என்னால் எனது பாஸ்போர்ட்டை இழக்க முடியாது… ஜேர்மன் குடியுரிமை விதிகள் மாற்றத்திற்காக காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர்

ஜேர்மனியில் தேர்தல் நடக்கும்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜேர்மன் குடியுரிமைச் சட்டங்களில் பெரும் மாற்றங்கள் செய்ய இருப்பதாக அறிவித்தது இப்போது ஆட்சி அமைத்துள்ள கூட்டணி. அதுவும், புலம்பெயர்தல், குடியுரிமை முதலான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாகவும் அரசு அறிவித்திருந்தது. ஆனாலும், குடியுரிமை தொடர்பான நடவடிக்கைகளில் இதுவரை எந்த மாற்றமோ, முன்னேற்றமோ இல்லை. பல வெளிநாட்டவர்களுக்கு அந்த மாற்றங்கள் சீக்கிரம் நடக்கும் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அரசு பல்வேறு முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறிவரும் நிலையில், … Read more

3ம் உலகப் போரை தடுக்க எங்களுக்கு உதவி தேவை! உலக நாடுகளிடம் கெஞ்சிய உக்ரைன்

ரஷ்யாவுக்கு எதிரான மோதலில் தங்களுக்கு கூடுதல் உதவி அளிக்குமாறு உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 19வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுக்கு எதிரான மோதலில் தங்களுக்கு கூடுதல் உதவி அளிக்குமாறு மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba ட்விட்டரில் பதிவிட்டதாவது, 3ம் உலகப் … Read more

பெண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் கவனமாக இருங்க… கருப்பை புற்றுநோயாக கூட இருக்கலாமாம்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இது பெண்ணின் கருப்பை வாயில் ஏற்படும் ஒரு புற்றுநோயாகும், இன்றைக்கு பல பெண்கள் இப்பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படலாம். ஆரம்பத்திலே இதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை கண்டறிந்து சரி செய்வது நல்லது. தற்போது அவற்றை பார்ப்போம்.  அறிகுறிகள்  மாதவிடாயின்போது அதிக ரத்தம் வெளியேறுதல் வெள்ளைப்படுதல்  இடுப்பு, முதுகு, கால்களில் கடுமையான வலி  வாந்தி  அதிக சோர்வு.   எப்படி தப்பிக்கலாம்?  தினமும் நடைப்பயிற்சி, … Read more

கனடாவில் உணவகத்துக்குச் சென்றவரின் கையைப் பிடித்து இழுத்த பெண்: அடுத்து காத்திருந்த எதிர்பாராத அதிர்ச்சி

கனடாவில் உணவகத்துக்குச் சென்ற ஒருவரிடம் நூதன முறையில் கொள்ளயடிக்கப்பட்டுள்ளது. வான்கூவரில் வாழும் Changqing Yu என்பவர், சென்ற வாரம், Richmondஇலுள்ள Tian Shi fu என்ற உணவகத்துக்குச் சென்றுள்ளார். தனது காரை பார்க் செய்துவிட்டு, நடக்க முயன்ற Changqingஇடம், அருகில் நின்ற ஒரு காரில் இருந்த பெண் ஒருவர் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டுள்ளார். Changqing தனக்கு ஆங்கிலம் தெரியாது என மாண்டரின் மொழியில் கூற, அந்த பெண் தொடர்ந்து ஏதேதோ கேட்டுள்ளார். உடனே அந்த காருக்கு அருகில் … Read more

உக்ரைன் போரில் சீனா உதவியை நாடியதா ரஷ்யா? உண்மையை போட்டுடைத்த பெய்ஜிங்

 உக்ரைன் போரில் சீனா உதவியை ரஷ்யா நாடியதாக செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, ராணுவ உபகரணங்கள் தந்து உதவுமாறு சீனாவை நாடியதாக பல அமெரிக்க பத்திரிக்கைகள் பெயர் குறிப்பிடாமல் சில அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டன. இதையடுத்து, ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், … Read more

