இந்தியாவில் புதிதாக 58,077 பேருக்கு கரோனா: நாட்டில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 171.79 கோடியாக உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 58,077 என்றளவில் உள்ளது. அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதமும் 3.89% என்றளவில் சரிந்துள்ளது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்றாளர் கண்டறியப்பட்டார். அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற … Read more

13 அடி நீள மேசை.. தடுப்பூசி செலுத்த மறுத்த பிரான்ஸ் அதிபருக்கு கெடுபிடி காட்டிய ரஷ்யா 

மாஸ்கோ: உக்ரைன் விவகாரம் உச்சமடைந்துள்ள நிலையில் ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியாக சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடுமையான கெடுபிடிகளுக்கு ஆளாக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7 ஆம் தேதி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் பேச்சுவார்த்தை நடத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் இருவரும் மிக நீண்ட மேசைக்கு எதிரெதிரே அமர்ந்திருக்கின்றனர். அந்த மேசையின் நீளம் 13 அடி எனத் தெரிகிறது. ரஷ்யா விதித்த கரோனா … Read more

குழப்பும் ஃபேஸ்புக்கின் புதிய தோற்றம்: கடுமையாகச் சாடும் நெட்டிசன்கள்

ஃபேஸ்புக்கின் புதிய தோற்றம் குழப்பமாக இருப்பதாகக் கடுமையாகச் சாடியிருக்கும் பயனர்கள், இந்தத் தோற்றத்தை நிரந்தரமாக அமல் செய்தால் ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறுவோம் என்றும் கூறியுள்ளனர். மேலே நீல நிற நேவிகேஷன் பார் (navigation bar) இருக்கும் ஃபேஸ்புக்கின் இப்போதைய தோற்றம் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து மாறவுள்ளது. கணினிகளில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்குக் கடந்த சில மாதங்களாகவே புதிய தோற்றம் எப்படி இருக்கும் என்பதன் முன்னோட்டம் காட்டப்பட்டு வருகிறது. புதிய தோற்றத்துக்கு மாற்றி விட்டு மீண்டும் இப்போதுள்ள தோற்றத்துக்கு மாற்றிக்கொள்ளலாம். … Read more

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமித்துகுடியரசுத் தலைவர் உத்தரவிட் டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்தாண்டு நவம்பர் மாதம் பதவி யேற்றார். கொலீஜியம் பரிந்துரை இந்நிலையில், முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க … Read more

அமெரிக்கா உட்பட 72 நாடுகளில் இருந்து வருவோருக்கு இனி 7 நாள் கட்டாய தனிமை இல்லை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 14-ம் தேதி முதல் அமல்

புதுடெல்லி: அமெரிக்கா உட்பட 72 நாடுகளில் இருந்து வருவோருக்கு இனி 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அவ்வப்போது விதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சில நாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பரவியது. … Read more

'உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்': அமெரிக்கர்களுக்கு பைடன் அறிவுறுத்தல்

வாஷிங்டன்: போர்மேகச் சூழலில் சிக்கியுள்ள உக்ரைனில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார். உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்லையில் சுமார் 1 லட்சம் வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை என்பிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அதிபர் பைடன், “அமெரிக்கர்கள் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டிய தருணம் இது. நாங்கள் உலகின் மிகப்பெரிய ராணுவத்தை எதிர்கொண்டுள்ளோம். இது மிகவும் வித்தியாசமான சூழல். நிலைமை … Read more

தானாகவே திறந்து மூடும் ஸ்மார்ட் லாக்: பயன்படுத்துவது எப்படி?

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையில் வருவது மாதிரி திறந்து விடு சீசே என்று சொன்னவுடன் திறக்கும் இந்த ஸ்மார்ட் பூட்டுகள் நம் வீட்டின் பாதுகாப்பைப் பன்மடங்கு அதிகரிக்கின்றன. காகிதம் இல்லாத பணம் போன்று இப்போது சாவி இல்லாத இந்தப் பூட்டின் உபயோகமும் மிகவும் பரவலாகி வருகிறது. எவ்வாறு இயங்குகிறது? ஸ்மார்ட் பூட்டு என்பது ஒரு மின்னணுப் பூட்டு. இது கம்பியில்லா இணைப்பையோ புளுடூத் இணைப்பையோ பயன்படுத்தி மற்ற சாதனங்களுடன் தொடர்பு கொள்கிறது. இது தனக்கென்று செயலியைக் கொண்டிருக்கும். … Read more

கடந்த டிசம்பரில் இலங்கை கடற்படை கைது செய்த 9 மீனவர்கள் சென்னை திரும்பினர்: தனி வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

சென்னை: இலங்கை கடற்படையினரால் கடந்த டிசம்பர் மாதம் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களில் 9 பேர்நாடு திரும்பினர். அவர்கள் சொந்தஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். ராமேசுவரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த ஆண்டு டிச.18-ம் தேதி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த நாளும் பல மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 2 நாட்களில் 56 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை மீட்க மத்திய, மாநிலஅரசுகள் நடவடிக்கை … Read more

இந்தியாவுக்கு எதிராக பொய் செய்தி; 60-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் முடக்கம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

புதுடெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் கூறியதாவது: கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் குறித்து மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அதேநேரம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாட்டுக்கு எதிராக பொய்யான செய்திகள் வெளியிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கடந்த 2 மாதங்களில் இந்தியாவுக்கு எதிராக பொய்யான செய்திகளை வெளியிட்ட யூடியூப் உள்ளிட்ட பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் … Read more

பேடிஎம் மால் தளம் ஹாக் செய்யப்பட்டதா? – மறுப்பு தெரிவித்துள்ள நிறுவனம்

பேடிஎம் மால் தளத்தின் பயனர் விவரங்களை ஒட்டுமொத்தமாக ஒரு குழு திருடியுள்ளதாகவும், அதை வைத்து பேடிஎம் மால் தளத்தைப் பணம் கேட்டு மிரட்டியிருப்பதாகவும் இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால் பேடிஎம் தரப்பு இதை மறுத்துள்ளது. சைபில் (cyble) என்கிற இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், ஒரு சைபர் கிரைம் குழு, ஜான் விக் என்கிற பெயரில் இயங்கி வருகிறது. இது பேடிஎம் மால் செயலி, இணையதளம் இரண்டிலும் ஊடுருவி அத்தனை தகவல்களையும் … Read more