உக்ரைனிடம் சிக்கிய ரஷ்ய வீரர்களின் பரிதாப கதி: பரபரப்பு வீடியோ காட்சி!

உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திவந்த ரஷ்ய ராணுவ வீரர்களை பிணை கைதிகளாக அந்த நாட்டு ராணுவம் சிறைபிடித்து அழைத்து செல்லும் வீடியோ ஆதாரங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் சிலவற்றை ரஷ்யா தாக்குதல் நடத்தி முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது தலைநகர் கீவ்வை சுற்றிவளைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய ராணுவத்துடன் எண்ணிக்கையில் ஒப்பிடுகையில் உக்ரைன் ராணுவம் மிக குறைந்த பலமே கொண்டிருந்தாலும் ரஷ்யாவின் தாக்குதலை தடுத்து எதிர் தாக்குதலையும் … Read more

ரஷ்யாவின் கோரிக்கையை நிறைவேற்றுகிறாரா ஜனாதிபதி ஜெலென்ஸ்கி: திருப்புமுனையை ஏற்படுத்தும் உக்ரைன் முடிவு

உக்ரைன் போர் உச்சத்தை தொட்டு இருக்கும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணையும் விருப்பத்தை கைவிட்டுவிட்டோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா தனது முழுநீள போரை கடந்த மாதம் 24ம் திகதி தொடங்கியது. தற்போது இந்த போரானது உச்சநிலையை எட்டியிருக்கும் இந்த தருணத்தில், போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இருநாட்டு தலைவர்களும் தொடர்ந்து ஈடுபட்டு … Read more

உக்ரைனில் இன்று போர்நிறுத்தம் அறிவித்த ரஷ்யா: சமீபத்திய முக்கிய தகவல்கள்

மாஸ்கோ இன்று உக்ரைனில் ஒரு புதிய மனிதாபிமான போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது. உக்ரைனில் பொதுமக்களை வெளியேற்றுவதற்காக, மாஸ்கோ நேரப்படி காலை 10 மணி முதல் (0700 GMT) தனது படைகள் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்படும் என்று ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு திறக்கப்பட்ட முதல் வெற்றிகரமான “மனிதாபிமான தாழ்வாரத்தில்” நேற்று சுமி (Sumy) நகரத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறியதை அடுத்து இன்று நான்காவது முறையாக போர்நிறுத்தம் அறிவித்துள்ளது. செர்னிஹிவ், சுமி, கார்கிவ், மரியுபோல் மற்றும் சபோரிஜியா ஆகிய இடங்களிலிருந்து … Read more

மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை அடுத்து… ரஷ்யாவை புறக்கணிக்கும் மேலும் பல பன்னாட்டு நிறுவனங்கள்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் காரணமாக ரஷ்யாவில் உள்ள அனைத்து உணவகங்களையும் தற்காலிகமான மூடுவதாக மெக்டொனால்ஸ் அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து நாளுக்கும் 100,000 பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்து வந்த அமெரிக்கா, அதை ரத்து செய்வதாக சில மணி நேரம் முன்பு அறிவித்துள்ளது. இது ரஷ்ய பொருளாதாரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் … Read more

உக்ரைனுக்கு எதிராக போரிட பிரித்தானிய இராணியாரின் பதுகாப்புப் படை வீரர் தப்பியோட்டம்

பிரித்தானிய ராணியாருக்கான பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், தமது பொறுப்பில் இருந்து விலகி உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய துருப்புகளுடன் இணைந்து போரிட புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்ட்சர் கோட்டையில் பணியாற்றிவந்த 19 வயதேயான அந்த இராணுவ வீரர் தமது பெற்றோருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு கிழக்கு ஐரோப்பாவிற்கு ஒரு வழி டிக்கெட்டை பதிவு செய்துள்ளார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் சூழல் இருப்பதாக தெரிவித்துள்ள இராணுவ உயரதிகாரிகள், குறித்த இளைஞரை தொடர்பு கொண்டு, ரஷ்ய … Read more

