின் இளம்வயது மேயர் என்ற பெருமைக்குரியவராகியுள்ளார். அடித்தட்டு குடும்பத்திலிருந்து வந்துள்ளதால் வசந்தகுமாரியின் பார்வையும், பேச்சும் அம்மக்களை நோக்கியதாகவே உள்ளது. ’இந்து தமிழ் திசை’ … Read more

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் 3 முறை வென்ற தொகுதியில் பின்னடைவு

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, அவர் போட்டியிட்ட இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பின்தங்கியுள்ளார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது. ஆளும் காங்கிரஸ் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியின் … Read more

இளவரசி மருமகனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: சசிகலா உறவினரான இளவரசி மருமகனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் , சேலத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகியான கருணாகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிமுக சார்பில் சேலத்தில் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு சீட் வாங்கித் தருவதாக இளவரசியின் மருமகனான ராஜராஜன் கூறினார். இதற்காக அவர், என்னிடமிருந்து சுமார் 5 … Read more

உத்தராகண்டில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை: பின்தங்கும் முதல்வர் வேட்பாளர் தாமி

டேராடூன்: உத்தராகண்டில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக மேற்கொண்ட கடும் பிரயத்தனங்களுக்கு பலன் கிடைத்துள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தவுடன் தபால் வாக்கு நிலவரம் காங்கிரஸுக்கு சற்றே சாதகமாக இருந்தது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகள் எண்ணப்பட்டபோது பாஜக முன்னிலை பெறத் தொடங்கியது. 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட உத்தராகண்டில் அண்மை நிலவரப்படி, பாஜக 44, காங்கிரஸ் 21, பகுஜன் சமாஜ் 2, ஆம் ஆத்மி 1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கின்றன. சுயேச்சைகள் 2 இடங்களில் … Read more