இன்னும் சில தினங்களில் இடமாறவுள்ள சூரிய பகவான்! இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுதாம்.. இன்றைய ராசிப்பலன்

மார்ச் மாதம் 15ம் தேதி செவ்வாய்க் கிழமை சூரிய பகவான் கும்ப ராசியிலிருந்து, மீன ராசிக்கு செல்லக்கூடிய பங்குனி மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தில் எந்தெந்த ராசியினர் நற்பலன்களைப் பெற உள்ளனர்   இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பண வரவை பெறப்போகும் ராசிக்காரர் யார் என பார்ப்போம். உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW    மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் … Read more

13 மைல்கள் தொலைவில்… உக்ரைன் தலைநகருக்கு அடுத்த ஆபத்து: வெளியான காணொளி

உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகாமையில் ரஷ்ய துருப்புகள் நெருங்கி வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெளியாகியுள்ள காணொளியில், 13 மைல்கள் தொலைவில் ரஷ்ய இராணுவ டாங்கிகளும், இராணுவத்தினரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு துவங்கி இரண்டு வாரங்களுக்கு பின்னர், ரஷ்ய துருப்புகள் தலைநகர் கிவ்வை நெருங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. தலைநகர் கிவ்வின் புறநகர் பகுதியான இர்பின் நகரில் ரஷ்ய துருப்புகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. பல எண்ணிக்கையிலான டாங்கிகள் மற்றும் 20கும் மேற்பட்ட இராணுவ … Read more

உக்ரைனில் போரிடும் பிரித்தானிய இராணுவத்தினருக்கு இதுதான் கதி: விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

உக்ரைன் போரில் கலந்துகொள்ளும் பிரித்தானிய ராணுவ வீரர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் எச்சரித்துள்ளார். இதுவரை பிரித்தானிய இராணுவ வீரர்கள் நால்வர் உக்ரைன் துருப்புகளுக்கு ஆதரவாக போரிட்டு வருவதாக குறிப்பிட்ட பென் வாலஸ், அவர்கள் நாடு திரும்பினால் அவர்கள் மீது இராணுவத்தைவிட்டு வெளியேறிய குற்றத்திற்காக வழக்கு தொடரப்பட்டு, தண்டனை வழங்கப்படும் என்றார். பணியில் இருக்கும் இராணுவ வீரர்கள் விடுப்பு ஏதும் பதிவு செய்யாமல் தன்னிச்சையாக உக்ரைன் புறப்பட்டு சென்றவர்கள் இராணுவ நடவடிக்கைக்கு … Read more

மனித உடலை மொத்தமாக பொசுக்கும் ஆயுதம்: உக்ரைனில் புடின் கோரதாண்டவம்

உக்ரைனில் மிக ஆபத்தான தெர்மோபரிக் ராக்கெட்டுகளை ரஷ்யா பயன்படுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெர்மோபரிக் ஆயுதத்தின் தாக்கம் என்பது மனித நுரையீரலை சிதைத்து பலி எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்பதுடன், அது மனித உடலை மொத்தமாக பொசுக்கும் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது. மூன்று நாட்களில் உக்ரைனை கைப்பற்றிவிடலாம் என்ற திட்டத்துடன் களமிறங்கிய ரஷ்ய துருப்புகளுக்கு, உக்ரைன் துருப்புகளின் பதிலடி ஏமாற்றத்தை அளிக்க, இந்த ஆத்திரத்தில் ரஷ்யா தெர்மோபரிக் ராக்கெட்டுகளை பயன்படுத்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. … Read more

உலகின் மிக பயங்கரமானவர்… உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய கனேடியர்: யார் அவர்?

உலகின் மிக பயங்கரமான sniper என பெயரெடுத்த கனேடிய வீரர் ஒருவர் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியதுடன், ரஷ்ய துருப்புகளை ஒவ்வொன்றாக கொல்லவும் சபதமெடுத்துள்ளார். வாலி என்ற புனைப்பெயர் கொண்ட அந்த வீரர், 2015ல் ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டுள்ளார். தற்போது தமது பச்சிளம் குழந்தையையும் மனைவியையும் கனடாவில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு தமது நண்பர்கள் மூவருடன் உக்ரைனுக்கு சென்றுள்ளார். 2009 மற்றும் 2011ல் கனேடிய இராணுவம் சார்பில் ஆப்கானிஸ்தானிலும் இவர் களமிறங்கியுள்ளார். கனேடிய துருப்புகளுடன் இணைந்து … Read more

மூன்று முறையல்ல… உக்ரைன் ஜனாதிபதி தொடர்பில் பகீர் தகவலை வெளியிட்ட அதிகாரி

உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கிய கடந்த இரண்டு வாரங்களில் ஒரு டசின் முறைக்கு மேல் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை கொல்ல முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் மிக நெருக்கமான நபரே உறுதி செய்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கும் Mikhail Podolyak என்பவரே, ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடந்த ஒருவாரத்தில் மட்டும் 3 முறை கொலைமுயற்சியில் இருந்து தப்பியதாக வெளியான தகவல் உண்மை இல்லை எனவும், கடந்த இரண்டு … Read more

உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலி… பிரித்தானியாவில் புதிய உச்சம் தொட்ட எரிபொருள்

 உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலியால் பிரித்தானியாவில் எரிபொருள் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலக எண்ணெய் விலையில் புதிய அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில் பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. பிரித்தானியாவில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 156.37 p விற்கப்பட்ட நிலையில், இன்று 158.2 p உயர்ந்துள்ளது. நேற்று 162.28 p விற்கப்பட்ட டீசல், இன்று 165.24 p விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து RAC எரிபொருள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் Simon Williams … Read more

ரஷ்யர்கள் பயணித்த விமானத்தை சிறைப்பிடித்த கனடா: என்ன தண்டனை தெரியுமா?

ரஷ்ய நாட்டவர்கள் இருவர் பயணித்த விமானம் ஒன்றை சிறைப்பிடித்த கனடா போக்குவரத்துத்துறை அதிகாரிகள், அந்த விமானம் தடையை மீறியதாக தெரிவித்துள்ளார்கள். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா மீது பல தடைகள் குறித்து அறிவித்த கனடா, பிப்ரவரி 24 முதல் தனது வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. இந்நிலையில், மார்ச் 1 அன்று, கனேடிய வான்வெளியில் பறந்த விமானம் ஒன்றில் ரஷ்ய நாட்டவர்கள் இருவர் பயணிப்பது தெரியவந்ததையடுத்து, அந்த விமானம் Yellowknife … Read more

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த வழக்கிலிருந்து  தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த போது, பேரறிவாளன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், கடந்த 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார், இதுவரை … Read more

உக்ரைன் ஒயின் ஷாப்பில் போதையில் போர்த்திக்கொண்டு படுத்து கிடந்த ரஷ்ய ராணுவ வீரர்! வெளியான வீடியோ

 உக்ரைன் ஒயின் ஷாப் ஒன்றில் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர், புல் போதையில் போர்த்திக்கொண்டு படுத்து கிடந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 13வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, மக்களை வெளியேற்றுவதற்காக 5 உக்ரேனிய நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது. அதேசமயம், உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்ய படைகள், சில பகுதிகளில் கடைகளுக்குள் நுழைந்து உணவுப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற காட்சிகள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், தற்போது உக்ரைன் ஒயின் ஷாப்குள் ரஷ்ய … Read more