இறுதி மூச்சுவரை… ஜெலென்ஸ்கி வீராவேச உரை: சிலிர்த்துப்போன பிரித்தானிய எம்.பிக்கள்

பிரித்தானிய நாடாளுமன்ற அவையில் காணொளி ஊடாக உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பேச்சுக்கு சிலிர்த்துப் போன எம்.பிக்கள் எழுந்து நின்று ஆதரவளித்துள்ளனர். உக்ரைனில் உள்ள தமது அலுவலகத்தில் இருந்து காணொளி ஊடாக உரையாற்றிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இந்த போரில் நாங்கள் தோற்றுவிடவோ கைவிடவோ மாட்டோம் எனவும், இறுதி மூச்சுவரையில் போரிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். 70 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிட்லருக்கு எதிராக பிரித்தானியா போராடியதை ஒப்பிட்டு பேசிய ஜெலென்ஸ்கி, அதே சூழலில் தற்போது ரஷ்யாவுடன் தாங்கள் போராடி வருவதாக … Read more

பிரித்தானியாவில் கழிவறை ஒன்றில் விளாடிமிர் புடினின் புகைப்படம்: தெரிவித்த காரணம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரித்தானியாவில் உள்ள மதுபான விடுதி ஒன்று விளாடிமிர் புடினின் புகைப்படத்தை தங்களின் கழிவறையில் நிறுவியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 13வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ஜனாதிபதி ஜெலென்ஸ்கி துணிவுடன் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு வருகிறார். ரஷ்யாவின் இந்த கடும்போக்கு நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், பல்வேறு தரப்பு மக்களும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிரித்தானியாவில் பெரும்பாலான பல்பொருள் … Read more

சினைப்பை நீர்க்கட்டிக்கு தீர்வு வேண்டுமா? கவலையை விடுங்க.. இதோ சில எளிய சித்த மருத்துவம்

பொதுவாக பல லட்சம் பெண்கள், `சினைப்பை நீர்க்கட்டி எனப்படும் பி.சி.ஓ.எஸ் (Polycystic Ovary Syndrome) பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள்.  குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வராதது, அதிக நாள்கள் ரத்தப்போக்கு இருப்பது, அளவுக்கதிகமான அல்லது மிகக்குறைவான அளவே ரத்தப்போக்கு, மாதவிடாயின்போது தாங்க முடியாத வலி ஏற்படுவது என்று பெண்களுக்கு மாதவிடாயில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இப்படியான சிக்கல்கள் வரும் போது நாம் மிகவும் அவதானத்துடன் இருப்பது அவசியமானது ஆகும். அந்தவகையில் சினைப்பை நீர்க்கட்டியை போக்க கூடிய சில சித்த … Read more

ரஷ்யாவுக்கு பெரும் நெருக்கடி… உக்ரைன் விவகாரத்தில் ஜோ பைடன் அதிரடி

உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவின் பொருளாதாரத்தை நெருக்கடிக்கு தள்ள, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இந்த விவகாரம் தொடர்பில் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது படையெடுப்பு தொடர்பாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பாரிய பொருளாதாரத் தடைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறித்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி … Read more

உக்ரைனை பிடிக்க வெளிநாட்டு கூலிப்படையை களமிறக்கும் ரஷ்யா! கசிந்த முக்கிய தகவல்

 உக்ரைனில் சண்டையிட சிரியாவின் கூலிப்படையை களமிறக்க ரஷ்யா முயற்சித்து வருவதாக அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைனின் முக்கியமான நகரங்களை கைப்பற்ற, ரஷய் அதிபர் புடின் வெளிநாட்டு போராளிகளை நாடியுள்ளார். ஏற்கனவே ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சிரியர்களின் எண்ணிக்கையை தங்களால் வழங்க முடியவில்லை என்று மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். இதனிடையே, சமீபத்திய நாட்களில் ரஷ்ய ராணுவம் சிரியாவில் இருந்து போராளிகளை ஆட்சேர்ப்பு செய்து வருவதாகவும், நகர்ப்புற போரில் அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால், கீவ்வை … Read more