ரொக்கெட் குண்டுகள் வீசி உக்ரைன் விமான தளம் அழிப்பு: தீவிர தாக்குதலில் ரஷ்யா

ரஷ்ய இராணுவம் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் உக்ரைனின் விமான தளமொன்று அழிக்கப்பட்டது. அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவின்படி, மூன்றாவது வாரமாக உக்ரைனில் தீவிர தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ படையினர், இன்று காலை தலைநகர் கீவில் வான்வழி தாக்கத்தால் நடத்தியது. அப்போது ரஷ்யாவின் ரொக்கெட் தாக்குதல்களில் கீவ் பிராந்தியத்தில் உள்ள வாசில்கிவ் (Vasylkiv) நகருக்கு அருகிலுள்ள உக்ரேனிய விமானத் தளம் அழிக்கப்பட்டதாக, நகர மேயர் நடாலியா பாலசினோவிச் (Natalia Balasynovych) தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவின் ரொக்கெட்டுகள் உக்ரைனின் … Read more

பர்தா போடனும்… அசைவம் சமைக்கனும்… விவாகரத்து கேட்ட இளம்பெண்ணுக்கு 23 இடங்களில் கத்திக்குத்து

இந்தியாவில் மனைவியை 23 இடங்களில் கத்தியால் குத்திய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டதை சேர்ந்தவர் அபூர்வா பூரணிக் (26). இவர் கல்லூரிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வந்தபோது ஆட்டோ ஓட்டுநர் முகமது அசாஸ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இந்து குடும்பத்தில் ஒரே மகளாக பிறந்த அபூர்வாவை காதலன் முகமது அசாஸுக்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் பெண்ணின் … Read more

கனடாவில் இரண்டு பெண்கள் கொடுத்த புகாரால் கைதான நபர்! மசாஜ் செய்ய தடை விதிப்பு

கனடாவில் மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு வான்கூவரில் தான் இச்சம்பவம் கடந்த மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடந்துள்ளது. அந்த இரண்டு நாட்களில் மசாஜ் நிலையத்திற்கு மசாஜ் செய்து கொள்ள வந்த 34 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்களிடம் Jun Dong Gao (46) என்பவர் தவறாக நடந்து கொண்டு அத்துமீறியுள்ளார். இது தொடர்பான புகாரின் … Read more

ரஷ்ய ராணுவ கட்டுப்பாட்டு புள்ளியை தகர்த்தெறிந்த உக்ரைன்: வீடியோ ஆதாரம்

உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய ராணுவப்படையின் கட்டுப்பாட்டு மைய புள்ளி ஒன்றை உக்ரைன் விமானப்படை சுட்டு அழித்துள்ளது. உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 24 திகதி ரஷ்யா ராணுவ படையெடுப்பை உக்ரைனில் தொடங்கியது, இந்த நிலையில் மூன்றாவது வாரத்தை எட்டிருக்கும் இந்த போரானது உச்சநிலையை தொட்டுவருகிறது. உக்ரைன் முக்கிய நகரங்களான கார்க்கிவ், கிரிமீயா, லுஹான்ஸ்க், மரியுபோல் மற்றும் கெர்சன் ஆகிய பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றி … Read more

சுக்குநூறாய் தகர்ந்துவிடும்… உலக நாடுகளுக்கு ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை

ரஷ்ய மீதான பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் தகர்ந்துவிடும் என ரஷ்ய விண்வெளி ஏஜென்சியான Roscosmos தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவை கட்டுப்படுத்த மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளனர். இந்நிலையில், ரஷ்ய விண்வெளி ஏஜென்சி மீதான சட்டவிரோத தடைகளை நீக்குமாறு, சர்வதேச விண்வெளி நிலைய திட்டத்தில் பங்குதாரர்களாக உள்ள வெளிநாடுகளுக்கு Roscosmos தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார். ரஷ்ய விண்வெளி ஏஜென்சி மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து வெளிநாட்டு … Read more

உக்ரைன் வீரர்களிடம் வேண்டுமென்றே வந்து சிக்கிக்கொண்டார்களா ரஷ்ய வீரர்கள்?: குழப்பத்தில் இராணுவ நிபுணர்கள்

உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய இராணுவ வீரர்களின் டாங்குகள் உக்ரைன் வீரர்களால் துவம்சம் செய்யப்பட்டு, ரஷ்ய வீரர்கள் பின்வாங்கி ஓடிய சம்பவம் ஒன்று உலகின் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், அந்த ரஷ்ய வீரர்கள் வேண்டுமென்றே வலிய வந்து உக்ரைன் வீர்ர்களிடம் சிக்கிக்கொண்டார்களா என இராணுவ நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ரஷ்ய இராணுவத்தின் போர் யுக்தியால் தாங்கள் குழப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிபுணர்கள், Kyivக்கு செல்லும் சாலையின் நடுவில் ரஷ்ய இராணுவ டாங்குகள் சென்றது, நேரே சென்று உக்ரைன் … Read more

ரஷ்யாவிற்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ள 12000 அமெரிக்க படைகள்: ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உறுதியாக வெற்றி பெற மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் ஹவுஸ் டெமாக்ரடிக் காகஸ் உறுப்பினர்களிடம் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி “உக்ரைனில் மூன்றாம் உலகப் போரை நடத்தவில்லை” ஆனால் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம் என உறுதியளித்துள்ளார். அந்தவகையில் ரஷ்யாவின் அண்டை நாடுகளான லாட்வியா, எஸ்டோனியா, லித்துவேனியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு 12000 … Read more

சர்வாதிகாரி ஸ்டாலின் ஒழிக! சிறையிலிருந்து வெளியே வந்ததும் கொதித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

புழல் சிறையில் இருந்து தமிழக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 19ஆம் திகதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தினத்தன்று திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி கும்பல் வன்முறை செய்ததாக பிப்ரவரி 21 இரவு ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இதோடு நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளும் ஜெயக்குமார் மீது போடப்பட்ட நிலையில் 20 நாட்களாக புழல் சிறையில் இருந்தார். இந்நிலையில் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து இன்று சிறையில் … Read more

அடிக்கடி ஆட்டுக்கறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

அதிக மக்களால் விரும்பி சாப்பிடப்படும் அசைவ உணவாக ஆட்டுக்கறி உள்ளது. சாப்பிடுவதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை குணப்படுத்தலாம். ஏனெனில் அந்தளவுக்கு அதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. மட்டன் இதயத்தை வலிமைப்படுத்தும். ஏனெனில் மட்டனில் சாச்சுரேட்டட் கொழுப்புள்ளள் குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும். ஆட்டுக்கால் சூப்பை வைத்து சாப்பிடுவதனால் நமது எலும்புகள் வலுவாகும். இது பார்வை கோளாறுகளை சரிசெய்த்து கூர்மையான பார்வையை நமக்கு பெற்றுத்தரும். ஆட்டு இறைச்சி சாப்பிடுவன் … Read more

திடீர் திருப்பம்! முதல் முறையாக புடின் வாயில் இருந்து வந்த முக்கிய வார்த்தை… கை குலுக்க தயாராகும் ரஷ்யா – உக்ரைன்?

உக்ரைன் உடனான பேச்சுவார்த்தையில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார். கடந்த 24-ம் திகதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. 16 நாட்களாக இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் நீடிக்கிறது. இதனிடையே இருதரப்பும் பெலாரஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவும், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமைத்ரோ குலேபாவும் நேற்று முன்தினம் துருக்கி நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சூழலில் … Read more