உக்ரேனின் மிக முக்கிய விமான ஆலையை தாக்கி அழித்த ரஷ்யா! பரபரப்பு வீடியோ

 உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மிக முக்கிய விமான ஆலையை ரஷ்ய குண்டு போட்டு தாக்கி அழித்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 19வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்புகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, கீவ் நகரின் வடக்கில் உள்ள Antonov விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை மீது ரஷ்ய படைகள் குண்டு போட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரேனின் மிக முக்கிய சர்வதேச சரக்கு … Read more

உக்ரைன் போரால் சுவிட்சர்லாந்தில் உருவாகியுள்ள அச்சம்: சில பொருட்களுக்கு தட்டுப்பாடு

உக்ரைன் போர் உருவாக்கியுள்ள அச்சம் காரணமாக, சுவிட்சர்லாந்தில் சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சுவிஸ் பார்மசிக்களில் காண முடிகிறது. ஆம், சுவிஸ் பார்மசிக்களிலிருந்து தூக்க மாத்திரைகளையும், அமைதிப்படுத்த உதவும் tranquilizerகளையும், அயோடின் மாத்திரைகளையும் மக்கள் பெருமளவில் வாங்கி வருவதால் அவற்றின் தேவை அதிகரித்துள்ளதாக பார்மசி ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். அயோடின், அணுக்கதிர் வீச்சு ஏற்படும் என்ற அச்சம் ஏற்படும்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும். ஆக, உக்ரைனில் அணுக்கதிர் உலையில் விபத்து ஏதாவது ஏற்படலாம், அல்லது, … Read more

புதினுக்கு இவ்வளவு நோய்களா.! போருக்கு இதுவே காரணம்: உளவுத்துறை அதிர்ச்சி தகவல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான போர் மற்றும் அவரின் கடுமையான கோபத்திற்கு அவர் எடுத்துக்கொள்ளும் புற்றுநோய்க்கான ஸ்டீராய்டு சிகிச்சை முறைகளால் ஏற்பட்டுள்ள மனநல பாதிப்புகளே முக்கிய காரணம் என மேற்கு நாடுகளை சேர்ந்த உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் பல்வேறு நெருக்கடி மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை விளாடிமிர் புதின் தொடர்ந்து நடத்தி வருவதற்கு அவருக்கு ஏற்பட்டுள்ள மனநோய்யே காரணம் என அவுஸ்ரேலியா, கனடா, நியூஸிலாந்து, அமெரிக்கா மற்றும் … Read more

பேச்சுவார்த்தைகளில் ஓரிரு நாட்களுக்குள் நல்ல முடிவு எட்டப்படலாம்: உக்ரைனும் ரஷ்யாவும் நம்பிக்கை

உக்ரைன் போர் மூன்றாவது வாரத்தைக் கடந்துள்ள நிலையில், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் நல்ல முடிவு எட்டப்படலாம் என இரு நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இரு தரப்பினருக்கும் இடையில் அமைதித் தீர்வு எட்டப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதே நேரத்தில், தாங்கள் பேச்சுவார்த்தைக்குதான் தயாரே ஒழிய, சரணடைவதற்கோ அல்லது ரஷ்யாவின் கட்டாய நிபந்தனைகளுக்கு உட்படுவதற்கோ அல்ல என்பதை உக்ரைன் தெளிபடுத்தியுள்ளது. இந்நிலையில், ரஷ்ய தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட Leonid Slutsky, பேச்சுவார்த்தைகளில் நல்ல … Read more

பள்ளி மாணவர்களுக்கு தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் கைது

தமிழக மாவட்டம் திருவண்ணாமலையில், ஆரணி அருகே விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, விடுதி காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆரணி அருகே பத்தியாவரம் கிராமம் சூசைநகர் பகுதியில் அரசு நிதிஉதவி பெறும் புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் அருகே உள்ள விடுதியில் 113 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று விடுதியில் … Read more