தமிழகத்தில் 3000க்கும் கீழ் குறைந்தது கரோனா தொற்று: சென்னையில் 546 பேருக்கு பாதிப்பு- 11,154 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 2,812 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,33,966. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,46,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,48,419. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 81,01,593 பேர் வந்துள்ளனர். சென்னையில் 546 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

உ.பி.யின் 55 தொகுதிகளில் வெற்றிக்கு வித்திடும் முஸ்லிம்கள்: வாக்குகள் பிரிவதால் பலனடையும் பாஜக!

புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 55 இடங்களில் நாளை மறுநாள் (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 55 தொகுதிகளின் கள அரசியல் நிலவரம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. இதன் அடுத்த எண்ணிக்கையில் ஜாட் சமூகத்தினர் உள்ளனர். இதனால், பாஜக தன் … Read more

பிப்ரவரி 12: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,33,966 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.11 வரை பிப்.12 பிப்.11 … Read more

பாஜக வென்றால் பொது சிவில் சட்டம் அமலாகும் – உத்தராகண்ட் முதல்வர் தாமி சர்ச்சை

புதுடெல்லி: உத்தராகண்டில் பாஜக வென்றால், பொது சிவில் சட்டம் அமலாகும் என அம்மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி உறுதி அளித்துள்ளார். பாஜக ஆளும் இம்மாநிலத்தில் மீண்டும் அவர் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்த வாக்குறுதியை கொடுத்துள்ளார். உத்தர பிரதேசத்திலிருந்து பிரிந்த மாநிலம் உத்தராகண்ட். இம்மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ல் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜகவின் முதல்வராக புஷ்கர்சிங் தாமி வகிக்கிறார். தனது வெற்றிக்காக தீவிரப் பிரச்சாரம் செய்தவர் அதன் கடைசிநாளான … Read more

பிப்ரவரி 12: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,33,966 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம்: சிங்கப்பூர் விமான கண்காட்சியில் பங்கேற்கிறது

புதுடெல்லி: சிங்கப்பூரில் விமான கண்காட்சி -2022-ல் இலகு ரக தேஜஸ் போர் விமானம் பங்கேற்கிறது. விமானப்படையை மேலும் பலப்படுத்தும் வகையில் நவீன தேஜஸ் மார்க் 1 ரக போர் விமானம் கடந்த ஆண்டு விமானப்படையில் இணைக்கப்பட்டது. தேஜஸ் ரக விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. கூடுதல் சிறப்பு அம்சங்கள், தாக்குதல், கண்காணிப்பு திறன் கொண்டவை. இந்த இலகு ரக விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்திடம் இருந்து இந்த விமானங்கள் இந்திய விமானப்படைக்கு வாங்கப்படுகிறது. … Read more

’தொகை டெபாசிட்’ – கட்சிகள், அமைப்புகள் பேரணிக்கு புதிய நிபந்தனை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை

மதுரை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் மத நிறுவனங்களுக்கு பேரணி நடத்த அனுமதி வழங்கும்போது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுவதை தடுக்கவும், அதனை ஈடுகட்டவும் முன்கூட்டியே அதற்கான தொகையை டெபாசிட் செய்ய நிபந்தனை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. சிவகங்கை ஸ்ரீ சொர்ணகாளீஸ்வரர் கோயில் கோபுரம் வழியாக புனித அருளானந்தர் ஆலய தேரை கொண்டுச்செல்ல அனுமதிக்க கூடாது எனக் கேட்டு, ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு … Read more

2 தொழிலதிபர்களுக்காக நாட்டின் கொள்கைகளை வகுக்கும் பிரதமர் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

டேராடூன்: பிரதமர் மோடியின் நண்பர்களான இரண்டு தொழிலதிபர்களுக்காகவே ஒட்டுமொத்த நாட்டின் கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. முன்னணி ஊடகங்கள் நடத்திய … Read more

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளைத் திறக்க அனுமதி

சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மார்ச் 2-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டுப் பள்ளிகளைத் திறக்கவும், பொருட்காட்சிகள் நடத்திக் கொள்ள அனுமதியளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை எண்.53 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 28-01-2022-ன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மத்திய … Read more

இந்து அவமதிப்புக்காக காங்கிரஸில் போட்டாபோட்டியே நடக்கிறது: யோகி ஆதித்யநாத்

உத்தர்காண்ட்: இந்து அவமதிப்பே காங்கிரஸுக்கு எப்போதும் இலக்கு. இதற்காக கட்சிக்குள் அவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இவ்வேளையை செய்கின்றனர் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அங்கு இறுதிக்கட்டப் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தெஹ்ரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “இந்து அவமதிப்பை மேற்கொள்வதில் காங்கிரஸில் கடும் போட்டி நிலவுகிறது. … Read more