ஒரே போஸ்டில் தனுஷ் குடும்பத்துக்கு ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியல் தனுஷின் மொத்த குடும்பத்துக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சமீபத்தில் தனுஷிடம் இருந்து பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அவரது சகோதரரும் இயக்குநருமான செல்வராகவனின் பிறந்தநாளுக்கு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வாழ்த்து தெரிவித்தார். செல்வராகவனை கட்டிப்பிடித்தபடி எடுத்த அழகான புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்ட ஐஸ்வர்யா, செல்வராகவன் தனது “குரு, நண்பர், அப்பாவை போன்றவர், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்” என்று கூறி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தனுஷின் அண்ணன் மீதும் ஐஸ்வர்யா வைத்திருக்கும் … Read more

மில்லியன் கணக்கான மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த சீனா

சீனாவில் 2020 காலகட்டத்தில் காணப்பட்ட அதே அளவு கொரோனா தொற்று எண்ணிக்கை எட்டியுள்ள நிலையில் மில்லியன் கணக்கான மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஞாயிறன்று மட்டும் 1,938 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முந்தைய நாள் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு என தெரிய வந்துள்ளது. ஷென்சென் தெற்கு வணிக மையம் மூடப்பட்டுள்ளது, ஷாங்காய்க்கான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் பேருந்து … Read more

உக்ரைன் போரில் உதவுங்கள்: சீனாவிடம் கெஞ்சிய ரஷ்யா

உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு முதன்முறையாக சீனாவிடம் இருந்து இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை நாடியுள்ளது ரஷ்யா. உக்ரைன் போர் தொடர்பில் சீனாவின் உதவியை ரஷ்யா நாடியுள்ள தகவல் முக்கிய பத்திரிகைகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பும் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் திங்கள்கிழமை ரோம் சென்று சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை … Read more

வாடகை செலுத்தவும் பணமில்லை: பிரித்தானியாவில் சிக்கிக்கொண்ட ரஷ்ய கோடீஸ்வரர்

உக்ரைன் போரினால் ரஷ்ய கோடீஸ்வரர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரித்தானியாவில் உள்ள செல்சி அணி உரிமையாளர் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார். உக்ரைன் போரினை அடுத்து ரஷ்யா மற்றும் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள் மீது பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடுமையான தடைகளை விதித்து வருகிறது. பல ரஷ்ய கோடீஸ்வரர்கள் இந்த பொருளாதாரத் தடைகளில் சிக்கியுள்ளனர். அந்த வகையில் ரஷ்ய கோடீஸ்வரரும் செல்சி அணியின் உரிமையாளருமான ரோமன் அப்ரமோவிக் வாடகை செலுத்தவும் பணம் … Read more

கனேடிய பிரதான சாலையில் துயரம்: அடையாளம் காணப்பட்ட இந்திய இளைஞர்கள்

கனடாவின் பிரதான சாலை 401ல் ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி மரணமடைந்த ஐவரை ஒன்ராறியோ பொலிசார் அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை அதிகாலையில் பெல்வில் மற்றும் ட்ரெண்டன் இடையே பிரதான சாலை 401ல் குறித்த கோர விபத்து நடந்துள்ளது. Aikins சாலை மற்றும் Saint Hilaire சாலைக்கு இடையிலான பிரதான சாலையில் அதிகாலை 3:45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. டிராக்டர்-டிரெய்லர் ஒன்று பயணிகள் வேன் ஆகியவை நேருக்கு நேர் … Read more

ஒரே நாளில்… சரணடைந்த துருப்புகள் தொடர்பில் ஜெலென்ஸ்கி வெளியிட்ட தகவல்

ஒரே நாளில் 500 முதல் 600 ரஷ்ய துருப்புக்கள் சரணடைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு 17 நாட்களை கடந்துள்ள நிலையில், விளாடிமிர் புடினின் படைகள் மன உறுதி இழந்துள்ளதாகவே கருதப்படுகிறது, பலர் உணவு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, பல குழுக்கள் போரிடாமல், வெறுமனே சுற்றித்திரிவதாகவும், பலருக்கு தாங்கள் அப்பாவி மக்களை கொல்லத்தான் அனுப்பப்பட்டோமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, ரஷ்யாவை அவமானப்படுத்தும் வகையில், … Read more

உக்ரைன் போர்… பிரித்தானியாவில் டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு: எச்சரிக்கும் நிபுணர்கள்

உக்ரைன் போர் நீடித்துவரும் நிலையில், ரஷ்ய எரிபொருட்களை நம்பியிருக்கும் நாடுகள் தீர்க்கமான முடிவுக்கு வராததால் பிரித்தானியாவில் டீசல் தட்டுப்பாடு அதிகரிக்கலாம் என்ற அச்சத்தை நிபுணர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பிரித்தானியாவின் டீசல் தேவையில் பாதி அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் பெட்ரோல் தேவையை பிரித்தானியாவே ஈடு செய்து கொள்கிறது. இருப்பினும் மூன்றில் ஒருபங்கு இறக்குமதியை ரஷ்யாவில் இருந்தே பிரித்தானியா பெற்றுவருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக நீக்குவதாக பிரதமர் … Read more

கபில்தேவின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார் ரிஷப் பண்ட்!

பெங்களூருவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். பெங்களூருவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இலங்கை 109 ரன்களுக்கு சுருண்டது. இந்நிலையில் 2வது நாளான இன்று இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வருகிறது. 46 ஓவர் முடிவில் இந்திய அணி 5 … Read more

ரஷ்ய குண்டு மழையில் மரியுபோலில் மட்டும் பொதுமக்கள் 2,187 பேர் படுகொலை!

 உக்ரைனின் மரியுபோல் நகரில் மட்டும் இதுவரை குறைந்தது பொதுமக்கள் 2,187 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகரில், இதுவரை குறைந்தது 2,187 குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர கவுன்சில் தெரிவித்துள்ளது. மரியுபோல் மீது ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், நகரத்தில் குறைந்தது 22 குண்டுவெடிப்புகள் நடந்தன. ரஷ்யப் படைகள் தொடர்ந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து குண்டு போட்டு வருகின்றன. நகரை … Read more

நாம் தோற்றுவிட்டோம்… போரை நிறுத்துங்கள்: கதறும் ரஷ்ய வீரர்கள்

உக்ரைனில் சிறை பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர் ஒருவர் போரை நிறுத்த வலியுறுத்தி ஜனாதிபதி புடினிடம் கெஞ்சியுள்ளார். உக்ரைன் படையெடுப்பில் ஏற்கனவே நாம் தோற்றுவிட்டோம் என குறிப்பிட்டுள்ள அவர், இன்னும் உயிர்ப்பலி வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ஞாயிறன்று உக்ரைன் துருப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார் Lieutenant Colonel Maxim Krishtop. ஆனால், உக்ரைன் மீதான புடினின் கடும்போக்கு நடவடிக்கைகளுக்கு Krishtop மன்னிப்புக் கோரியதுடன், உக்ரைன் மக்கள் மீது குண்டு வீசியது … Read more