சாம்சங்கின் புதிய எம்51: அசுரத்தனமான பேட்டரி திறனுடன் அறிமுகம்

சாம்சங் எம் வரிசை மொபைல்களில் புதிய அறிமுகமாக எம்51 என்கிற மொபைலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் பேட்டரி திறனை மோசமான அசுரன் என்று வர்ணித்து சாம்சங் விளம்பரம் செய்துள்ளது கேலக்ஸி எம்51 மாடலின் விலை ரூ.24,999. இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொள்ளளவும் உள்ளது. ரூ.26,999 விலைக்கு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொள்ளளவு கிடைக்கும். செப்டம்பர் 18 முதல், அமேசான், சாம்சங் இணையதளங்களிலும், கடைகளிலும் விற்பனைக்கு வரவுள்ளது. … Read more

உளுந்தூர்பேட்டை: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு – கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்?

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை பகுதியில் 100 நாள் வேலை தொடர்பாக குறித்து கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞரை ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் தாக்கியதாகவும், தாக்கியவரை விடுத்து தாக்குதலுக்கு உள்ளான இளைஞரையே போலீஸ் கைது செய்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எஸ்.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (34). இவர் அப்பகுதியில் இ.சேவை மையம் நடத்தி வருகிறார். நேற்று மலையனூர் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சாலையில் 100 நாள் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு … Read more

'அவர் ஊழியர் அல்ல; எனது பார்ட்னர்' – தொழிலாளிக்கு பென்ஸ் கார் பரிசளித்த கேரள தொழிலதிபர்

கோழிக்கோடு: கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது தொழிலாளி ஒருவருக்கு விலைமதிப்பு மிக்க மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசளித்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது. கேரளாவில் மிகப்பெரிய டிஜிட்டல் ரீடெய்ல் ஸ்டோரான MyG குழுமத்தின் உரிமையாளர் ஏ.கே.ஷாஜி. இந்த நிறுவனத்தின் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் அனிஷ் என்பவர். கடந்த 22 வருடங்களாக அனிஷ், ஷாஜியிடம் பணிபுரிந்துவருகிறார். MyG நிறுவனத்தை தொடங்கியதில் இருந்து ஷாஜியுடன் பயணித்து வரும் அனிஷ், அந்த நிறுவனத்தில் மார்க்கெட்டிங், பராமரிப்பு மற்றும் … Read more

பதிவேற்றிய ட்வீட்டைத் திருத்தம் செய்யும் வசதியா?- ட்விட்டர் மறுப்பு

ட்விட்டர் தளத்தில் ஒரு ட்வீட்டுக்குப் பதிலாகப் போடும் ட்வீட்டில் திருத்தம் செய்யும் வசதி திடீரென சில பயனர்களுக்குக் கிடைத்தது. ஆனால், இது தெரியாமல் நடந்த தவறு என்று ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் பகிரப்படும் ட்வீட்டுகளையோ அதற்கு வரும் ப்தில் ட்வீட்டுகளையோ பயனர்கள் திருத்த முடியாது (edit). ட்வீட்டில் தவறாக ஏதாவது எழுத்துப் பிழையோ, கருத்துப் பிழையோ, தகவல் பிழையோ இருந்தால் அதை மொத்தமாக நீக்கிவிட்டு புதிதாகத்தான் ட்வீட் செய்ய வேண்டும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு … Read more

தமிழகத்தில் இன்று 3,592 பேருக்குக் கரோனா: சென்னையில் 663 பேருக்கு பாதிப்பு; 14,182 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 3,592 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,28,068. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,45,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,23,214. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 663 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படுவதை தடுக்க, உ.பி.-யில் பாஜக அரசு அவசியம்: பிரதமர் மோடி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, பாஜக தலைமையிலான அரசு அவசியம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 14- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, சஹரான்பூரில் பாஜக நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசும்போது, “முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய … Read more

டிக் டாக் அமெரிக்கப் பிரிவை ஆரக்கிள் நிறுவனத்துக்கு விற்க முடிவு

டிக் டாக் செயலியின் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம், ஆரக்கிள் நிறுவனத்துக்கு தங்களது அமெரிக்கப் பிரிவை விற்க முடிவு செய்துள்ளது. மைக்ரோசாஃப்டுக்கும், ஆரக்கிளுக்கும் இடையே நடந்த போட்டியில் ஆரக்கிளே முந்தியுள்ளது. ஆனால், இந்த விற்பனையின் மூலம் டிக் டாக்கின் பெரும்பான்மையான பங்குகளும் ஆரக்கிள் நிறுவனத்துக்குச் செல்லுமா என்பது பற்றிய தெளிவு இன்னும் தரப்படவில்லை. மேலும் இது ஒட்டுமொத்த விற்பனை போல அல்ல என்றும், அமெரிக்காவில் டிக் டாக்கின் செயல்பாட்டுக்கு, தங்களது க்ளவுட் தொழில்நுட்பம் மூலம் ஆரக்கிள் … Read more

ஹஜ் பயணிகளுக்கு உதவும் தன்னார்வலாராகச் செல்ல பிப். 23-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

சென்னை: ஹஜ் பயணிகளுக்கு உதவ தன்னார்வத் தொண்டர்களாக உடன் செல்ல விருப்புவர்கள் பிப். 23-க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மற்றும் இதர மாநில ஹஜ் குழுக்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா செல்லும் புனிதப் பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஹஜ் தன்னார்வத் … Read more

'காலனி ஆதிக்கத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறதா மத்திய அரசு?' – மாநிலங்களவையில் கனிமொழி சோமுவின் முதல் பேச்சு

புதுடெல்லி: திமுக மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி என்.வி.என் சோமு இன்று மாநிலங்களவையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அதில், மத்திய அரசின் திட்டங்களையும், தமிழக அரசின் திட்டங்களையும் ஒப்பிட்டு கடுமையாக சாடினார். அவர் தனது பேச்சில், “கரோனா பேரிடரின் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ள இந்த நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஏழை, நடுத்தர மக்களின் உயர்வுக்கு வழிவகுக்கும் வகையிலான நிதிக்கட்டமைப்பு மற்றும் திட்டமிடலை எதிர்பார்த்தோம். ஆனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நடுத்தர வர்க்கத்தினரின் நிதிநிலையை … Read more

ஆரக்கிளுக்கு டிக்டாக் விற்கப்படாது: சீன ஊடகம் தகவல், மௌனம் காக்கும் நிறுவனம்

டிக்டாக்கின் அமெரிக்க செயல்பாட்டுப் பிரிவை ஆரக்கிள் நிறுவனம் வாங்கவுள்ளதாக வந்த தகவல் பொய் என்றும், அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், சீன அரசு நடத்தும் ஆங்கில தொலைக்காட்சி சேனலான சிஜிடிஎன் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம், பாதுகாப்புக் காரணங்களுக்காக டிக்டாக் உட்பட 58 சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம், டிக்டாக்கின் அமெரிக்க பிரிவு செயல்பாடுகளை செப்டம்பர் மாதத்துக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கவில்லையென்றால், டிக்டாக் செயலி அமெரிக்காவிலும் … Read more