பிப்ரவரி 8: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,20,505 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

நான் தொடர்ந்து ஹிஜாப் அணிவேன்; எனது இந்து நண்பர்கள் துணையாக இருந்தனர்: கர்நாடக மாணவி பேட்டி

பெங்களூரு: கர்நாடகவில் புர்கா அணிந்து வந்த மாணவியை நோக்கி, காவித் தூண்டு அணிந்திருந்த மாணவர்கள் கோஷம் எழுப்பிய வீடியோ வைரலாகி வந்த நிலையில், தற்போது அந்த மாணவி தனக்கு நேர்ந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இன்று காலை மாண்டியாவில் பிஇஎஸ் கல்லூரிக்கு புர்கா அணிந்து தனியாக மாணவி ஒருவர் வந்தார். அவரைக் கண்டதும் காவித் துண்டு அணிந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள், அவர் முன் நின்று ”ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பினர். அப்பெண்ணும் அம்மாணவர்களுக்கு எதிராக … Read more

இறுதிகட்டத்தை எட்டியது 5ஜி நெட்வொர்க்: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: 5ஜி நெட்வொர்க் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிவருவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்திய தொலைதொடர்பு துறையினர் தகுதிவாய்ந்த வெளிநாட்டு கொள்முதலாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக, ‘இந்தியா டெலிகாம் 2022’ எனும் பிரத்யேக சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று தொடங்கியது. இந்திய அரசின் வர்த்தகத் துறையின் சந்தை அணுகல் முன்முயற்சி திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்புத் துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடன் தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் 2022 … Read more

வேட்பாளர்கள் அதிகம் – திருச்சியில் 2 வார்டுகளில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவுக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சியில் 65 வார்டுகள், 5 நகராட்சிகளில் 120 வார்டுகள், 14 பேரூராட்சிகளில் 216 வார்டுகள் என மொத்தம் 401 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்படவிருந்தது. இதனிடையே, திமுகவைச் சேர்ந்த துறையூர் நகராட்சி 10 வது வார்டில் முரளி, தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி 8 வது வார்டில் கருணாநிதி, தொட்டியம் பேரூராட்சி 13 வது வார்டில் … Read more

ஹிஜாப் விவகாரம், எதிர்வினைகளின் தாக்கம்: கர்நாடகாவில் 3 நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் எதிர்வினை என்ற பெயரில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்த நிலையில், கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். … Read more

ஃபிளாஷ் ப்ளேயருக்கு விடை கொடுத்த அடோபி: விண்டோஸிலும் நீக்கம்

ஃபிளாஷ் ப்ளேயருக்கு அடோபி நிறுவனம் அதிகாரபூர்வமாக விடை கொடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் சமீபத்திய பிடிஎஃப்பை இயக்குவதற்கான மென்பொருள்களில் ஃபிளாஷைப் பயன்படுத்தவில்லை. மேலும் சில முக்கியப் பாதுகாப்புப் பிரச்சினைகளையும் சரி செய்துள்ளது. ஃப்ளாஷைச் சார்ந்து கொடுக்கப்பட்டிருந்த தேர்வுகள் தற்போது இன்னொரு டூல்பார் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Update, Add, Delete, Export, Archive ஆகிய தேர்வுகள் உள்ளன. இந்த வருடத்தின் கடைசியில் ஃபிளாஷ் மென்பொருளை ஒட்டுமொத்தமாக நீக்கும் அடோபி நிறுவனம், ஃபிளாஷ் இல்லாத எதிர்காலத்துக்குத் தயாராகி வரும் அடோபி, மார்க் … Read more

மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதா: ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே ஒப்புதல் தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில், எந்த திருத்தமுமின்றி, மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க, சரியான முடிவு. ஆனாலும், நீட் விலக்கு என்ற இலக்கை எட்ட … Read more

கர்நாடகாவில் புர்கா அணிந்து வந்த மாணவியை நோக்கி கோஷமிட்ட காவித் துண்டு மாணவர்கள் – நெட்டிசன்கள் கொந்தளிப்பு

பெங்களூரு: கர்நாடகவில் புர்கா அணிந்து வந்த மாணவியை நோக்கி, காவித் தூண்டு அணிந்திருந்த மாணவர்கள் கோஷம் எழுப்பிய வீடியோ வைரலாகி வருவதுடன், அம்மாணவர்களின் செயலுக்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை … Read more

ரீவைண்ட் 2020 கிடையாது: யூடியூப் அறிவிப்பு

இந்த வருடம் ரீவைண்ட் தொகுப்பு பகிரப்படாது என யூடியூப் தளம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், அந்த வருடம் யூடியூப் தளத்தில் பிரபலமான முகங்கள், காணொலிகளின் தொகுப்பை அந்தத் தளம் வெளியிட்டு வருகிறது. ரீவைண்ட் என்று அழைக்கப்பட்டு வரும் இந்தத் தொகுப்பு கடந்த பத்து வருடங்களாகத் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனால், கரோனா தொற்று காரணமாக சர்வதேச அளவில் மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த வருடம் இந்த ரீவைண்ட் தொகுப்பை வெளியிடப்போவதில்லை என யூடியூப் தளம் … Read more

சட்டக் கல்வியின் தரத்தை ஒருபோதும் குறைக்க கூடாது: அகில இந்திய பார் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

சென்னை: நாடு முழுவதும் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான அளவுகோலையும், சட்டக் கல்வியின் தரத்தையும் ஒருபோதும் குறைக்கக் கூடாது என்று அகில இந்திய பார் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.‘வேறு பணி செய்துவரும் பெண் ஒருவர், தனது வேலையை விட்டு விடாமல் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொள்ளலாம்’ என்று குஜராத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அகில இந்திய பார் கவுன்சில் மேல்முறையீடு செய்தது. அதில், ‘வருமானம் ஈட்டும் வேலையில் உள்ள யார் … Read more