ஐபிஎல் தொடருக்கான மும்பை அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை அணியில் இருந்து முக்கிய வீரர் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  15வது ஐபிஎல் சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி வரும் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளின் வீரர்களும் மும்பையில் உள்ள பயோ பபுளுக்கு இணைந்து வருகின்றனர். அனைத்து அணிகளும் அடுத்த சில நாட்களில் பயிற்சிகளில் ஈடுபடவுள்ள நிலையில் போட்டித்தொடரில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்றான மும்பை … Read more

50 போர்க்கப்பல்கள்… 30,000 துருப்புகள்: ரஷ்ய எல்லையில் குவித்த நேட்டோ நாடுகள்

சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ்ய எல்லையில் இராணுவ பயிற்சியை முன்னெடுத்துள்ளது நேட்டோ நாடுகள். உக்ரைன் -ரஷ்யா போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், நேட்டோ நாடுகள் நோர்வேயில் இராணுவ பயிற்சியை துவங்கியுள்ளனர். வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் உள்ள 25கும் மேற்பட்ட நாடுகள் குறித்த பயிற்சியில் களமிறங்கியுள்ளன. மொத்தம் 30,000 துருப்புகள், 200 விமானங்கள், 50 போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரஷ்ய எல்லையில் இருந்து சில மைல்கள் தொலைவில் நடத்தப்படும் மிகப்பெரிய நேட்டோ … Read more

விளாடிமிர் புடினை மனநோயாளி என்ற பிரபல மொடல் சூட்கேசில் சடலமாக மீட்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மனநோயாளி என சமூக ஊடகத்தில் பதிவிட்ட பிரபல மொடல் சூட்கேசில் சடமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கொள்கைகள், நாட்டு மக்களை கண்ணீரில் ஆழ்த்தும் என சமூக ஊடகங்களில் விமர்சித்து வந்தவர் 23 வயதான மொடல் Gretta Vedler. பிரபல மொடலான இவர் ரஷ்ய ஜனாதிபதியை மனநோயாளி என குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் திடீரென்று மாயமானார். இந்த நிலையில், சம்பவம் … Read more

ரஷ்ய ஏவுகணை தாக்குதல்: 3 பிரித்தானியர்கள் உட்பட 100 பேர் கொத்தாக பலி

போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா முன்னெடுத்த கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதலில் 3 பிரித்தானிய முன்னாள் இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் cruise ஏவுகணை தாக்குதலில், சம்பவயிடத்திலேயே மூவரும் உடல் சிதறி பலியானதாக தெரிய வந்துள்ளது. மேலும், குறித்த தாக்குதலில் பிரித்தானியர்கள் உட்பட மொத்தம் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மட்டுமின்றி, கொல்லப்பட்ட மூன்று பிரித்தானிய சிறப்பு வீரர்களும், உக்ரைன் போரில் பங்கேற்கவில்லை எனவும், ஆனால் பயிற்சி அளித்து வந்துள்ளதாக … Read more

இலங்கை செல்லும் கனேடியர்களுக்கு கனடா அரசு வெளியிட்டுள்ள பயண ஆலோசனை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சூழலை கருத்தில்கொண்டு அந்நாட்டுக்குச் செல்லும் தங்கள் பயணிகளுக்கு கனடாவும் பிரித்தானியாவும் சில பயண ஆலோசனைகளை தெரிவித்துள்ளன. தனது குடிமக்கள் போதுமான உணவுப்பொருட்கள், தண்ணீர் மற்றும் எரிபொருளைக் கைவசம் இருப்பில் வைத்துக்கொள்ளுமாறு கனடா இலங்கையிலிருக்கும் தனது குடிமக்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது. அத்துடன், இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில், போதுமான மருந்துப்பொருட்களைக் கைவசம் வைத்திருக்குமாறும், நிலவரங்களை அறிந்துகொள்ள உள்ளூர் ஊடகங்களை கவனித்துக்கொள்ளுமாறும் கனடா தன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல, பிரித்தானியாவும், மளிகைக்கடைகள், பெட்ரோல் நிலையங்கள், மருந்தகங்கள் முதலான … Read more

இறுகும் உக்ரைன் போர்… விளாடிமிர் புடின் எங்கே? எழுந்த புதிய சர்ச்சை

உக்ரைன் மீதான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமறைவாகிவிட்டாரா என்ற கேள்வி பரபரப்பை கிளப்பியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இளம் வீரர்களை மட்டும் ரஷ்யா உக்ரைனுக்கு அனுப்பி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், இன்னும் இந்த போர் நீடிக்கும் என்றால் மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் என்றே அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எங்கே என்ற கேள்வி திடீர் … Read more

ரஷ்யா-உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்

 ரஷ்ய-உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 19வது நாளாக ரஷ்ய படையெடுத்து வருவதற்கு மத்தியில், இன்று இரு நாட்டு அதிகாரிகளும் காணொளி காட்சி மூலம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், ரஷ்யாவுடனான சமாதானப் பேச்சுத்தை இன்றோடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நாளை மீண்டும் தொடங்கும் எனவும் உக்ரைன் பேச்சுவார்த்தையாளர் தெரிவித்துள்ளார். உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகர் Mykhaylo Podolyak இதை உறுதிப்படுத்தியுள்ளார். நாளை வரை பேச்சுவார்த்தை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என Mykhaylo Podolyak ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இன்றைய … Read more

இலங்கை வீரரை நேரில் சென்று வாழ்த்திய கோலி, டிராவிட்: ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டு!

இந்தியா-இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டியில் தனது இறுதி ஆட்டத்தை விளையாட இருக்கும் இலங்கை வீரர் சுரங்கா லக்மாலை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணியின் முன்னனி வீரர் விராட் கோலி என இருவரும் சென்று வாழ்த்தியுள்ளனர். இந்தியா- இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விளையாடும் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மால் தனது கடைசி … Read more

உக்ரேனிய அகதிகளுக்கு ஜேர்மனியின் பெர்லின் அரசு எச்சரிக்கை

 உக்ரேனிய அகதிகளுக்கு ஆட்கடத்தல் ஆபத்து குறித்து ஜேர்மனியின் பெர்லின் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, நகரின் பிரதான ரயில் நிலையத்தில் பணம் அல்லது தங்குமிட சலுகைகளை ஏற்க வேண்டாம் என உக்ரைன் அகதிகளை பெர்லின் அரசு எச்சரித்துள்ளது. இதுபோன்ற சலுகைகள் அளிப்பவர்களின் மூலம் உக்ரைன் அகதிகள், கட்டாய விபச்சாரம் அல்லது ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் சிக்கலாம் என்ற கவலையின் காரணமாக அரசாங்கம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. அகதிகளின் சூழ்நிலையில் ஆதாயம் தேட விரும்பும் குற்றவாளிகள், பெர்லின் மத்திய நிலையத்தில் … Read more

என்கூட ஒத்தைக்கு ஒத்த வா… புடினுக்கு எலான் மஸ்க் சவால்

 டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஒத்தைக்கு ஒத்த சண்டைக்கு சவால் விடுத்துள்ளார்.  உக்ரைன் மீது 19வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா படையெடுப்பால் உக்ரைனில் தொலைத்தொடர்பு மற்றும் இணையதளம் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், உக்ரைன் விடுத்த கோரிக்கையை ஏற்ற டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், போரால் … Read more